07-18-2004, 12:26 PM
கைக்கு எட்டியும் வாய்க்கெட்டாத <b>யாழ் நூலகம் </b>
குடாநாட்டு மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்துகொண்டு போகின்றமை இன்று பலராலும் எடுத்துக்காட்டப்பட்டு வருகின்றது. இந்தக் காலகட்டத்தில் யாழ் நூலகத்தின் நிலை மிகவும் வேதனைக்குரியது.
யாழ்ப்பாணம், யாழ்ப்பாணத்தவர் கல்வி, பச்சையான இனத்துரோகம் என்றெல்லாம் கதைக்கும் போது எவருக்கும் உடன் மனதில் தோன்றுவது யாழ் பொது நூலகம். இதன் வரலாறு, இதற்கு பின்னால் உள்ள அரசியல் உலகத்தமிழர் யாவரும் அறிந்ததே இருப்பினும்....
முக்கியமாக அனைவரின் மனதில் இருக்கவேண்டியவை
1. அன்றைய நாட்களில் தென்ஆசியாவில் மிகப்பெரிய நூலகமாக விளங்கியது யாழ் நூலகம்
2. மறைந்த ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் காமினி திசானாயக்காவின் நேரடி வழிநடத்தலில் தீ மூட்டி எரிக்கப்பட்டதுடன், யாழ் நூலகம் தமிழர்களின் அறிவியலோடு மட்டுமல்லாது அரசியலிலும் புகுந்து கொண்டது.
3. இலங்கை ஜனாதுபதி சந்திரிக்கா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வெண்தாமரை இயக்கம், புத்தகமும் செங்கல்லும் என்ற திட்டத்தின் ஊடாக எரிந்த நூலகம் மீண்டும் சிங்கள அரசால் அரசியலுக்காகப்பயன்படுத்தபட்டது.
4. பூர்த்திசெய்யப்பட்ட நூலகத்தினை திறப்பதற்கு முன்னாள் மாநகர சபை ஆணையாளர் செல்லன் கந்தையாவையும் அவரது குலத்தையும் இணைத்து ஆனந்தசங்கரியார் நடாத்திய அரசியலும் வாசகர்களுக்கு நினைவிருக்கும்.
தொடர்ந்து வந்த காலப்பகுதியில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாது 2004ம் ஆண்டு மாசி மாதம் 23ம் திகதி (தகவல்- நூலக தகவல்ப்பிரிவு) யாழ்பொது நூலகம் பகுதி நேரமாக மாணவர்களின் நன்மை கருதி திறந்து வைக்கப்பட்டது.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க யாழ்ப்பாணத்தில் கால் ஊன்றுவதற்கு கடந்த சில காலமாக முயன்று வரும் அமெரிக்கா, தனது தகவல் மையத்தை யாழ் பொதுநூலகத்தை திறப்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது நூலகம் பொதுமக்களின் பாவனைக்காக முழுநேரமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நூலகத்தில் குறையற்ற விதத்தில் அனைத்து வசதிகளும் உண்டு என்று சொல்லலாம்.
1. பொதிகள் வைப்பதற்கான பகுதி, முழுநேர காவலாளிகள்.
2. தகவல் பகுதி
3. சஞ்சிகைப்பகுதி, பத்திரிகைப்பகுதி ஒன்றாகவும்
4. இரவல் வழங்கும் பகுதி
5. மலசல கூடம்
6. சிறுவர்பகுதி
7. நிர்வாகப்பகுதி
8. உசாத்துணைப்பகுதி
9. கேட்போர் கூடம்
10. ஒடியோ, வீடியோ பகுதி
11. குளிரூட்டப்பட்ட கணினிப்பகுதி (இன்ரநெற் வசதிகளுக்காக)
12. நூலகத்தினைச்சுற்றி அழகான பூந்தோட்டம்.
என முழுமையான வசதிகளுடன் உள்ளது யாழ் நூலகம்.
சாதாரணமாக 50 ரூபா செலுத்தி அங்கத்துவம் பெறுவதன் மூலம் நூலகத்தின் பல பகுதிகளை உபயோகப்படுத்தலாம். (இன்ரநெற் உபயோகப்படுத்த 30 ரூபா அறவிடப்படுகின்றது.)
