07-14-2004, 10:42 PM
[size=15] <b>இலங்கைத் தமிழ் புரியவில்லை (விளங்கேலை)</b>
அஜீவனின் குறும்படம் அமெரிக்கா நியுஜேர்சி சிந்தனை வட்டத்தினால் நடாத்தப்பட்ட குறும்பட விழாவில் திரையிடப்பட்டது. இலங்கைத் தமிழ் புரியவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் முன்வைக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக எமக்கு கேட்டுப் போன பல்லவியே.
ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங்கள் புரியவில்லை. சொற்களுக்கு அடிக்குறிப்பு இடுங்கள் எனக் கேட்கப்பட்ட காலம் உண்டு. ஈழத்து எழுத்து தற்போது பேச்சுநடையிலேயே எழுதப்படுகிறது. எல்லோரும் புரிந்து கொள்ளுகிறார்கள்.அந்தக் குறை நீங்கிவிட்டது.
எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் கட்டுரைகளிலிருந்து (அகரம் வெளியீடு பக்கம் 416 & 417)
நம்முடைய வானொலி நாடகங்களைக் கேட்டு சலித்த எனக்கு, நண்பர் ஒருவர் சொன்ன யோசனை, சனிக்கிழமை தோறும் இரவு 9.30 க்குச் சிலோன் வானொலி ஒலிபரப்பும் தமிழ் நாடகங்களைக் கேட்டுப் பாருங்கள் என்றார். அந்தக் காலத்தில், அப்போது இந்த "கச்சரா" ஏற்படாத காலம். சனிக்கிழமை தோறும் ராத்திரி 9.30 மணிக்கு ஆவலோடு வானொலிப் பெட்டியின் முன் உட்காரும் வழக்கம் வந்தது. வானொலி நாடகங்கள் என்றால் அதுவல்லவா நாடகங்கள். அந்த ஈழத்து மக்களின் தமிழையே கேட்டுக் கொண்டிருக்கலாம். என்ன சொகம் என்ன சொகம்.
முதலில் கேட்கக் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. பல வார்த்தைகள் புரியவேயில்லை. நுளம்பு, பகிடி, பாவிக்கிறது, விசர் இப்படி.அப்புறம் அதுவே கேட்கக் கேட்க ஆனந்தமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது.
ஆகவே இவர்கள் முயற்சித்தால் இலங்கைத் தமிழ் புரியும்.
தமிழ்நாட்டிலோ மயிர், பொம்பிளை போன்றவை அங்கு இழிசொற்களாகும். முறையே முடி, லேடி என்று நல்ல தமிழாகக் கருதப்படுகிறது.
நடப்பில் நம்மிலும் பெரிய குறைபாடு உண்டு.நாம் சினிமாத்துறையில் மிக பின் நிற்கிறோம்.
கலியாண வீட்டு தொழில்நுட்பவியவாளர்களை திரைப்படம்(?); எடுக்கப் பயன்படுத்துகிறோம்.
நாம் சிறந்த படங்களை இயக்கி வெளியிட்டாலே மற்றவர்களுக்கும் இலங்கைத் தமிழ் புரியும். இல்லாவிடில், புன்னகை மன்னன், தெனாலி, நளதமயந்தி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்று இலங்கைத் தமிழையும், இலங்கைத் தமிழனையும் கொச்சைப் படுத்துகிறார்கள். சென்று பார்த்துவிட்டு கைதட்டுங்கள்.
பேட்டி வழங்கும் ஈழத்து இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், போராளிகள் எல்லோரும் மைக்கைக் கண்டவுடன் ஒரு போலித் தமிழில் உரையாடுகின்றனர்.பேச்சு நடையில் உள்ள இனிமை இதில் இல்லை. அண்மையில் ஜெயா தொலைக்காட்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இந்து நாகரீகத்துறை பீடாதிபதி, ஒரு பெண்மணி, மேடையில் பேசுவது போன்று பேட்டி வழங்கினார்.
நாம் செய்ய வேண்டியது கலந்துரையாடும்போது உரைத் தமிழைத் தவிர்த்து பேச்சுத் தமிழையே பயன்படுத்துவோம்.
Hi ajeevan,
Have a look on this.
