Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கைத் தமிழ் வசனங்கள் புரியவில்லை , நிழல் யுத்தம்.........
#4
நீண்ட காலமாக சொல்லப்பட்டுவந்த ஒரு விடயம்.

இதை நான் மொழியின் அராஜகம் என்றே பார்க்க வேண்டியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் ஆழமான தாக்கமும் அதன் ஆதிக்கமுமே இந்த பிரச்சனைக்கான மூல காரணங்கள். நாம் பழக்கப்பட்ட விடயத்தை கைவிட மிகவும் சிரமமப்படுவோம். ஆனால் தொடர் பயிற்சிகள் தான் இதை நிவர்த்தி செய்யும். இதற்கு ஒரே வழி தொடரந்தும் எமது பாணியிலேயே படம் எடுப்பது. தென்னிந்திய தமிழ் பின் மெட்ராஸ் தமிழ் இதை நாம் புரிந்து கொள்ளவில்லையா? கோவைதமிழ் மலையாளம் கலந்த தமிழ் தெலுங்கு கலந்த தமிழ் என்று பல தமிழை நாம் புரிந்து கொள்ளவில்லையா? சினமாவே ஒரு மொழி இங்கு பேசப்படும் மொழி இரண்டாவது பட்சமே.

மேற்கண்ட விமர்சனத்தை வைத்தவர்கள் ஒரு விதத்தில் அராஜகவாதிகள். காரணம் தமது மொழியை மையமாக வைத்து அது போல் இது இல்லை என்று குறை கூறுவது. இதை அராஜகம் என்று கூறாது வேறு என்ன சொல்வது. நான் இந்த நிழல்யுத்தம் படத்தை பார்த்த போது சத்தம் கேட்க முடியவில்லை. இணைய தளத்தில் தான் பாரத்தேன். எனக்கு இங்கே பேசிய மொழி முக்கியமாகப் படவில்லை. குறுந்திரைப்படம் அழகாக அதை சொல்லியிருந்தது. ஆனால் மொழி புரியவில்லை அதற்கு சப் டைட்டில் போட வேண்டும் என்று ஒரு சினிமா விமர்சகர் கூறினால் அவர் நிச்சயம் ஒரு நல்ல விமர்சகராக கருத முடியது. சினிமா மொழியை புரியதா ஒருவர் எப்படி விமர்சகராக முடியும்.

இது நமக்கு ஒரு சாபக்கேடு. ஆம் இந்த இலங்கை தமிழ் என்பது. ஐரோப்பாவில் படம் எடுக்க முனையும் பலர் அதாவது நம்மவர்கள் கூட இன்று இங்கே படமெடுத்து விட்டு இந்தியவுக்கு டப்பிங்குக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது. காரணம் இலங்கை தமிழ் சினிமாவுக்கு சரிவராதாம். சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. ஆனால் இன்றைய புலம் பெயர் சினிமா வளர்ச்சி நிச்சயம் இந்த தடையை உடைக்கும். ஆனால் சினிமா எடுப்பவர்கள் முதலில் இதனை முற்றுமுழுதாக புரிந்து கொண்டால் மாத்திரம்!!!!
Reply


Messages In This Thread
[No subject] - by Paranee - 06-16-2004, 05:24 PM
[No subject] - by Shan - 07-06-2004, 03:17 PM
[No subject] - by AJeevan - 07-06-2004, 06:56 PM
[No subject] - by Shan - 07-09-2004, 01:54 PM
[No subject] - by AJeevan - 07-14-2004, 10:42 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)