இங்குள்ள இன்ரநெற் இணைப்பானது சாதாரண டயலப் இணைப்பாகும். லீஸ் இணைப்பு குடாநாட்டில் வழங்க முடியாமல் இருப்பதகாவும் கூறப்படுகின்றது. இருப்பினும் பல தனியார் நிறுவனங்கள் லீஸ் இணைப்பு பெற்று வியாபாரம் செய்வதும் குறிப்பிடத்தக்கது. (நூலகம் திறந்தபின் இரண்டு தனியார் நிறுவனங்கள் இன்ரநெற் பாவனைக்காக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.) மேற்படி காரணத்தால் நூலகத்தில் இணையப்பக்கங்களை தரவிறக்கம் செய்வது மிகவும் மெதுவான செயற்பாடாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அங்கத்தவராக இணைபவர் யாழ் மாநகர சபை எல்லைக்குள் வசிப்பவராயின் 300 ரூபாவும் மாநகரசபைக்கு வெளியில் வசிப்பவர் எனின் 600 ரூபாவும் செலுத்தி இரவல் வழங்கும் பகுதியில் அங்கத்துவம் பெறமுடியும்.
இதேபோல் சிறுவர்களுக்கு 175 ரூபா செலுத்தி அங்கத்துவராக முடியும்.
மேற்படி தகவல்களோடு பின்வருவன முக்கியமானவை
1. நூலகத்தால் வழங்கப்படும் அங்கத்துவத்திற்கான விண்ணப்படிவத்தில் 30 ரூபா அல்லது 50 ரூபா அங்கத்துவப்பணம் எனவும் 100 ரூபா வைப்புப்பணமாகவும் அச்சிடப்பட்டுள்ளது ஆனால் அறவிடப்படுவது அங்கத்துவம் -300 ரூபாவும் வைப்புப்பணம் - 300 ரூபாவும் மொத்தம் 600 ரூபா.,
<img src='http://www.yarl.com/forum/files/bill.jpeg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/form.jpg' border='0' alt='user posted image'>
2. பல தனியார் நிறுவனங்கள் லீஸ் இணைப்பு எடுத்து வியாபாரத்தில் ஈடுபடும் போது பொது நூலக்திற்கு லீஸ் இணைப்பு எடுக்க முடியாமல் போனது ஏன் ?
3. நூலக்தினைப்பராமரிப்பதற்கு நூலக நிர்வாகத்தினரால் மாதாந்தம் 500 000.00 (ஐந்து லட்சரூபா) உத்தியோகத்தர்கள் ஏற்கனவே பணியில் உள்ளவர்களாவர்கள், இவர்களைத்தவிர பெருந்தொகைப்பணம் எவ்வாறு பராமரிப்பிற்கு மட்டும் செலவாகின்றது ? (மேற்படி தொகை மின்சாரம், தொலைபேசி, பூந்தோட்டப்பராமரிப்பு என்பவற்றிக்கு மட்டும் என அறியக்கிடக்கின்றது.)
நூலகத்தின் கட்டண அதிகரிப்பு காரணமாக கற்றலில் ஆர்வமுள்ள பல வறிய மாணவர்கள் இன்னும் அங்கத்துவம் பெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. என்னுடைய பல ஆசைகூட இன்று தான் நிறைவேறியது.
13.07.2004 ம் திகதியில் உள்ள மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை 64 ஆகும்.
