07-25-2004, 07:43 AM
இன்று புலத்தில் எல்லோ பெற்றோர்களுக்குமே தம் பிள்ளை தமிழ் படிக்க வேணும்.. மேடையில் தமிழில் கவிதை சொல்ல வேணும். நாடகம் நடிக்க வேணும்.. என்ற ஆசை ஓரளவுக்காவது இருக்கிறது. தமது இறுக்கமான வாழ்க்கை முறைக்குள்ளும், அவற்றுக்கும் நேரம் செலவழிக்கிறார்கள்.. ஆனால்.. இப்போதைய குழந்தைகள் அடுத்த தலைமுறையில் இதேமாதிரியான ஆர்வத்துடன் அதாவது தங்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்வார்களா? அல்லது புலத்தில் தமிழிற்கு சூட்டிய மகுடம் இந்த தலைமுறையுடன் இறக்கி வைக்கப்படுமா? எனது கருத்து.. தமிழ் சூழலில் பிறந்து வளர்ந்த எனக்கு பிறமொழி ஆர்வம் எப்படி அதிகம் ஏற்படவில்லையோ அது போலவே.. இன்னொரு மொழி சூழலில் பிறந்து வளர்ந்த அக்குழந்தைகளுக்கு.. பிறமொழி (அது தமிழ் மொழி தான்) ஆர்வம் குறைந்திருக்கும் என்பது நியாயமானதும் விஞ்ஞானத்தின் படியும் உண்மையாகும். உங்கள் கருத்துக்களின் பின் வருகிறேன்..

