06-07-2004, 06:01 PM
சீதனம் வாங்கவிரும்பாதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் சமுதாயம் சந்தேகத்தோடு நோக்குகிறது. எனக்குத்தெரிந்த நண்பர் ஒருவர் எதுவும் வாங்காமல் திருமணம் செய்தார். அவரது பெற்றோரும் சம்மதித்தனர். திருமணத்திற்கு பின் பெண்வீட்டார் காணரமல் போய்விட்டனர். மரியாதைக்கு கூட மாப்பிள்ளைவீட்டாரைத்தொடர்புகொள்வதில்லை. சீதனம் தானே வேண்டாம் என்றோம் உறவு கூடவா வேண்டாம் என்றோம் என்று மாப்பிள்ளைவீட்டார் கவலைப்படுகின்றனர்.