<img src='http://www.yarl.com/forum/files/membership.jpeg' border='0' alt='user posted image'>
நூலக்தின் ஆடம்பரத்தினால் செலவாகும் பணத்தினை அங்கத்துவப்பணத்தினை அதிகரிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுரை கூறிய முன்னாள் துணைவேந்தர் என்ன காரணத்திற்காக அங்கத்துவப்பணத்தை அதிகரிக்கச் செய்தார் ?(அங்கத்துவப்பணம் 600 ரூபாவாக அமுல்படுத்தலில் பல வாக்குவாதங்களுக்கு மத்தியில் முன்நின்று உழைத்தவர்)
குறிப்பிட்ட முன்னாள் துணைவேந்தர் காலத்திலேயே பல்கலைக்கழகத்தில் பல கல்விச்சீர்கேடுகளும் (வெளிவாரிப்பட்டப்படிப்பில்), பல நிர்வாக மோசடிகளும், இன்னும் பல கல்விக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகள் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்தேறியமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை யாழ் நூலகத்திற்கு கொண்டுவர முயற்சிக்கும் சமயப்பெரியவர்கள் , கல்விமான்கள் குடாநாட்டிலுள்ள மாணவர்களை நூலகத்திற்கு கொண்டுவர முயற்சி செய்யாமை மனவருத்தத்திற்கு உரியது. இது வரை காலமும் மாணவர்களின் கல்வி பற்றிச்சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரம் கிடைக்திருக்க சந்தர்பம் இல்லாதிருந்திருக்கலாம். இனிவரும் காலங்களில் நூலகத்தினை எல்லோரும் பயன்படுத்தும் வகையில் மாணவர்கள், பொதுமக்களின் மத்தியில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நாடாத்தி மாணவர்களையும் மக்களையும் நூலகங்கள் நோக்கி நகர்த்துவார்களா ?
குடாநாட்டில் பல முக்கிய பணிகளில் கடமை புரியும் பலர் தமது நாளாந்த வேலைகளை (தமக்கே உரிய வேலையை) செய்யாமல் அரசியலில் ஈடுபட முயற்சிப்பதும், தமது சொந்த நலனுக்காக பொதுமக்களின் வாழ்க்கையை அன்னியரிடம் அடகுவைக்கும் விதத்தில் நடந்துகொள்வதும் வேதனைக்குரிய விடயமாகும். இந்த நிலைமாறுமா ?
அல்லது
இவர்களை பெரியவர்களாக எண்ணி ஏமாந்துபோகும் அப்பாவி பொதுமக்கள் இவர்களின் சுயரூபங்களை அறிந்துகொள்வார்களா ?
காலம் பதில் சொல்லும்வரை காத்திருக்கமுடியுமா ?
யாழில் இருந்து குரு
குடாநாட்டு மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்துகொண்டு போகின்றமை இன்று பலராலும் எடுத்துக்காட்டப்பட்டு வருகின்றது. இந்தக் காலகட்டத்தில் யாழ் நூலகத்தின் நிலை மிகவும் வேதனைக்குரியது.
யாழ்ப்பாணம், யாழ்ப்பாணத்தவர் கல்வி, பச்சையான இனத்துரோகம் என்றெல்லாம் கதைக்கும் போது எவருக்கும் உடன் மனதில் தோன்றுவது யாழ் பொது நூலகம். இதன் வரலாறு, இதற்கு பின்னால் உள்ள அரசியல் உலகத்தமிழர் யாவரும் அறிந்ததே இருப்பினும்....
முக்கியமாக அனைவரின் மனதில் இருக்கவேண்டியவை
1. அன்றைய நாட்களில் தென்ஆசியாவில் மிகப்பெரிய நூலகமாக விளங்கியது யாழ் நூலகம்
2. மறைந்த ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் காமினி திசானாயக்காவின் நேரடி வழிநடத்தலில் தீ மூட்டி எரிக்கப்பட்டதுடன், யாழ் நூலகம் தமிழர்களின் அறிவியலோடு மட்டுமல்லாது அரசியலிலும் புகுந்து கொண்டது.
3. இலங்கை ஜனாதுபதி சந்திரிக்கா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வெண்தாமரை இயக்கம், புத்தகமும் செங்கல்லும் என்ற திட்டத்தின் ஊடாக எரிந்த நூலகம் மீண்டும் சிங்கள அரசால் அரசியலுக்காகப்பயன்படுத்தபட்டது.
4. பூர்த்திசெய்யப்பட்ட நூலகத்தினை திறப்பதற்கு முன்னாள் மாநகர சபை ஆணையாளர் செல்லன் கந்தையாவையும் அவரது குலத்தையும் இணைத்து ஆனந்தசங்கரியார் நடாத்திய அரசியலும் வாசகர்களுக்கு நினைவிருக்கும்.
