08-02-2004, 09:44 PM
<b>புதிர் எண் = 2</b>
<b>ஒரு அரசர் தனது அரண்மனை ஓவியர்களை அழைத்தார்.
அரசரை தத்ரூபமாக வரையும் ஓவியனுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.
இதில் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆகவேண்டும்.அந்த அரசருக்கு ஒரு கண் குருடு.
ஒரு ஓவியர் மிகவும் தத்ரூபமாக அரசரின் முகத்தை வரைந்தார். அரசரின் ஒரு கண் குருடாக இருப்பதையும் காட்டியிருந்தார்.
பார்ப்பவர்கள் அனைவருக்கும் அரசரையே நேரில் பார்ப்பதுபோல் அமைந்திருந்தது அந்த ஓவியம்.அடடா...இப்படி அழகான அரசருக்கு ஒரு கண் குருடாக இருக்கிறதே என்று பச்சாதாப் பட்டார்கள்.
ஓவியம் முடிந்ததும் அரசர் அங்கே வந்தார்.சற்றுநேரம் ஓவியத்தை உற்றுப் பார்த்தார்.பிறகு கோபமுடன் ஓவியனைப் பார்த்து, "எனக்கு ஒரு கண் குருடு என்பதை மக்களுக்கு பறை சாற்றுகிறாயா?உனக்கு என்ன தைரியம் இருந்தால் நீ இப்படி என்னை வரைந்திருப்பாய் " என்று சினந்தார்.அந்த ஓவியனுக்கு சிறைத் தண்டனையும் அளித்தார்.
இதையெல்லாம் கண்ட அடுத்த ஓவியர், அரசருக்கு இரண்டு கண்களும் தெரிவதுபோல் மாற்றி வரைந்தால், தனக்கு கட்டாயம் பரிசு கொடுப்பார் என்று நினைத்து, அரசருக்கு இரு கண்களும் ஒளிவீசுவதுபோல் ஓவியத்தை அமைத்தான்.
அரசர் வந்து அந்த ஓவியத்தையும் பார்த்தார். " ஓவியரே.....ஓவியத்தை தத்ரூபமாக வரையவேண்டும் என்பதுதான் நான் இட்டிருந்த கட்டளை. நீ என்மேல் பச்சாதாபப் பட்டு, இப்படி வரைந்து என்னை அவமானப் படுத்திவிட்டாய்" என்று கூறி அவனுக்கு கடுங்காவல் சிறைதண்டனை விதித்தார்.
"எப்படி வரைந்தாலும் ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடித்து விடுகிறாரே அரசர்" என்று குழம்பிப் போனார்கள் மற்ற ஓவியர்கள்.
ஒரு ஓவியன் புத்திசாலி....சிந்தனை செய்து, அரசரை ஓவியமாகத் தீட்டிக் கொண்டு வந்தான். அதைக் கண்ட அரசர் மிகவும் மகிழ்ந்துவிட்டார். அந்த ஓவியருக்கு, தான் அறிவித்திருந்த பரிசுத் தொகையைவிட இரண்டு பங்கு அதிகமான பொற்காசுகளையும், மேலும் உயர்ந்த பரிசுகளையும் கொடுத்து அனுப்பினார்.
நண்பர்களே நம்ம புத்திசாலி ஓவியருக்கு உதவுங்களேன், தண்டனை பெறாமல் பரிசு பெற்றது எப்படி என்று சொல்லுங்களேன்.</b>
<b>ஒரு அரசர் தனது அரண்மனை ஓவியர்களை அழைத்தார்.
அரசரை தத்ரூபமாக வரையும் ஓவியனுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.
இதில் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆகவேண்டும்.அந்த அரசருக்கு ஒரு கண் குருடு.
ஒரு ஓவியர் மிகவும் தத்ரூபமாக அரசரின் முகத்தை வரைந்தார். அரசரின் ஒரு கண் குருடாக இருப்பதையும் காட்டியிருந்தார்.
பார்ப்பவர்கள் அனைவருக்கும் அரசரையே நேரில் பார்ப்பதுபோல் அமைந்திருந்தது அந்த ஓவியம்.அடடா...இப்படி அழகான அரசருக்கு ஒரு கண் குருடாக இருக்கிறதே என்று பச்சாதாப் பட்டார்கள்.
ஓவியம் முடிந்ததும் அரசர் அங்கே வந்தார்.சற்றுநேரம் ஓவியத்தை உற்றுப் பார்த்தார்.பிறகு கோபமுடன் ஓவியனைப் பார்த்து, "எனக்கு ஒரு கண் குருடு என்பதை மக்களுக்கு பறை சாற்றுகிறாயா?உனக்கு என்ன தைரியம் இருந்தால் நீ இப்படி என்னை வரைந்திருப்பாய் " என்று சினந்தார்.அந்த ஓவியனுக்கு சிறைத் தண்டனையும் அளித்தார்.
இதையெல்லாம் கண்ட அடுத்த ஓவியர், அரசருக்கு இரண்டு கண்களும் தெரிவதுபோல் மாற்றி வரைந்தால், தனக்கு கட்டாயம் பரிசு கொடுப்பார் என்று நினைத்து, அரசருக்கு இரு கண்களும் ஒளிவீசுவதுபோல் ஓவியத்தை அமைத்தான்.
அரசர் வந்து அந்த ஓவியத்தையும் பார்த்தார். " ஓவியரே.....ஓவியத்தை தத்ரூபமாக வரையவேண்டும் என்பதுதான் நான் இட்டிருந்த கட்டளை. நீ என்மேல் பச்சாதாபப் பட்டு, இப்படி வரைந்து என்னை அவமானப் படுத்திவிட்டாய்" என்று கூறி அவனுக்கு கடுங்காவல் சிறைதண்டனை விதித்தார்.
"எப்படி வரைந்தாலும் ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடித்து விடுகிறாரே அரசர்" என்று குழம்பிப் போனார்கள் மற்ற ஓவியர்கள்.
ஒரு ஓவியன் புத்திசாலி....சிந்தனை செய்து, அரசரை ஓவியமாகத் தீட்டிக் கொண்டு வந்தான். அதைக் கண்ட அரசர் மிகவும் மகிழ்ந்துவிட்டார். அந்த ஓவியருக்கு, தான் அறிவித்திருந்த பரிசுத் தொகையைவிட இரண்டு பங்கு அதிகமான பொற்காசுகளையும், மேலும் உயர்ந்த பரிசுகளையும் கொடுத்து அனுப்பினார்.
நண்பர்களே நம்ம புத்திசாலி ஓவியருக்கு உதவுங்களேன், தண்டனை பெறாமல் பரிசு பெற்றது எப்படி என்று சொல்லுங்களேன்.</b>
<b>
</b>
</b>

