08-10-2004, 06:35 AM
kavithan Wrote:<span style='font-size:30pt;line-height:100%'><b>அன்பு பரிசுகள்</b></span>
[size=18]
நீ
சொன்னாலும்....!
சொல்லா விட்டாலும்..!
நீ என் மேல் வைத்த அன்பு
எனக்கு தெரியுமடா.
உன் திட்டல் எல்லாம்
ஒரு கொட்டலும் அல்ல
அவை எல்லாம்
உன்னிடம் இருந்து
எனக்கு கிடைத்த
அன்பு பரிசுகள்...
ஆசையாய் நீ எனக்கு தந்த
அன்பு முத்தங்கள்...
என நான் நினைத்து இருக்கும் போது
ஒவ்வொரு நாள் என்ன...?
ஒவ்வொரு வினாடியும்
உனக்காக நான் வாழ..!
உனக்காக அன்பு செலுத்த...!
நான்வருவேன்.
காதலாகி கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவார் தம்மை.........
என சம்பந்தர் சொன்னது பொய்யாகுமா
ஆமாம்,
அதிசயம் தான்...
ஆனால்,
நீ என் மேல் வைத்திருக்கும் அன்புக்கு முன்
நான் விட்ட கண்ணீர் எல்லாம் எம்மட்டு.
நீண்ட நாள் இடை வெளியில்
நீ வரைந்த மடல் கண்டு
நீண்ட ஒரு கனவு என்மனதில் தோன்றியது.
நினைவுகள் எல்லாம் பறந்தோடி வந்தன.
நீண்ட ஒரு தூக்கம்...
உனக்காக ஒரு
நீண்ட மடல்...!
நிச்சயமாய் நீ
நலமாக இருப்பாய் என
என் மனது சொல்கிறது.
அப்படியே நீ இருக்க
இறைவனையும் பிரார்தித்து
என் மடலை நிறைவு செய்து
உன் அடுத்த மடலுக்காய்
என் காத்திருப்பு தொடர்கிறது
தொடர்கதியாய்.
(கற்பனை தொடர்)
<b>ஆஹா என்ன அருமையான கவிதை. தொடர்ந்து இப்படியான கவிதைகளை எழுத எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்படியாக சிந்தித்து கவிதை எழுதுவதற்கு யாராவது கற்றுக்கொடுக்கிறார்களா? உங்கள் கற்பனைகள் நிஜங்களாக மாற தினமும் ஓர் நிமிடம் இந்தச் சுட்டி இறைவனைப் பிரார்த்திப்பேன்.</b>
----------

