Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மேஜர் பாரதியின் "காதோடு சொல்லிவிடு"
#1
என் இனிய தேசமே

என் இனிய தேசமே!
குறிப்பெடுத்துக் கொள்@
எரியுண்டு
சிதையுண்டு போன
என் தேசத்தின்
காப்பகழி ஒன்றில்
எழுகின்ற
உணர்வு அலைகளை
குறிப்பெடுத்துக் கொள்.
இந்தத் தேசத்தை
எப்படி நான்
நேசித்தேன் என்று
தெரிளுமா உனக்கு?
என் தலைமையை
எப்படி நான்
தெரிந்தெடுத்தேன் என்று
தெரியுமா உனக்கு?
கீழ்வானம் எமக்கு
எப்பபோது சிவக்கும்?
என் இதயத்தின் துடிப்பிது.
கேட்கிறதா உனக்கு?
என்னால்
விளங்கப்படுத்த முடியவில்லை.
ஆனாலும்
என் தேசமே
குறிப்பெடுத்துக் கொள்.
இன்னும்
என்
அம்மா என்ற பெயரில்
உறிரோடு உலாவும்
உலும்புக் கூட்டை
நீ
கண்டிருக்கிறாயா?
ஆம்! கண்டிருப்பாயானால்
நடைப்பிணமாய்த் திரியும்
அதன் கால்கள்
நிச்சயம்
உன் மடியில்
பதிந்திருக்கும்.
வாழ்வின்
பற்றுக்கோட்டினை
தேடி அலையும்
இந்த எலும்புக்கூடு
தி;னம் தினம்
என் நினைவில்
வந்து போனாலும்
இன்னும் எதன்மீது
அன்பு செலுத்துகிறேன்
தெரியுமா உனக்கு?
தெரிந்துகொள்.
உன்மீதுதான்.
இருண்டு போயிருக்கும்
என் தேசத்தில்
எற்றப்படும்
விடுதலைத் தீபத்துக்கு
என் உயிரும்
எண்ணெயாய்
ஊற்றப்பட வேண்டும்.
குறிப்பெடுத்துக் கொள்.
என் தேசமே
குறிப்பெடுத்துக் கொள்.

மேஜர் பாரதியின் "காதோடு சொல்லிவிடு"

கவிமூலம்.... ஈழம் வெப்...
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
மேஜர் பாரதியின் &quot;காத - by tamilini - 07-16-2004, 09:34 PM
[No subject] - by kavithan - 07-17-2004, 06:55 AM
[No subject] - by tamilini - 07-18-2004, 02:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)