07-16-2003, 09:12 PM
ஆனால் இது எனக்குள் நானே வெட்கப்பட்டுக்கொள்ளும் அனுபவப் பகிர்வுதான்.. தமிழர் கடைகளை அவர்கள் சூறையாடி, தீக்கிரையாக்கும்போது.. அதனுள்ளிருந்த 'பைலற்" குமிழ்முனைப் பேனாக்கள்.. இனிப்புகள் போன்றவற்றை எடுத்து சனங்களை நோக்கி வீசினார்கள்.. அதை சனங்களும் போட்டி போட்டுக்கொண்டு பொறுக்கினார்கள்.. நானும் என்னை அடையாளம் காட்டக்கூடாதென்பதற்காக அவர்களில் ஒருவனாக சிலவற்றை பொறுக்கிக் கொண்டேன்.. இப்படியான மனக் குறுகுறுப்புகளும் இல்லாமலில்லை.
.