தொடர்ந்து வந்த காலப்பகுதியில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாது 2004ம் ஆண்டு மாசி மாதம் 23ம் திகதி (தகவல்- நூலக தகவல்ப்பிரிவு) யாழ்பொது நூலகம் பகுதி நேரமாக மாணவர்களின் நன்மை கருதி திறந்து வைக்கப்பட்டது.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க யாழ்ப்பாணத்தில் கால் ஊன்றுவதற்கு கடந்த சில காலமாக முயன்று வரும் அமெரிக்கா, தனது தகவல் மையத்தை யாழ் பொதுநூலகத்தை திறப்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது நூலகம் பொதுமக்களின் பாவனைக்காக முழுநேரமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நூலகத்தில் குறையற்ற விதத்தில் அனைத்து வசதிகளும் உண்டு என்று சொல்லலாம்.
1. பொதிகள் வைப்பதற்கான பகுதி, முழுநேர காவலாளிகள்.
2. தகவல் பகுதி
3. சஞ்சிகைப்பகுதி, பத்திரிகைப்பகுதி ஒன்றாகவும்
4. இரவல் வழங்கும் பகுதி
5. மலசல கூடம்
6. சிறுவர்பகுதி
7. நிர்வாகப்பகுதி
8. உசாத்துணைப்பகுதி
9. கேட்போர் கூடம்
10. ஒடியோ, வீடியோ பகுதி
11. குளிரூட்டப்பட்ட கணினிப்பகுதி (இன்ரநெற் வசதிகளுக்காக)
12. நூலகத்தினைச்சுற்றி அழகான பூந்தோட்டம்.
என முழுமையான வசதிகளுடன் உள்ளது யாழ் நூலகம்.
சாதாரணமாக 50 ரூபா செலுத்தி அங்கத்துவம் பெறுவதன் மூலம் நூலகத்தின் பல பகுதிகளை உபயோகப்படுத்தலாம். (இன்ரநெற் உபயோகப்படுத்த 30 ரூபா அறவிடப்படுகின்றது.)
இங்குள்ள இன்ரநெற் இணைப்பானது சாதாரண டயலப் இணைப்பாகும். லீஸ் இணைப்பு குடாநாட்டில் வழங்க முடியாமல் இருப்பதகாவும் கூறப்படுகின்றது. இருப்பினும் பல தனியார் நிறுவனங்கள் லீஸ் இணைப்பு பெற்று வியாபாரம் செய்வதும் குறிப்பிடத்தக்கது. (நூலகம் திறந்தபின் இரண்டு தனியார் நிறுவனங்கள் இன்ரநெற் பாவனைக்காக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.) மேற்படி காரணத்தால் நூலகத்தில் இணையப்பக்கங்களை தரவிறக்கம் செய்வது மிகவும் மெதுவான செயற்பாடாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அங்கத்தவராக இணைபவர் யாழ் மாநகர சபை எல்லைக்குள் வசிப்பவராயின் 300 ரூபாவும் மாநகரசபைக்கு வெளியில் வசிப்பவர் எனின் 600 ரூபாவும் செலுத்தி இரவல் வழங்கும் பகுதியில் அங்கத்துவம் பெறமுடியும்.
இதேபோல் சிறுவர்களுக்கு 175 ரூபா செலுத்தி அங்கத்துவராக முடியும்.
மேற்படி தகவல்களோடு பின்வருவன முக்கியமானவை
1. நூலகத்தால் வழங்கப்படும் அங்கத்துவத்திற்கான விண்ணப்படிவத்தில் 30 ரூபா அல்லது 50 ரூபா அங்கத்துவப்பணம் எனவும் 100 ரூபா வைப்புப்பணமாகவும் அச்சிடப்பட்டுள்ளது ஆனால் அறவிடப்படுவது அங்கத்துவம் -300 ரூபாவும் வைப்புப்பணம் - 300 ரூபாவும் மொத்தம் 600 ரூபா.,
<img src='http://www.yarl.com/forum/files/bill.jpeg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/form.jpg' border='0' alt='user posted image'>
2. பல தனியார் நிறுவனங்கள் லீஸ் இணைப்பு எடுத்து வியாபாரத்தில் ஈடுபடும் போது பொது நூலக்திற்கு லீஸ் இணைப்பு எடுக்க முடியாமல் போனது ஏன் ?
