06-01-2004, 06:51 PM
நடேசனின் படுகொலை கிழக்கில் அறிஞர்களை அழித்தொழிக்கும் சதி
"நடுநிலையோடும் துணிவோடும் எவருக்கும் அஞ்சா நிலையோடும் செய்தியாளர்களுக்கு இருக்க வேண்டிய சிறப்பு இயல்புகளுடன் ஈழத்தமிழர் பிரச்சினைகளை உலகிற்கு எடுத்துரைத்த மட்டக்களப்பு செய்தியாளர் ஜி.நடேசன் வெறி கொண்ட வன்முறைக்குப் பலியானது குறித்து எனக்கு இடிவிழுந்ததுபோல உள்ளது' என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
செய்தியாளர் ஜி.நடேசன் எனக்கு நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, அவர் எழுதிய நூல்களுக்கு முகவுரைகள் எழுதி அவரது எழுத்துப் பணிக்கு ஊக்கம் கொடுத்தவனும் கூட.
ஈழத்தமிழினத்தின் நெருக்கடி மிக்க இக் காலகட்டத்தில் இப்படியான இழப்புகள் தாங்க முடியாதவைகளாகும். இதற்கு முன் கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் தம்பையாவின் மரணத்தையும் நடேசனின் மரணத்தையும் பார்க்கின்ற போது கிழக்கில் தொடர்ச்சியாக அறிஞர்கள் அழித்து ஒழிக்கப்படும் நிலையே காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
ஆனந்த சங்கரியின் அனுதாபம் :
ஊடகவியலாளர் ஜி.நடேசனின் படுகொலைச் செய்திகேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கிழக்குப் பல்கலைக்கழகப் பொருளியல் பீடத் தலைவர் அமரர் குமாரவேல் தம்பையாவின் சாம்பல் ஆறுவதற்கு முன் ஊடகவியலாளர் நடேசன் கொலை செய்யப்பட்டது தமிழ்ச் சமுதாயம் எங்கே போகின்றது என்று எண்ண வைக்கின்றது என தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிபிட்டுள்ளார்.
அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்து நடுநிலை வகிக்க வேண்டிய ஊடகவியலாளர்கள் எங்கோ தவறுசெய்துவிட்டார்களோ என்பதற்காக இது ஒரு தண்டனையாக அமைந்துவிடக்கூடாது. ஒரு மனித உரிமையைப் பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. சில படுகொலைகளைச் சரியென நியாயம் கற்பிக்கும் தலைவர்களும் மக்களும் ஊடகவியலாளர்களும் இனியாவது மனிதத்தை மதித்து அருவருக்கத்தக்க அரசியல் படுகொலைகளுக்கு என்றும் ஒரு நாகரிகமான சமூகம் அங்கீகாரம் கொடுக்காது என்பதை தெளிவுபடுத்த முன்வரவேண்டும்.
அமரத்துவமடைந்த ஜி.நடேசனின் ஆத்மாவின் பேரில் சகல தரப்பினரையும் இனியாவது கருத்துச் சுதந்திரங்களுக்கு மதிப்பளித்து ஒரு நல்ல ஆரோக்கியமான அரசியல் சூழலை எங்கள் மண்ணில் உருவாக்க ஆயுத கலாசாரத்தை நிறுத்தி உண்மையான ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களுக்கு மரணந்தான் என்றால் எமது மண்ணில் மிஞ்சுவது யார் ?
அமரர் ஜி.நடேசனை இழந்து தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வேலணை வேணியன் தனது அனுதாபச் செய்தியில் :
தமிழ் மக்களின் நலனுக்காக தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்து நின்ற சிறந்த ஊடகவியலாளர் அரசியல் விமர்சகர்,கட்டுரையாளர் வீரகேசரியின் மட்டக்களப்பு நிருபர் ஜி.நடேசனின் அகால மரணம் எவரும் எதிர்பார்க்காத ஒன்று இது அதிர்ச்சி தரும் துன்பகரமான செய்தியாகும்.
