Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்
#2
<b><span style='font-size:30pt;line-height:100%'>மனிதமிருகம் - 2 </b></span>

சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் ரொம்ப காலமாக போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி வந்த ஜெஃப்ரி டாமர் என்கிற கொலைகாரன், கடைசியில் ஒரு வழியாக போலீஸ் கையில் சிக்கிக் கொண்டான்.

தன்னந்தனியாகச் செயல்பட்ட டாமர், ஒரு சாடிஸ செக்ஸ§வல் கொலைகாரன். யாராவது ஒரு அப்பாவிப் பெண்ணை (அல்லது இளைஞனை) போகிற போக்கில் தேர்ந்தெடுத்துக் கடத்திக்கொண்டு போய்ப் பல மணி நேரம் விதவிதமாகச் சித்ரவதை செய்து முடிவாக கழுத்தை நெரித்து தீர்த்துக் கட்டிய பிறகு, அந்த உடலோடு செக்ஸ் வைத்துக்கொள்வது டாமருக்கு ரொம்பப் பிடிக்கும்!

தி டாமர் பிடிபட்ட பிறகு, புறநகரில் மரங்கள் சூழ்ந்த பகுதியில் இருந்த அவனுடைய கச்சிதமான வீட்டுக்குள் போலீஸார் நுழைந்து சோதனை போட்டார்கள். வீட்டுக்குக் கீழே இருந்த ஒரு பாதாள அறைக்குள் நுழைந்து பார்த்த துணிவு மிகுந்த காவலதிகாரிகள் அனைவரின் நெற்றிகளும் சரேலென்று வியர்க்க ஆரம்பித்தது. சிலர் வெளியில் ஓடிவந்து வாயிலெடுத்தார்கள்.

அங்கே அறை முழுவதும், வெட்டப்பட்ட கை, கால், தலைகள் சிதறிக் கிடந்தன. ஆஸிட் நிரப்பப்பட்ட ஒரு பெரிய 'மீன்தொட்டிக்குள்' அழுகிப்போன (தலை, கை|கால்கள் இல்லாத) உடல்கள் மெள்ள மிதந்து கொண்டிருந்தன. ஃப்ரிஜ் ஒன்றுக்குள் வரிசையாகத் தலைகள் அடுக்கப்பட்டிருந்தன! இன்னொன்றில், ஐஸ் படர்ந்து வெளுத்துப் போன நாலைந்து இதயங்கள், கூடவே கச்சிதமாக வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆண் உறுப்புகள் (தன் செக்ஸ் பசிக்காக இளைஞர்களையும் டாமர் விட்டு வைக்கவில்லை!).

மனித உடல் பகுதிகளைக் காய்கறிகளைப் போல சாப்பாட்டிலும் பயன்படுத்தினான் டாமர்!

போலீஸ் விசாரணையில், அவன் சாவதானமாகச் சொன்னான் 'வீட்டில் இடமில்லை. எலும்புகள் ரொம்பச் சேர்ந்துவிட்டது. ஆகவே, அவற்றைச் சுத்தியலால் பொடியாக்கி, கிளிஞ்சல்களைப் போல மூட்டைகளில் கட்டி வைத்திருக்கிறேன். தலைகளை தனியே வெட்டி எடுத்துக் கொதிக்கும் நீரில் போட்டு, தோல்களை உரித்துத் துடைத்து, மண்டை ஓடுகளின்மீது சம்பந்தப்பட்டவரின் பெயர், வயது, கொலை செய்த தேதி போன்ற தகவல்களை எழுதி வைத்துவிடுவேன்!

கோர்ட்டுக்கு டாமர் விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டபோது, கூடியிருந்த பெரும் கும்பலிலிருந்து ஒரு நிருபர் எட்டிப் பார்த்துக் குரூரமாக ஒரு கேள்வி கேட்டார்| 'டாமர், மனித உடலில் சுவையான பகுதி எது?'

'Bicep!' (புஜம்) என்று பதில் வந்தது!ணி

வாசகர்களே! டாமர் பற்றி விரிவான தனிப் புத்தகமே உண்டு. டாமர் வசித்த வீட்டில், அந்த அறைக்குள் போலீஸ் கண்ட காட்சியை மட்டுமே, அதையும் சுருக்கமாகத்தான் இங்கே விவரித்திருக்கிறேன்.

சற்று நுணுக்கமான விவரிப்புக்குக் காரணம், நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்பியதுதான்!

