07-27-2004, 03:40 PM
Quote:சமூகம் சொல்லிச்சோ சொல்லல்லையோ நீங்களே உங்கள் திறமைகளுக்கு சமூகத்தின் பெயரால் தடை போடுவதுதான் உண்மை... சமூகம் என்றால் என்ன.... நீங்களும் உங்களைப் போன்றவர்களும் தான் சமூகம்...அதென்ன பூதமா..தடை போடவும் பிடித்து விழுங்கவும்....!
பெண்ணின் பெயரால் உங்கள் மனக்கிடக்கைகளை கொட்டிய கவிதை நன்று...!
_________________
பூதமும் இல்லை பேயும் இல்லை அதனைவிட கொடிய அணுஆயுதம் போன்றது...!
நாமும் நம்மைப்போன்றவர்களும் தான் சமூகம் இல்லை என்று சொல்லவரவில்லை ஆனால் மற்றவர்களில் பிழைகண்டுபிடிக்கும் சமூகம்.. இந்த நிலை தனது வீட்டில் வரும் என்று நினைப்பதில்லை... இந்த சமூகம் நாம் தான்.. என்று சில பெற்றோர் நினைப்பதில்லை.. நீ அது செய்தால் இது நடக்கும்.. இப்படி பேசுவார்கள் என்று சொல்லுற பெற்றோர்கள் இருக்கிறார்கள் இன்னமும். இல்லை நான் இந்த சமூகத்திற்கு பயப்பட போறதில்லை என்டு பெண் வெளிக்கிடலாம்... ஆனால் எப்படி என்டாலும் பெற்றோருக்கு பணியத்தானே வேண்டும்.... பெற்றோரது மனம் கோணும் படியாக எப்படி நடந்து கொள்வது. இன்னும் பழைய பஞ்சாங்கமாக இருக்கிற பெற்றோருக்கு எதைச் சொன்ாலும் புரிகிறதில்லை... இதே வேளை இன்னொரு விடயத்தை பெண் மனதில் வைக்க வேண்டி இருக்கிறது.. பெற்றோர் சொல்லை எதிர்த்து நான் சாதிப்பேன் என்று வெளிக்கிட்டு.... பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வந்துவிட்டால்.. என்ன செய்யமுடியும்... பெற்றோரின் முகத்தில் முழிக்க முடியுமா யாவும் நாம் சினைக்கிற மாதிரி நடப்பதில்லையே... எதிர்த்து வெளிக்கிடும் போது பல வழிகளில் யோசிக்க வேண்டி இருக்கிதே......!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

