08-02-2004, 12:47 AM
<span style='font-size:30pt;line-height:100%'><b>கொழும்பு, ஆக. 2: ஆசியக் கோப்பையை இலங்கை மூன்றாவது முறையாகக் கைப்பற்றியது. </b></span>
<img src='http://www.dinamani.com/Images/Aug04/02spt6.jpg' border='0' alt='user posted image'>
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்தது இலங்கை.
229 ரன்களைச் சேர்த்தால் வெற்றி எனும் எளிதான இலக்குடன் ஆடிய இந்தியா, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களையே சேர்க்க முடிந்தது.
அணியிலேயே அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 74 ரன்களைக் குவித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
முன்னதாக, இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களைச் சேர்த்தது.
பிரேமதாஸô ஸ்டேடியத்தில் பிற்பகலில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் "டாஸ்' வென்ற இலங்கை முதலில் பேட் செய்வதாக அறிவித்தது.
எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் முன்னிலை வீச்சாளர்கள் எல்லாம் சோடை போகவே, சச்சினும், சேவாக்கும் இலங்கை பேட்ஸ்மேன்களை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சச்சின் 10 ஓவர்கள் பந்து வீசி 40 ரன்களைக் கொடுத்து ஜயவர்தனே, தில்ஷான் ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தியாவுக்கு சிறப்பு சேர்த்தார்.
பதான் 33 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சேவாக் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினாலும் 10 ஓவர்கள் முழுமையாக வீசி 32 ரன்களை மட்டும் கொடுத்து இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு சோதனை அளித்தார்.
ஜயசூர்யா 15: முன்னதாக, அணியின் தொடக்க வீரர்கள் (குணவர்தனே, ஜயசூர்யா) இருவரும் 31 ரன்களுக்குள் சுருண்டனர்.
குறிப்பாக, இதற்கு முந்தைய ஆட்டங்களில் சதம் அடித்து சிறப்புப் பெற்ற ஜயசூர்யா 15 ரன்களைச் சேர்த்திருந்த போது பதான் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது.
அட்டப்பட்டு, ஜயவர்தனே அரை சதம்: அதன் பின்னர் உள்ளேவந்த காப்டன் அட்டப்பட்டு, சங்கக்கார ஜோடி அபாரமாக ஆடி, தொடக்கச் சரிவை ஈடுகட்டியது.
இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 116 ரன்களைக் குவித்து இந்தியப் பந்துவீச்சாளர்களை சோதித்தது.
அட்டப்பட்டு 65 ரன்களைக் குவித்திருந்தபோது எதிர்பாராவிதமாக ரன் அவுட் ஆனார்.
அதுவரையிலான ஆட்டத்துக்கு அவர் ஆட்டமிழந்தது திருப்பமாக அமைந்தது. 87 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 பந்துகளை எல்லைக் கோட்டுக்கு விரட்டினார்.
அவருடன் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்திய சங்கக்கார 6 பவுண்டரி உள்பட 53 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். சேவாக் வீசிய பந்தில் கிளீன் போல்டு ஆனார் அவர்.
ஸ்கோர் போர்டு
இலங்கை
குணவர்தனே (சி) கங்குலி (பி) நெஹ்ரா 8
ஜயசூர்யா எல்பிடபிள்யூ (பி) பதான் 15
அட்டப்பட்டு ரன் அவுட் 65
சங்கக்கரா (பி) சேவாக் 53
ஜயவர்தனே (சி) யுவ்ராஜ் (பி) சச்சின் 0
தில்ஷான் (ஸ்டம்புடு) திராவிட்
(பி) சச்சின் 22
சந்தனா எல்பிடபிள்யூ (பி) ஹர்பஜன் 8
மஹ்ரூப் ரன் அவுட் 9
வாஸ் (சி) யுவ்ராஜ் (பி) பதான் 6
ஜோய்ஸô நாட் அவுட் 6
முரளீதரன் நாட் அவுட் 4
உபரி 32
மொத்தம் (50 ஓவர்களில்
9 விக்கெட் இழப்புக்கு) 228
விக்கெட் வீழ்ச்சி: 1-28, 2-31, 3-147,
4-150, 5-174, 6-194, 7-202,
8-213, 9-219.