டாமர் கொடூரமானவனா(Bad) அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவனா (Mad)?

'இரண்டும்தான்!' என்று கோபத்துடன் நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கிறது!

ஸாரி, ஒன்றைத்தான் நீங்கள் சொல்ல வேண்டும். ஏனெனில், அதை முடிவு கட்டினால்தான், நீதிபதி அவனுக்குத் தண்டனை வழங்க முடியும்!

ஒரு குற்றவாளி, தான் செய்த காரியத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். தான் குற்றம் செய்வதே தெரியாத அளவுக்கு அவனுடைய மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், மரண தண்டனை வழங்க முடியாது.

கொலை செய்யவேண்டும் என்கிற வெறி வந்துவிட்டால், அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என்றும் அந்தக் கட்டுப்பாடு அவனுடைய சக்திக்கு உட்பட்டதல்ல என்பதையும் மனோதத்துவ நிபுணர்கள் நிரூபித்தால்கூடப் போதும்... மரண தண்டனை தரமுடியாது!

திடீர் ஆவேசம் காரணமாக, விநாடியில் கத்தியை எடுத்து எதிரே இருப்பவரின் உடலுக்குள் செலுத்துவது வேறு. திட்டம் போட்டுக் காத்திருந்து ஒருவரைக் கொல்வது வேறு. அதுவே, மனநிலை பாதிக்கப்பட்டுக் கொலை செய்வது வேறு!

வாசகர்களுக்கு ஏற்படும் உணர்ச்சிகள் (Emotions) சட்டத்துக்குக் கிடையாது! மூளையை மட்டும் பயன்படுத்தி, அது தீவிரமாக ஆராய்ந்து நீதி வழங்கும்!

"கொலைவெறி வந்தால், நம்மைப் போல அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. உடனே கொலையைச் செய்தாக வேண்டும். அதற்கு அவன் காரணமல்ல... டாமர் சிந்திக்க முடியாத, ஒரு உருண்டு முன்னேறும் கொலைகார ராணுவ டாங்கி மாதிரி! அந்த டாங்கி தானாக முன்னேறி உயிர்களைக் குடிக்கிறது. டாமர் அதற்குப் பொறுப்பல்ல..." என்று குற்றவாளியின் சார்பில் வக்கீல் வாதிட்டார்.

கொலையின்போது படிப்படியாக டாமர் மேற்கொண்ட அணுகுமுறை, அவனது ரசனை மற்றும் 'சாதாரண' காலங்களில் அவன் மேற்கொண்ட அமைதியான வாழ்க்கை, அவனுடைய நகைச்சுவை உணர்வு (Biceps!)...... இப்படிப் பல விஷயங்கள் டாமருக்கு எதிராகப் போனது!

"டாமருக்குத் தரவேண்டியது ட்ரீட்மெண்ட் இல்லை... பனிஷ்மெண்ட்!" என்று ஜூரி ஏகமனதாகச் சொல்ல...

"தொடர்ந்து பதினைந்து ஆயுள் தண்டனைகளை ஒருசேர அனுபவிக்க வேண்டும்..." என்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி (டாமர் வசித்த விஸ்கான்ஸின் மாநிலத்தில் மரண தண்டனை கிடையாது!).

சிறைப்பட்ட 950|வது நாளன்று ஒரு சக கைதி, 'டாமருக்குத் தரப்பட வேண்டியது மரண தண்டனைதான்' என்று முடிவு கட்டி, அவன் பாத்ரூமில் அசந்திருந்த சமயம் பார்த்து ஒரு இரும்புத் தடியால் டாமரை அடித்துக் கொன்றான்!

'எங்களைப் போன்ற சாமானிய மனிதர்கள் வேறு. டாமர் போன்ற கொலை மிருகங்கள் வேறு... கொலை மிருகங்களையும் சாமானிய மனிதர்களையும் ஒரே தராசில் எடை போடாதீர்கள்!' என்று வாசகர்கள் ஆட்சேபிக்கலாம். சற்றுப் பொறுமையாக இருங்கள்.

இதையெல்லாம் படித்துவிட்டு நீங்கள் சற்றுப் பதற்றமடைந்திருந்தால், நான் உங்கள்முன் வைக்கப்போகும் சில கேள்விகள், உங்களை மேலும் தர்மசங்கடப்படுத்தக்கூடும்!

