07-24-2004, 10:21 PM
ஈழவேந்தன் எம்.பி. இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு
கொழும்பிலிருந்து சேரலாதன்
தமிழ்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் தமிழ்நாட்டுக்குள் செல்ல இந்திய மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் உலகத்தமிழர் பேரமைப்பு மாநாட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஈழவேந்தன் இன்று இந்தியா சென்றிருந்தார்.
ஏற்கனவே இந்தியாவில் அவருக்கான தடை உத்தரவு காணப்படுவதால் அவரை விமான நிலையத்தில் இருந்து உள்ளே செல்ல இந்திய பொலிசார் அனுமதி வழங்கவில்லை.
இது குறித்து இந்திய உயர் பீடத்தைச் சேர்ந்தவர்களுடன் மலையக மக்கள் முன்னணித் தலைவர் சந்திரசேகரன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இருப்பினும் ஈழவேந்தனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் சற்றுமுன்னர் இலங்கைக்கு ஈழவேந்தன் திரும்பியுள்ளார்.
நன்றி - புதினம்
கொழும்பிலிருந்து சேரலாதன்
தமிழ்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் தமிழ்நாட்டுக்குள் செல்ல இந்திய மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் உலகத்தமிழர் பேரமைப்பு மாநாட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஈழவேந்தன் இன்று இந்தியா சென்றிருந்தார்.
ஏற்கனவே இந்தியாவில் அவருக்கான தடை உத்தரவு காணப்படுவதால் அவரை விமான நிலையத்தில் இருந்து உள்ளே செல்ல இந்திய பொலிசார் அனுமதி வழங்கவில்லை.
இது குறித்து இந்திய உயர் பீடத்தைச் சேர்ந்தவர்களுடன் மலையக மக்கள் முன்னணித் தலைவர் சந்திரசேகரன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இருப்பினும் ஈழவேந்தனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் சற்றுமுன்னர் இலங்கைக்கு ஈழவேந்தன் திரும்பியுள்ளார்.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

