07-25-2004, 10:03 AM
<b>நண்பர்களே! இங்கே நான் சில புதிர்களை தொடர்ந்து கொடுக்க இருக்கிறேன். நான் கொடுக்கும் புதிர்கள் இங்கே ஏற்கனவே வந்திருந்தால் தெரியப்படுத்தவும், நான் அப்புறப்படுத்துகிறேன், இல்லை புதியவர்கள் பதில் சொல்லட்டும் என்று விட்டாலும் நல்லதே.</b>
<b>புதிர் எண்: 1</b>
ஒரு ஆப்பிள் தோட்டக்காரர் தன்னுடைய மகனுடன் சேர்ந்து பழுத்த ஆப்பிள்களை பறித்தார். மொத்தம் 1000 ஆப்பிள்கள் கிடைத்தது, ஆனால் அவர்களிடம் 10 கூடைகள் மட்டுமே இருந்தன. விரைவில் ஆப்பிள்கள் வாங்க ஆட்கள் வருவார்கள். 1 முதல் 1000 வரை ஆப்பிள்கள் கேட்டு வாங்குவார்கள், அப்படி கேட்கும் போது அவைகளை எண்ணிக் கொண்டு கொடுக்க நேரம் கிடையாது. உடனே எடுத்துக் கொடுக்க அங்கே இருந்த 10 கூடைகளை மட்டுமே உபயோகித்து எந்த இலகத்தில் (1 முதல் 1000 வரை) ஆப்பிள்கள் கேட்டாலும் உடனே கொடுக்க வேண்டும். தன்னுடைய புத்திசாலி மகனை அழைத்து 10 கூடைகள் மட்டுமே உபயோகித்து கேட்ட எண்களில் ஆப்பிள்களை உடனே கொடுக்க சொன்னார். அவரது மகனும் அங்கே இருந்த கூடைகளில் ஆயிரத்தையும் பிரித்து போட்டு, எந்த எண்ணில் கேட்டாலும் தன்னால் உடனே கொடுக்க முடியும் என்றார்.
நண்பர்களே! நம்ம தோழன் எந்த எண்ணிக்கையில் 10 கூடையில் ஆப்பிள்களை போட்டு வைத்தார்.
<b>புதிர் எண்: 1</b>
ஒரு ஆப்பிள் தோட்டக்காரர் தன்னுடைய மகனுடன் சேர்ந்து பழுத்த ஆப்பிள்களை பறித்தார். மொத்தம் 1000 ஆப்பிள்கள் கிடைத்தது, ஆனால் அவர்களிடம் 10 கூடைகள் மட்டுமே இருந்தன. விரைவில் ஆப்பிள்கள் வாங்க ஆட்கள் வருவார்கள். 1 முதல் 1000 வரை ஆப்பிள்கள் கேட்டு வாங்குவார்கள், அப்படி கேட்கும் போது அவைகளை எண்ணிக் கொண்டு கொடுக்க நேரம் கிடையாது. உடனே எடுத்துக் கொடுக்க அங்கே இருந்த 10 கூடைகளை மட்டுமே உபயோகித்து எந்த இலகத்தில் (1 முதல் 1000 வரை) ஆப்பிள்கள் கேட்டாலும் உடனே கொடுக்க வேண்டும். தன்னுடைய புத்திசாலி மகனை அழைத்து 10 கூடைகள் மட்டுமே உபயோகித்து கேட்ட எண்களில் ஆப்பிள்களை உடனே கொடுக்க சொன்னார். அவரது மகனும் அங்கே இருந்த கூடைகளில் ஆயிரத்தையும் பிரித்து போட்டு, எந்த எண்ணில் கேட்டாலும் தன்னால் உடனே கொடுக்க முடியும் என்றார்.
நண்பர்களே! நம்ம தோழன் எந்த எண்ணிக்கையில் 10 கூடையில் ஆப்பிள்களை போட்டு வைத்தார்.
<b>
</b>
</b>

