07-27-2004, 10:55 AM
நாங்கள் புலத்தில் தமிழை வளர்ப்போம்.. கட்டி காப்போம் என்பதெல்லாம் உண்மை தான்... எங்கள் குழந்தைகள் என்ன செய்ய போகின்றார்கள் என்பது தான் கேள்வி.. இந்த தலைமுறை கிட்ட தட்ட எழுத மறந்திருக்கிறது. இனி அடுத்த தலைமுறை...????? இங்கெ மிக முக்கிய மான ஒரு சிக்கல்.. புலத்தில் குழந்தைகள் எந்த மொழியில் சிந்திக்கின்றார்கள் என்பதே.. (யாராவது ஆர்வம் இருந்தால் உங்கள் குழந்தைகளிடம் கேட்டு பாருங்கள்.. எந்த மொழியில் அவர்கள் யோசிக்கிறார்கள்.. என்று)
ஒருவன் தான் சிந்திக்கும் மொழியிலேயே அதிக ஆளுமையை கைக்கொள்கின்றான். சிந்திக்கின்ற மொழியை, பிறந்தது முதல் அவன் அனுபவிக்கின்ற சூழல் தான் தீர்மானிக்கின்றது. ஒரு வேளை உங்கள் குழந்தைகள் டொச்சிலோ ஆங்கிலத்திலேயோ சிந்தித்து உங்களுடன் தமிழில் உரையாடலாம். அதாவது உங்களுடன் மொழிபெயர்க்கலாம். தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் உரையாடுவது எப்படி நெருடலாயிருக்குமோ அப்படியே இன்னொரு மொழியில் சிந்தித்து தமிழில் உரையாடுவதையும் சிரமமாக உணர்ந்து நேரடியாக தாம் சிந்திக்கும் மொழியிலேயே உரையாடுவதை புலத்தின் குழந்தைகள் விரும்பக் கூடும். இதனைக்கொண்டு அவர்கள் தமிழை புறக்கணிக்கிறார்கள்.. மறந்து விட்டார்கள்.. என்ற குற்றச் சாட்டுக்களை குழந்தைகள் மேல் செலுத்த முடியாது. உண்மையில் அவர்கள் ஏதுமறியாத அப்பாவிகள்..
பொதுவாக தவறுகள் நிகழும் பொழுது எங்காவது பிழை இருக்கும்.. என்னைக்கேட்டால்.. எங்குமே பிழை நிகழாமமல் இப்படியான ஒரு தவறு நிகழப்போகின்றதோ என எண்ண தோன்றுகிறது. பெற்றொர்களிலும் சரி.. பிள்ளைகளிலும் சரி.. யாரிலுமே பிழை இருக்கப் போவதில்லை.. ஆனால்.. எதிர்காலத்தில்.. அதாவது உங்களின் காலம் புலத்தில் முடிந்த பிறகு (ஒரு வேளை உங்கள் பேரக் குழந்தைக்கும் நீங்கள் தமிழ் சொல்லி கொடுக்க கூடும்..) பிறக்க போகின்ற தமிழ் குழந்தைகள் தமிழ் மறந்தவர்களாகவே இருக்க போகிறார்களோ...?
ஒரு சில நம்பிக்கைகளும் இல்லாமல் இல்லை.. உதாரணத்திற்கு இது என் இன மொழி.. இது என் தாய் மொழி என்ற உண்மைகளுக்கு அப்பால்.. இந்த மொழியின் தேவை என்ன? என்று அவர்கள் சிந்திக்க கூடும்.. தாயகத்தில் நாங்கள் தமிழ் படித்ததை நினைத்த பாருங்கள்.. பாடசாலையில் கல்வி தமிழில் இருந்தது.. பாPட்சைக்கு தமிழில் எழுத வேண்டியிருந்தது.. இப்படியான தேவைகளினூடு நாங்கள் தமிழ் படித்தோம்.. அவ்வாறான தேவைகளை புலத்தில் உண்டாக்கினால்.. தமிழ் படித்தால் பல்கலைக்கழகம் செல்வதற்கான அனுமதி இலகு.. இவ்வாறான தேவைகளை உண்டாக்கினால்.. அவர்களும் ஒரு வேளை தமிழ் படிக்க கூடும்..
ஒருவன் தான் சிந்திக்கும் மொழியிலேயே அதிக ஆளுமையை கைக்கொள்கின்றான். சிந்திக்கின்ற மொழியை, பிறந்தது முதல் அவன் அனுபவிக்கின்ற சூழல் தான் தீர்மானிக்கின்றது. ஒரு வேளை உங்கள் குழந்தைகள் டொச்சிலோ ஆங்கிலத்திலேயோ சிந்தித்து உங்களுடன் தமிழில் உரையாடலாம். அதாவது உங்களுடன் மொழிபெயர்க்கலாம். தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் உரையாடுவது எப்படி நெருடலாயிருக்குமோ அப்படியே இன்னொரு மொழியில் சிந்தித்து தமிழில் உரையாடுவதையும் சிரமமாக உணர்ந்து நேரடியாக தாம் சிந்திக்கும் மொழியிலேயே உரையாடுவதை புலத்தின் குழந்தைகள் விரும்பக் கூடும். இதனைக்கொண்டு அவர்கள் தமிழை புறக்கணிக்கிறார்கள்.. மறந்து விட்டார்கள்.. என்ற குற்றச் சாட்டுக்களை குழந்தைகள் மேல் செலுத்த முடியாது. உண்மையில் அவர்கள் ஏதுமறியாத அப்பாவிகள்..
பொதுவாக தவறுகள் நிகழும் பொழுது எங்காவது பிழை இருக்கும்.. என்னைக்கேட்டால்.. எங்குமே பிழை நிகழாமமல் இப்படியான ஒரு தவறு நிகழப்போகின்றதோ என எண்ண தோன்றுகிறது. பெற்றொர்களிலும் சரி.. பிள்ளைகளிலும் சரி.. யாரிலுமே பிழை இருக்கப் போவதில்லை.. ஆனால்.. எதிர்காலத்தில்.. அதாவது உங்களின் காலம் புலத்தில் முடிந்த பிறகு (ஒரு வேளை உங்கள் பேரக் குழந்தைக்கும் நீங்கள் தமிழ் சொல்லி கொடுக்க கூடும்..) பிறக்க போகின்ற தமிழ் குழந்தைகள் தமிழ் மறந்தவர்களாகவே இருக்க போகிறார்களோ...?
ஒரு சில நம்பிக்கைகளும் இல்லாமல் இல்லை.. உதாரணத்திற்கு இது என் இன மொழி.. இது என் தாய் மொழி என்ற உண்மைகளுக்கு அப்பால்.. இந்த மொழியின் தேவை என்ன? என்று அவர்கள் சிந்திக்க கூடும்.. தாயகத்தில் நாங்கள் தமிழ் படித்ததை நினைத்த பாருங்கள்.. பாடசாலையில் கல்வி தமிழில் இருந்தது.. பாPட்சைக்கு தமிழில் எழுத வேண்டியிருந்தது.. இப்படியான தேவைகளினூடு நாங்கள் தமிழ் படித்தோம்.. அவ்வாறான தேவைகளை புலத்தில் உண்டாக்கினால்.. தமிழ் படித்தால் பல்கலைக்கழகம் செல்வதற்கான அனுமதி இலகு.. இவ்வாறான தேவைகளை உண்டாக்கினால்.. அவர்களும் ஒரு வேளை தமிழ் படிக்க கூடும்..
..

