07-24-2004, 09:28 PM
<span style='font-size:25pt;line-height:100%'><b>10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி!</b></span>
சனி, 24 ஜூலை 2004
ஆசிய கோப்பை சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது.
முதலில் ஆடிய வங்கதேசம் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய இலஙகை அணி 33.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது.
வங்கதேச அணியில் முகமது அஸ்ரபுல் 66 ரன்களைச் சேர்த்து அணியில் எண்ணிக்கை உயர்விற்கு முக்கிய காரணமானார்.
தொடக்க வீரர்கள் சோபிக்காவிட்டாலும், அஸ்ரபுல் அபாரமா ஆடி அணியின் மானத்தை காத்தார். ஒரு நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 31 ரன்களை மட்டுமே சேர்ந்திருந்தது வங்கதேசம். இந்நிலையில் ரானாவுடன் இணைந்து 100 ரன்களைக் குவித்தார் அஷ்ரபுல், ரானா 43 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இலங்கையின் மிதவேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளையும், மஹ்ரூப், முரளிதரன், மாலிங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இலங்கை அணியின் ஜெயசூர்யா ஆட்டமிழக்காமல்i 107 ரன்களை எடுத்தார். குணவர்த்தனே ஆட்டமிழக்காமல் 64 ரன்களை எடுத்தார்.
நன்றி
வெப்உலகம்
சனி, 24 ஜூலை 2004
ஆசிய கோப்பை சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது.
முதலில் ஆடிய வங்கதேசம் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய இலஙகை அணி 33.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது.
வங்கதேச அணியில் முகமது அஸ்ரபுல் 66 ரன்களைச் சேர்த்து அணியில் எண்ணிக்கை உயர்விற்கு முக்கிய காரணமானார்.
தொடக்க வீரர்கள் சோபிக்காவிட்டாலும், அஸ்ரபுல் அபாரமா ஆடி அணியின் மானத்தை காத்தார். ஒரு நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 31 ரன்களை மட்டுமே சேர்ந்திருந்தது வங்கதேசம். இந்நிலையில் ரானாவுடன் இணைந்து 100 ரன்களைக் குவித்தார் அஷ்ரபுல், ரானா 43 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இலங்கையின் மிதவேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளையும், மஹ்ரூப், முரளிதரன், மாலிங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இலங்கை அணியின் ஜெயசூர்யா ஆட்டமிழக்காமல்i 107 ரன்களை எடுத்தார். குணவர்த்தனே ஆட்டமிழக்காமல் 64 ரன்களை எடுத்தார்.
நன்றி
வெப்உலகம்
[b][size=18]

