07-17-2004, 01:53 PM
நன்றி இளங்கோ மட்டுறுத்தினர் என்ற அளவில் இல்லாமல் சக கருத்தாளர் என்ற முறையில் உங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கு.
இங்கு நீங்கள் எப்படியோ அப்படித்தான் மயூரனும் எனக்கு சக கருத்தாளர். அவரோடு முன்னமே களத்தில் இருந்தவர் என்ற முறையில் உங்களுக்கு நிறைய விடயங்கள் ஒவ்வொருவர் எழுத்து கருத்து வெளிப்படுத்தும் முறையில் உள்ள வேறுபாடுகள் தெரிந்திருக்கும்.
ஆனால் மயூரன் சொன்னதில் உள்ள ஒரு விடயம் அதாவது தலைப்புக்குச் சம்பந்தமாக கருத்துகள் இல்லாமற் போனது பல தடவை நடந்து வெட்டல்கள் தூக்கல்கள் அதனால் மட்டுறுத்தினருடன் வாக்குவாதங்கள் நடந்துள்ளன எனக்கு அதுமட்டும் தான் தெரியும்.சிலவேளைகளில் கருத்துத் திசைமாறிப்போவதற்கு பலவழிகளில் நானும் காரணனாக இருந்திருக்கிரேன் அந்த வகையில் சுயவிமர்சனம் ஒவ்வொருத்தரும் செய்துகொள்ளுவது நன்று என்று சொன்னேன்.
வேண்டுமானால் களத்தில் ஒருவர் பச்சைத் தூஷணத்தில் எழுதியதை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள் எவ்வளவு தூரம் மட்டுறுத்தினர்களால் அதனைத் தடுக முடியும் அரைமணிநேரமே அந்தக் கருத்து களத்தில் இருந்தாலும் அந்த நேர இடைவெளியில் களத்துக்கு வரும் பலரது விசனத்தை அது பெற்றிருக்கும்.
இது எங்கள் களம் யாரோ ஒருவரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள்-எங்கள் உறவுகளுக்கிடையில் உறவுப்பாலம் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட களம் என்ற சிந்தனையில் ஒவ்வொருத்தரும் தாங்கள் எழுதுவதை சுய தணிக்கை செய்துகொண்டால் நல்லது அதனைத் தான் சொன்னேன்.மற்றும் படி குருவிகளால்தான் குழப்பம் என்று நான் சொல்லவில்லை அது குருவிகளுக்கும் தெரியும்
இங்கு நீங்கள் எப்படியோ அப்படித்தான் மயூரனும் எனக்கு சக கருத்தாளர். அவரோடு முன்னமே களத்தில் இருந்தவர் என்ற முறையில் உங்களுக்கு நிறைய விடயங்கள் ஒவ்வொருவர் எழுத்து கருத்து வெளிப்படுத்தும் முறையில் உள்ள வேறுபாடுகள் தெரிந்திருக்கும்.
ஆனால் மயூரன் சொன்னதில் உள்ள ஒரு விடயம் அதாவது தலைப்புக்குச் சம்பந்தமாக கருத்துகள் இல்லாமற் போனது பல தடவை நடந்து வெட்டல்கள் தூக்கல்கள் அதனால் மட்டுறுத்தினருடன் வாக்குவாதங்கள் நடந்துள்ளன எனக்கு அதுமட்டும் தான் தெரியும்.சிலவேளைகளில் கருத்துத் திசைமாறிப்போவதற்கு பலவழிகளில் நானும் காரணனாக இருந்திருக்கிரேன் அந்த வகையில் சுயவிமர்சனம் ஒவ்வொருத்தரும் செய்துகொள்ளுவது நன்று என்று சொன்னேன்.
வேண்டுமானால் களத்தில் ஒருவர் பச்சைத் தூஷணத்தில் எழுதியதை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள் எவ்வளவு தூரம் மட்டுறுத்தினர்களால் அதனைத் தடுக முடியும் அரைமணிநேரமே அந்தக் கருத்து களத்தில் இருந்தாலும் அந்த நேர இடைவெளியில் களத்துக்கு வரும் பலரது விசனத்தை அது பெற்றிருக்கும்.
இது எங்கள் களம் யாரோ ஒருவரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள்-எங்கள் உறவுகளுக்கிடையில் உறவுப்பாலம் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட களம் என்ற சிந்தனையில் ஒவ்வொருத்தரும் தாங்கள் எழுதுவதை சுய தணிக்கை செய்துகொண்டால் நல்லது அதனைத் தான் சொன்னேன்.மற்றும் படி குருவிகளால்தான் குழப்பம் என்று நான் சொல்லவில்லை அது குருவிகளுக்கும் தெரியும்
\" \"

