07-10-2003, 11:36 AM
யாழ்ப்பாண குடாநாட்டின் சுழிபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பிரதேச அரசியல் பணிமனை மூடப்பட்டுள்ளது. இங்கு பொறுப்பாளராக இருந்த அன்பரசன் தலமையிலான அரசியற்பிரிவு உறுப்பினர்கள் வன்னிக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர். புலிகளின் இந்த அலுவலகம் அண்மையில் படையினரின் சுற்றி வளைப்புக்கு இலக்காகி முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது தெரிந்ததே. மேலும் யாழ்ப்பாண குடாநாட்டில் புலிகளின் அரசியற்பிரிவு பணிமனைகள் பலவும் மூடப்பட்டு பாதுகாப்புடன் கூடிய சில இடங்களில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. அரசின் அனுமதியுடன் அரசியல் பணி புரிவதற்காக வன்னியிலிருந்து வந்தவர்கள் புலிகளால் வன்னிக்கு மீள அழைக்கப்படுகின்றனர்

