07-26-2004, 01:27 PM
மேலேயுள்ள கருத்துகள் உண்மைகளின் ஒரு பகுதியை வெளிக் கொணர்கின்றன.
இதற்கு மேலாக இன்னும் இருக்கின்றன..............................
அவற்றை ஏனைய கள நண்பர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
நான் பார்க்கும் தமிழ் குழந்தைகளில் பல குழந்தைகள் தமிழ் ஆர்வலர்களது அல்லது எந்த வடிவிலாவது தமிழை வளர்க்க வேண்டுமென்ற ஆதங்கமுள்ளவர்களது குழந்தைகளாக இருக்கிறார்கள்.
காரணம், நான் போகும், பழகும் வீடுகள் இப்படியானவர்களது வீடுகளாகவே இருக்கின்றன.
இவர்களது குழந்தைகள் பெற்றோரோடு மாத்திரமே தமிழில் பேசுகிறார்கள்.
தமது சகோதர-சகோதரிகளோடோ அல்லது தமிழ் சிநேகிதர்களோடோ பேசும் போது சுவிசில் உள்ள (ஜெர்மன்-பிரென்ஞ்-இத்தாலி) மொழிகளிலேதான் பேசுகிறார்கள். இது சர்வ சாதாரணமாகக் காணக் கூடியதாக இருக்கிறது.
பெற்றோரின் எதிர்பார்ப்புகள் கூட இப்போது மாறி விட்டது. முன்னர் பெற்றோர்கள் குழந்தைகள் தமிழ் பேச வேண்டுமென்பதற்காக புலம் பெயர் வானோலிகளை கேட்க பண்ணியதையும் அதில் வரும் நிகழ்ச்சிகளில் பங்கு பற்ற ஊக்கமளித்ததையும் நானறிவேன்.
இன்று வானோலிகளுக்குள் குழந்தைகள வர விடக் கூடாதென்பதில் பல பெற்றேர்கள் முனைப்பாக இருக்கிறார்கள். அதற்கான காரணம் தொலைபேசி வழி வரும் ஒரு சிலர் அந்த வானோலிகளுக்குள் வந்து பேசும் வார்த்தைகள் பெரியவர்களாலேயே ஜீரணிக்க முடியாத வார்த்தைகளாகவும் பேச்சுகளாகவுமே இருக்கின்றன.
வானோலி-தொலைக் காட்சி போன்றவற்றால் வாசிப்பு முறை கூட அருகிவிட்டது.
அடுத்து எம்மவரது அடிமன ஆசைகள் ,
"எனது குழந்தை நன்றாக படித்து டொக்டராகவோ இன்ஜினியராகவோ வரவேண்டுமென்பதே........................" இப்போது அது கம்பியுூட்டர் புரோகிரமராக மாறியிருக்கிறது.
குழந்தைகள் இருப்பவர்களுக்கு என்னை விடக் கூடுதலாக தெரியும்.
பேசுவதற்கு இது நல்லதொரு விடயம்.
தொடர்ந்து எழுதுங்கள்.....................
இதற்கு மேலாக இன்னும் இருக்கின்றன..............................
அவற்றை ஏனைய கள நண்பர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
நான் பார்க்கும் தமிழ் குழந்தைகளில் பல குழந்தைகள் தமிழ் ஆர்வலர்களது அல்லது எந்த வடிவிலாவது தமிழை வளர்க்க வேண்டுமென்ற ஆதங்கமுள்ளவர்களது குழந்தைகளாக இருக்கிறார்கள்.
காரணம், நான் போகும், பழகும் வீடுகள் இப்படியானவர்களது வீடுகளாகவே இருக்கின்றன.
இவர்களது குழந்தைகள் பெற்றோரோடு மாத்திரமே தமிழில் பேசுகிறார்கள்.
தமது சகோதர-சகோதரிகளோடோ அல்லது தமிழ் சிநேகிதர்களோடோ பேசும் போது சுவிசில் உள்ள (ஜெர்மன்-பிரென்ஞ்-இத்தாலி) மொழிகளிலேதான் பேசுகிறார்கள். இது சர்வ சாதாரணமாகக் காணக் கூடியதாக இருக்கிறது.
பெற்றோரின் எதிர்பார்ப்புகள் கூட இப்போது மாறி விட்டது. முன்னர் பெற்றோர்கள் குழந்தைகள் தமிழ் பேச வேண்டுமென்பதற்காக புலம் பெயர் வானோலிகளை கேட்க பண்ணியதையும் அதில் வரும் நிகழ்ச்சிகளில் பங்கு பற்ற ஊக்கமளித்ததையும் நானறிவேன்.
இன்று வானோலிகளுக்குள் குழந்தைகள வர விடக் கூடாதென்பதில் பல பெற்றேர்கள் முனைப்பாக இருக்கிறார்கள். அதற்கான காரணம் தொலைபேசி வழி வரும் ஒரு சிலர் அந்த வானோலிகளுக்குள் வந்து பேசும் வார்த்தைகள் பெரியவர்களாலேயே ஜீரணிக்க முடியாத வார்த்தைகளாகவும் பேச்சுகளாகவுமே இருக்கின்றன.
வானோலி-தொலைக் காட்சி போன்றவற்றால் வாசிப்பு முறை கூட அருகிவிட்டது.
அடுத்து எம்மவரது அடிமன ஆசைகள் ,
"எனது குழந்தை நன்றாக படித்து டொக்டராகவோ இன்ஜினியராகவோ வரவேண்டுமென்பதே........................" இப்போது அது கம்பியுூட்டர் புரோகிரமராக மாறியிருக்கிறது.
குழந்தைகள் இருப்பவர்களுக்கு என்னை விடக் கூடுதலாக தெரியும்.
பேசுவதற்கு இது நல்லதொரு விடயம்.
தொடர்ந்து எழுதுங்கள்.....................

