07-23-2004, 03:16 PM
ஒரு குட்டி இடம்.. குகைக்குள் போவது போல போக வேணும்.. கொஞ்சம் புகை கூடினால் அலாரம் அடிக்கும். இதெல்லத்தையும் விட்டுவிட்டு எல்லா கோயிலும் சேர்ந்து ஒரு பெரிய பொதுவான இடத்தில மன நிறைவோடு போய் வழிபட்டு வர கூடிய மாதிரி கட்டலாமே.. எல்லா சாமியையும் அந்த கோயிலில் வைக்கலாமே.. ஊர்களில் கோயிலுக்கு போனால் என்ன ஒரு மனநிறைவு வரும்? அது புலத்தில யாருக்காவது வந்ததோ சொல்லங்கோ பாப்பம்? அட கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு போனாலே என்ன ஒரு அமைதி.. அவுஸ்ரேலியாவில் மெல்பேர்ணில் சிவா விஸ்ணு ஆலயம் என்று பிரமாண்டமான கோயில் இருக்கு.. கிட்ட நெருங்கும் போதே.. எழுந்து நிற்கும் இரட்டைக் கோபுரங்கள்.. விசாலமான கோயில் தான்.. குட்டி குட்டியாய் பத்து குகைகள்; கட்டுவதற்கு பதில் உருப்படியாய் ஒரு கோவில் கட்டலாமே..
..

