07-16-2003, 11:38 AM
ஈராக் சதாமுக்கோ, ஓசாமாவுக்கோ வக்காலத்து வாங்க வரவில்லை. இவர்களை வளர்த்து விட்டவர்கள் யார்? ஈரானின் மூக்கை நுழைக்க எண்ணி ஈராக்கையும், ரஸ்சியனுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் துணை நின்றதற்காக ஓசாமவையும் ஊட்டி வளர்த்தது அமெரிக்காதான். அமெரிக்க வரலாற்றில் ஒரு அரசியல் அந்தஸ்த்தற்ற ஒரு தனி நபருக்கு வெள்ளை மாளிகையில் செங்கம்பள வரவேற்புக் கொடுத்ததென்றால் அது ஒசாமா பின் லாடனுக்கு மட்டும் தான். ஆப்கானிஸ்தானியர்கள் மதத்தின் பால் உள்ள வெறியினால் மூடநம்பிக்கையினால் பெண்களை அடிமைப்படுத்தி அவலவாழ்க்கையைக் கொடுக்கின்றார்கள். பெண்கள் தமது கலாச்சாரததினைப் பேணவே தம்மை முற்றும் முழுதுமாய் ஆடைக்குள் மறைத்துக் கொண்டு வாழ்கின்றார்கள். அமெரிக்க மாதுக்களைப் போன்று அறைகுறை ஆடை அவர்கள் கலாச்சார, நாட்டு சீதோஷன நிலைக்கு ஒவ்வாது. இவர்களைத் திருத்த அந்த நாடுகளுக்குள் மூக்கை நுழைக்க அமெரிக்கனுக்கு என்ன தகுதியுள்ளது? அமெரிக்கன் யப்பானில் அணுகுண்டு வீசி அழித்தது. வியட்நாமில் அப்பாவி மக்களை கொன்று குவித்ததுமில்லாமல், வியட்நாமியச் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொம்மைகளுடன் விஷம் கலந்த இனிப்பு வகைகளையும் வீசி குஞ்சு குருமன்களைக் கொன்றது மறந்துவிட்டதா? இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது மற்ற நாடுகளின் தவறுகளைத் திருத்த. முதலில் தனது முகத்திலும் கையிலும உள்ள இரத்தக் கரையைக் கழுவிவிட்டு மற்றவனின் முதுகின் அழுக்கைப் பற்றிப் பேசட்டும். தனது பொருளாதார, பிராந்திய இராணுவ நலன்களுக்காக மற்றவனின் நாட்டை அடாவடித் தனமாக ஆள நினைப்பது காட்டு மிராண்டித் தனம். அமெரிக்கன் குண்டு வீசி அத்தனை பொருளாதார வளங்களையும் சுக்கு நூறாக்கி விட்டான். அவர்கள் தமது நாட்டின் சொத்துக்களை அபகரிக்கின்றார்கள். இவன் யார் அதைக் கேட்க? உலகினிலே உள்ள பழமையான பொருட்களைக் மனித நாகரிகத்தைக் காட்டி நின்ற அருங்காட்சி அகத்தைக் கொள்ளையடிக்க வழிவகுத்தது யார்? சதாம் என்றவன் ஆளும் போது இப்படி ஏதாவது நடந்ததைக் கேள்விப்பட்டோமா? சதாம் அழித்த அப்பாவிமக்களுக்காய் அனுதாபப்படுகின்றேன். அது அவனது பதவி இன வெறி. அது சரி அந்த மக்கள் என்ன அமெரிக்காவின் கோதுமை வரும் வரை வயிற்றைக் கட்டிக் கொண்டா இருப்பது? அதுவும் எத்தனை வருடத்துப் பழையதோ தெரியாது. உலகம் முழவதும் ஒரு சில அடிவருடி நாடுகளைத்தவிர ஐநா கூட அமெரிக்கனின் யுத்த வெறிக்கு எதிர்ப்பாய் இருந்தும் தனது உலக பொலிஸ்காரன் பதவிக்காய் அப்பாவி மக்களை அடித்து ஒழித்து சண்டித்தனம் பண்ணிக் கொண்டல்லவா இருக்கின்றான். ஜனநாயகம் பேசி மக்களை ஆயுதமுனையில் அடிமைப்படுத்தவும் அழிக்கவும் துணை நிற்கின்றான்.
சதாமும் ஓசாமாவும் ஆப்கனிஸ்தான் ஆளும் வர்க்கமும் செய்த தவறுகளை நியாயப்படுத்த வரவில்லை. எனது கேள்வி இவர்களைத் திருத்த இவனுக்கு என்ன அருகதை என்பது தான். உக்கிய எலும்புத்துண்டாயினும் உண்மையின் பக்கம் இருந்து கிடைப்பதாயின் தாழ்மையுடன் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அதற்காக பொய்மையின் பக்கம் துணை நிற்கவோ நூடூல்ஸ் வாங்கி சாப்பிடவோ ஒருக்காலும் சம்மதியோம். 40,000 அமெரிக்கனின் கணக்கு மற்றதெல்லாம் அவனின் கல்குலேடருக்குள்ளே வராத எண்ணிக்கையோ?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்.
சதாமும் ஓசாமாவும் ஆப்கனிஸ்தான் ஆளும் வர்க்கமும் செய்த தவறுகளை நியாயப்படுத்த வரவில்லை. எனது கேள்வி இவர்களைத் திருத்த இவனுக்கு என்ன அருகதை என்பது தான். உக்கிய எலும்புத்துண்டாயினும் உண்மையின் பக்கம் இருந்து கிடைப்பதாயின் தாழ்மையுடன் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அதற்காக பொய்மையின் பக்கம் துணை நிற்கவோ நூடூல்ஸ் வாங்கி சாப்பிடவோ ஒருக்காலும் சம்மதியோம். 40,000 அமெரிக்கனின் கணக்கு மற்றதெல்லாம் அவனின் கல்குலேடருக்குள்ளே வராத எண்ணிக்கையோ?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்.
seelan