3. நூலக்தினைப்பராமரிப்பதற்கு நூலக நிர்வாகத்தினரால் மாதாந்தம் 500 000.00 (ஐந்து லட்சரூபா) உத்தியோகத்தர்கள் ஏற்கனவே பணியில் உள்ளவர்களாவர்கள், இவர்களைத்தவிர பெருந்தொகைப்பணம் எவ்வாறு பராமரிப்பிற்கு மட்டும் செலவாகின்றது ? (மேற்படி தொகை மின்சாரம், தொலைபேசி, பூந்தோட்டப்பராமரிப்பு என்பவற்றிக்கு மட்டும் என அறியக்கிடக்கின்றது.)
நூலகத்தின் கட்டண அதிகரிப்பு காரணமாக கற்றலில் ஆர்வமுள்ள பல வறிய மாணவர்கள் இன்னும் அங்கத்துவம் பெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. என்னுடைய பல ஆசைகூட இன்று தான் நிறைவேறியது.
13.07.2004 ம் திகதியில் உள்ள மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை 64 ஆகும்.
<img src='http://www.yarl.com/forum/files/membership.jpeg' border='0' alt='user posted image'>
நூலக்தின் ஆடம்பரத்தினால் செலவாகும் பணத்தினை அங்கத்துவப்பணத்தினை அதிகரிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுரை கூறிய முன்னாள் துணைவேந்தர் என்ன காரணத்திற்காக அங்கத்துவப்பணத்தை அதிகரிக்கச் செய்தார் ?(அங்கத்துவப்பணம் 600 ரூபாவாக அமுல்படுத்தலில் பல வாக்குவாதங்களுக்கு மத்தியில் முன்நின்று உழைத்தவர்)
குறிப்பிட்ட முன்னாள் துணைவேந்தர் காலத்திலேயே பல்கலைக்கழகத்தில் பல கல்விச்சீர்கேடுகளும் (வெளிவாரிப்பட்டப்படிப்பில்), பல நிர்வாக மோசடிகளும், இன்னும் பல கல்விக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகள் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்தேறியமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை யாழ் நூலகத்திற்கு கொண்டுவர முயற்சிக்கும் சமயப்பெரியவர்கள் , கல்விமான்கள் குடாநாட்டிலுள்ள மாணவர்களை நூலகத்திற்கு கொண்டுவர முயற்சி செய்யாமை மனவருத்தத்திற்கு உரியது. இது வரை காலமும் மாணவர்களின் கல்வி பற்றிச்சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரம் கிடைக்திருக்க சந்தர்பம் இல்லாதிருந்திருக்கலாம். இனிவரும் காலங்களில் நூலகத்தினை எல்லோரும் பயன்படுத்தும் வகையில் மாணவர்கள், பொதுமக்களின் மத்தியில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நாடாத்தி மாணவர்களையும் மக்களையும் நூலகங்கள் நோக்கி நகர்த்துவார்களா ?
குடாநாட்டில் பல முக்கிய பணிகளில் கடமை புரியும் பலர் தமது நாளாந்த வேலைகளை (தமக்கே உரிய வேலையை) செய்யாமல் அரசியலில் ஈடுபட முயற்சிப்பதும், தமது சொந்த நலனுக்காக பொதுமக்களின் வாழ்க்கையை அன்னியரிடம் அடகுவைக்கும் விதத்தில் நடந்துகொள்வதும் வேதனைக்குரிய விடயமாகும். இந்த நிலைமாறுமா ?
அல்லது
இவர்களை பெரியவர்களாக எண்ணி ஏமாந்துபோகும் அப்பாவி பொதுமக்கள் இவர்களின் சுயரூபங்களை அறிந்துகொள்வார்களா ?
காலம் பதில் சொல்லும்வரை காத்திருக்கமுடியுமா ?
யாழில் இருந்து குரு