பந்துவீச்சு:
பதான் 7-0-33-2
நெஹ்ரா 6-0-22-1
ஜாகீர் 7-0-35-0
ஹர்பஜன் 10-0-48-1
சேவாக் 10-2-32-1
சச்சின் 10-0-40-2
நன்றி
தினமணி
<img src='http://www.dinamani.com/Images/Aug04/02spt6.jpg' border='0' alt='user posted image'>
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்தது இலங்கை.
229 ரன்களைச் சேர்த்தால் வெற்றி எனும் எளிதான இலக்குடன் ஆடிய இந்தியா, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களையே சேர்க்க முடிந்தது.
அணியிலேயே அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 74 ரன்களைக் குவித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
முன்னதாக, இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களைச் சேர்த்தது.
பிரேமதாஸô ஸ்டேடியத்தில் பிற்பகலில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் "டாஸ்' வென்ற இலங்கை முதலில் பேட் செய்வதாக அறிவித்தது.
எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் முன்னிலை வீச்சாளர்கள் எல்லாம் சோடை போகவே, சச்சினும், சேவாக்கும் இலங்கை பேட்ஸ்மேன்களை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சச்சின் 10 ஓவர்கள் பந்து வீசி 40 ரன்களைக் கொடுத்து ஜயவர்தனே, தில்ஷான் ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தியாவுக்கு சிறப்பு சேர்த்தார்.
பதான் 33 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சேவாக் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினாலும் 10 ஓவர்கள் முழுமையாக வீசி 32 ரன்களை மட்டும் கொடுத்து இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு சோதனை அளித்தார்.
ஜயசூர்யா 15: முன்னதாக, அணியின் தொடக்க வீரர்கள் (குணவர்தனே, ஜயசூர்யா) இருவரும் 31 ரன்களுக்குள் சுருண்டனர்.
குறிப்பாக, இதற்கு முந்தைய ஆட்டங்களில் சதம் அடித்து சிறப்புப் பெற்ற ஜயசூர்யா 15 ரன்களைச் சேர்த்திருந்த போது பதான் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது.
அட்டப்பட்டு, ஜயவர்தனே அரை சதம்: அதன் பின்னர் உள்ளேவந்த காப்டன் அட்டப்பட்டு, சங்கக்கார ஜோடி அபாரமாக ஆடி, தொடக்கச் சரிவை ஈடுகட்டியது.
இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 116 ரன்களைக் குவித்து இந்தியப் பந்துவீச்சாளர்களை சோதித்தது.
அட்டப்பட்டு 65 ரன்களைக் குவித்திருந்தபோது எதிர்பாராவிதமாக ரன் அவுட் ஆனார்.
அதுவரையிலான ஆட்டத்துக்கு அவர் ஆட்டமிழந்தது திருப்பமாக அமைந்தது. 87 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 பந்துகளை எல்லைக் கோட்டுக்கு விரட்டினார்.
அவருடன் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்திய சங்கக்கார 6 பவுண்டரி உள்பட 53 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். சேவாக் வீசிய பந்தில் கிளீன் போல்டு ஆனார் அவர்.
ஸ்கோர் போர்டு
இலங்கை
குணவர்தனே (சி) கங்குலி (பி) நெஹ்ரா 8
ஜயசூர்யா எல்பிடபிள்யூ (பி) பதான் 15
அட்டப்பட்டு ரன் அவுட் 65
சங்கக்கரா (பி) சேவாக் 53
ஜயவர்தனே (சி) யுவ்ராஜ் (பி) சச்சின் 0
தில்ஷான் (ஸ்டம்புடு) திராவிட்
(பி) சச்சின் 22
சந்தனா எல்பிடபிள்யூ (பி) ஹர்பஜன் 8
மஹ்ரூப் ரன் அவுட் 9
வாஸ் (சி) யுவ்ராஜ் (பி) பதான் 6
ஜோய்ஸô நாட் அவுட் 6
முரளீதரன் நாட் அவுட் 4
உபரி 32
மொத்தம் (50 ஓவர்களில்
9 விக்கெட் இழப்புக்கு) 228
விக்கெட் வீழ்ச்சி: 1-28, 2-31, 3-147,
4-150, 5-174, 6-194, 7-202,
8-213, 9-219.
பந்துவீச்சு:
பதான் 7-0-33-2
நெஹ்ரா 6-0-22-1
ஜாகீர் 7-0-35-0
ஹர்பஜன் 10-0-48-1
சேவாக் 10-2-32-1
சச்சின் 10-0-40-2
நன்றி
தினமணி
[b][size=18]