உண்மைதான்! பெரும்பாலான உலக மக்கள் அன்றாட வாழ்க்கையை ரொம்பச் சாதாரணமாக, அமைதியாகத்தான் கழிக்கிறார்கள். அவர்கள் யாரும் திருடுவதில்லை, கற்பழிப்பதில்லை, கொலை செய்வதில்லை அநேகமாகக் கடைசி மூச்சுவரை!

அப்படியென்றால் மனித இனத்தில் டாமர் போன்றவர்களின் கொலைகாரப் பிரிவு வேறு, அமைதியாக வாழும் நல்லவர்களின் பிரிவு வேறு என்று அடித்துச் சொல்ல முடியுமா? சொல்லலாம்தான்... ஆனால், அது முழு உண்மையல்ல!

மனோதத்துவ நிபுணர்கள், 'வன்முறையாளர்களுக்கும் சாமானியர்களுக்கும் உள்ள இடைவெளி ரொம்பச் சின்னது' என்கிறார்கள். அதாவது, குறிப்பிட்ட ஒரு குற்றத்தைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணமே துளிர் விடாத ஒரு மனிதனைக் காட்ட முடியாது!

சரி, உங்கள் கையருகே ஒரு பட்டன் இருக்கிறது. ரிமோட் கண்ட்ரோல்! அதை நீங்கள் அழுத்தினால், உங்களுக்குப் பிடிக்காத ஒரு நபர் இன்றிரவு (இயற்கையாக!) இறந்துபோவார் என்றால், அந்த பட்டனைப் பயன்படுத்துவீர்களா?

உங்களுக்குத் தொல்லை கொடுக்கும் மேலதிகாரி, மிரட்டும் கடன்காரர், பிடிக்காத தலைவர், துரோகம் செய்த 'நண்பன்', உங்கள் வீட்டுப் பெண்களைக் கிண்டல் செய்த ரௌடி... இப்படி நீங்கள் வெறுக்கும் பலர் இருக்கக்கூடும். யோசித்துச் சொல்லுங்கள்..!

பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமை காக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. அதீதக் கோபத்தில்கூடக் கத்தியை எடுத்து ஒருவரைக் கொல்லும் அளவுக்கு நாம் போக மாட்டோம்தான்!

அதுவே, அன்றாட வாழ்க்கையில் பல்வேறுவிதமான வன்முறைகளில் நாம் நாட்டம் காட்டுகிறோம் என்பதும் உண்மை!

கொலையெல்லாம் செய்யாத ஒரு சாமானிய மனிதன்தான், மனைவியை சாடிஸத்தோடு துன்புறுத்துகிறான். வயதான தாய், தந்தையருக்குச் சாப்பாடு போடுகிற ஒரே காரணத்துக்காக, மறைமுகமாகப் பலவிதங்களில் அவர்களை வேலை வாங்குகிறான்.

மருமகள்களைக் கொடுமைப்படுத்தும் மாமியார்கள் எத்தனை பேர்? வாயில்லாப் பூச்சியான கணவனின் தாயை ஏசித் துன்புறுத்தும் மருமகள்கள் எத்தனை பேர்?

உங்களைப் பிடிக்கவில்லை என்பதற்காகக் குரூரமாக நடத்தும் சாடிஸ மேலதிகாரிகள் உண்டா, இல்லையா?

குழந்தைகளைப் பணிக்கு அமர்த்தி, கேட்பாரில்லை என்பதற்காக அவர்களை அடித்துத் துன்புறுத்தும் முதலாளிகள் இருக்கிறார்களா, இல்லையா?

தன்னிடம் கல்வி கற்க வந்த சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்யும் ஆசிரியர்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?

கெட்ட எண்ணத்தோடு உங்களை 'ஆட்கொள்ளும்' போலிச் சாமியார்கள் எத்தனை பேர் உண்டு?!

ஜூ.வி|யை வாரம் இருமுறை படிப்பவர்களான நீங்கள், சற்று நெஞ்சைத் தொட்டு மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்!

எடுத்த எடுப்பிலேயே இந்தக் கேள்விகளை வாசகர்கள் முன், நான் வைப்பதற்குக் காரணம் பரபரப்புக்காக மட்டும் இந்தத் தொடரை நீங்கள் படிக்கக்கூடாது என்பதற்காகத்தான்!

மேலும்...
Reply


Messages In This Thread
[No subject] - by AJeevan - 07-13-2004, 12:29 AM
[No subject] - by Sujeenthan - 02-26-2006, 01:09 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)