Thanks
pirakalathan
france
pirabha1@hotmail.com
note:பிரான்சிலிருந்து எனக்கு, மின்அஞ்சல் வழி கிடைத்த இக் கருத்தை இங்கே இணைத்துள்ளேன்.
http://ajeevan.blogspot.com/2004/07/blog-post_14.html
அஜீவனின் குறும்படம் அமெரிக்கா நியுஜேர்சி சிந்தனை வட்டத்தினால் நடாத்தப்பட்ட குறும்பட விழாவில் திரையிடப்பட்டது. இலங்கைத் தமிழ் புரியவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் முன்வைக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக எமக்கு கேட்டுப் போன பல்லவியே.
ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங்கள் புரியவில்லை. சொற்களுக்கு அடிக்குறிப்பு இடுங்கள் எனக் கேட்கப்பட்ட காலம் உண்டு. ஈழத்து எழுத்து தற்போது பேச்சுநடையிலேயே எழுதப்படுகிறது. எல்லோரும் புரிந்து கொள்ளுகிறார்கள்.அந்தக் குறை நீங்கிவிட்டது.
எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் கட்டுரைகளிலிருந்து (அகரம் வெளியீடு பக்கம் 416 & 417)
நம்முடைய வானொலி நாடகங்களைக் கேட்டு சலித்த எனக்கு, நண்பர் ஒருவர் சொன்ன யோசனை, சனிக்கிழமை தோறும் இரவு 9.30 க்குச் சிலோன் வானொலி ஒலிபரப்பும் தமிழ் நாடகங்களைக் கேட்டுப் பாருங்கள் என்றார். அந்தக் காலத்தில், அப்போது இந்த "கச்சரா" ஏற்படாத காலம். சனிக்கிழமை தோறும் ராத்திரி 9.30 மணிக்கு ஆவலோடு வானொலிப் பெட்டியின் முன் உட்காரும் வழக்கம் வந்தது. வானொலி நாடகங்கள் என்றால் அதுவல்லவா நாடகங்கள். அந்த ஈழத்து மக்களின் தமிழையே கேட்டுக் கொண்டிருக்கலாம். என்ன சொகம் என்ன சொகம்.
முதலில் கேட்கக் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. பல வார்த்தைகள் புரியவேயில்லை. நுளம்பு, பகிடி, பாவிக்கிறது, விசர் இப்படி.அப்புறம் அதுவே கேட்கக் கேட்க ஆனந்தமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது.
ஆகவே இவர்கள் முயற்சித்தால் இலங்கைத் தமிழ் புரியும்.
தமிழ்நாட்டிலோ மயிர், பொம்பிளை போன்றவை அங்கு இழிசொற்களாகும். முறையே முடி, லேடி என்று நல்ல தமிழாகக் கருதப்படுகிறது.
நடப்பில் நம்மிலும் பெரிய குறைபாடு உண்டு.நாம் சினிமாத்துறையில் மிக பின் நிற்கிறோம்.
கலியாண வீட்டு தொழில்நுட்பவியவாளர்களை திரைப்படம்(?); எடுக்கப் பயன்படுத்துகிறோம்.
நாம் சிறந்த படங்களை இயக்கி வெளியிட்டாலே மற்றவர்களுக்கும் இலங்கைத் தமிழ் புரியும். இல்லாவிடில், புன்னகை மன்னன், தெனாலி, நளதமயந்தி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்று இலங்கைத் தமிழையும், இலங்கைத் தமிழனையும் கொச்சைப் படுத்துகிறார்கள். சென்று பார்த்துவிட்டு கைதட்டுங்கள்.
பேட்டி வழங்கும் ஈழத்து இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், போராளிகள் எல்லோரும் மைக்கைக் கண்டவுடன் ஒரு போலித் தமிழில் உரையாடுகின்றனர்.பேச்சு நடையில் உள்ள இனிமை இதில் இல்லை. அண்மையில் ஜெயா தொலைக்காட்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இந்து நாகரீகத்துறை பீடாதிபதி, ஒரு பெண்மணி, மேடையில் பேசுவது போன்று பேட்டி வழங்கினார்.
நாம் செய்ய வேண்டியது கலந்துரையாடும்போது உரைத் தமிழைத் தவிர்த்து பேச்சுத் தமிழையே பயன்படுத்துவோம்.
Hi ajeevan,
Have a look on this.
Thanks
pirakalathan
france
pirabha1@hotmail.com
note:பிரான்சிலிருந்து எனக்கு, மின்அஞ்சல் வழி கிடைத்த இக் கருத்தை இங்கே இணைத்துள்ளேன்.
http://ajeevan.blogspot.com/2004/07/blog-post_14.html

