07-04-2004, 12:08 AM
kavithan Wrote:Mathivathanan Wrote:tamilini Wrote:காலம் செய்த கோலம்..... எல்லார் வீட்டிலும்.. ஓலம்....எல்லாம் ஆயுதம்தூக்கி கொண்டுவந்ததுதான்.. தற்போது கீழே வைத்தாலும் கடைசி ஒரு தலைமுறைக்காவது தொடரும்..
ஒரு தலை முறைக்கு தொடராது ,ஒரு தலை முறையும் மிஞ்சாது. புலிகள் ஆயுதத்தை வைத்தால்.
முன்னர் நடந்ததையும் நினைத்துப் பாருங்கள் .
Mathivathanan Wrote:ஆயுதம் கீழே வைத்தால் சிங்களவன் திரும்ப போக சர்வதேச அழுத்தம் இருக்கும்.. ஒரு தலைமுறைக்காவது உள்நாட்டு யுத்தம் தொடரும்.. ஆனால் ஈழ தமிழ் சமூகம் தப்பும்.. மீழ வழியுண்டு..
ஆயுதம் வைத்திருந்தால் சர்வதேச சமூகத்தின் பூரண ஆதரவு அரசாங்கத்துக்கு இருக்கும்.. ஒரு தலைமுறை யுத்தம் தொடரும்.. முழு சிங்கள் தேசமாகும்.. ஈழ தமிழ் சமூகம் இடம்பெயரவேண்டியதுதான்..
தாத்தா உதுகளை என்னென்டு சொல்லுறது.
கொஞ்ச உலக அரசியல் ஞானம் இருக்கிறதுகளோடை நாலு விசயத்தை பேசலாம் நாங்களும் புதிசா பல விசயங்களை அறியலாம்.
சரி உதை விடுவம்,
நிக்கரகுவாவில சன்டிநிஸ்ரார் விடுதலை அமைப்பு 80களில் கொஞ்சகாலம் ஆயுத போராட்டத்தை நிறுத்தி அரசியல் வேலைத்திட்டங்களை மட்டுமே முன்னெடுத்ததாக வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும்.
தாத்தா நீங்கள் சொன்ன மாதிரி புலிகளும் ஆயுதத்தை கீழே வைத்தால் உலக அரசியல் அழுத்தம் வன்னியை விட்டு கொழும்புக்கு நகரும்.
ஆனால் உதுக்கு அரசியல் தெரிஞ்சு இருக்கவேணும். சாமர்த்தியமா காய்களை நகர்த்த உலக அரசியல் சதுரங்க விதிகளை தண்ணிபட்ட பாடாக விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.
அதை விட்டுட்டு எங்கட சனத்தை சிங்கள ம்மாண்டி உங்களை பிடிச்சு தின்னபோகுது எண்டு படுபொய்யான பரப்புரைகளை இடைவிடாது தொடர்ச்சியா சொல்லி மனநோயாளியாக்கி வைச்சுக் கொண்டு எப்படி அரசியல் தீர்வு காண போயினம்.