என வேலணை வேணியன் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படுகொலை ஒவ்வொரு தமிழ் மகனாலும் கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும். ஊடகவியலாளர்களைத் தாக்குவதும் கைது செய்வதும் படுகொலை செய்வதும் ஒரு அரசாங்கத்தில் அநாகரிகமான செயலாகும்.
நடேசனின் இழப்பு இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல புலம் பெயர்ந்து வாழும் உலகத் தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும். அன்னாரது குடும்பத்தினருக்கு எமது மேல் மாகாண மக்கள் முன்னணி ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வீரகேசரி
"நடுநிலையோடும் துணிவோடும் எவருக்கும் அஞ்சா நிலையோடும் செய்தியாளர்களுக்கு இருக்க வேண்டிய சிறப்பு இயல்புகளுடன் ஈழத்தமிழர் பிரச்சினைகளை உலகிற்கு எடுத்துரைத்த மட்டக்களப்பு செய்தியாளர் ஜி.நடேசன் வெறி கொண்ட வன்முறைக்குப் பலியானது குறித்து எனக்கு இடிவிழுந்ததுபோல உள்ளது' என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
செய்தியாளர் ஜி.நடேசன் எனக்கு நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, அவர் எழுதிய நூல்களுக்கு முகவுரைகள் எழுதி அவரது எழுத்துப் பணிக்கு ஊக்கம் கொடுத்தவனும் கூட.
ஈழத்தமிழினத்தின் நெருக்கடி மிக்க இக் காலகட்டத்தில் இப்படியான இழப்புகள் தாங்க முடியாதவைகளாகும். இதற்கு முன் கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் தம்பையாவின் மரணத்தையும் நடேசனின் மரணத்தையும் பார்க்கின்ற போது கிழக்கில் தொடர்ச்சியாக அறிஞர்கள் அழித்து ஒழிக்கப்படும் நிலையே காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
ஆனந்த சங்கரியின் அனுதாபம் :
ஊடகவியலாளர் ஜி.நடேசனின் படுகொலைச் செய்திகேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கிழக்குப் பல்கலைக்கழகப் பொருளியல் பீடத் தலைவர் அமரர் குமாரவேல் தம்பையாவின் சாம்பல் ஆறுவதற்கு முன் ஊடகவியலாளர் நடேசன் கொலை செய்யப்பட்டது தமிழ்ச் சமுதாயம் எங்கே போகின்றது என்று எண்ண வைக்கின்றது என தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிபிட்டுள்ளார்.
அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்து நடுநிலை வகிக்க வேண்டிய ஊடகவியலாளர்கள் எங்கோ தவறுசெய்துவிட்டார்களோ என்பதற்காக இது ஒரு தண்டனையாக அமைந்துவிடக்கூடாது. ஒரு மனித உரிமையைப் பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. சில படுகொலைகளைச் சரியென நியாயம் கற்பிக்கும் தலைவர்களும் மக்களும் ஊடகவியலாளர்களும் இனியாவது மனிதத்தை மதித்து அருவருக்கத்தக்க அரசியல் படுகொலைகளுக்கு என்றும் ஒரு நாகரிகமான சமூகம் அங்கீகாரம் கொடுக்காது என்பதை தெளிவுபடுத்த முன்வரவேண்டும்.
அமரத்துவமடைந்த ஜி.நடேசனின் ஆத்மாவின் பேரில் சகல தரப்பினரையும் இனியாவது கருத்துச் சுதந்திரங்களுக்கு மதிப்பளித்து ஒரு நல்ல ஆரோக்கியமான அரசியல் சூழலை எங்கள் மண்ணில் உருவாக்க ஆயுத கலாசாரத்தை நிறுத்தி உண்மையான ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களுக்கு மரணந்தான் என்றால் எமது மண்ணில் மிஞ்சுவது யார் ?
அமரர் ஜி.நடேசனை இழந்து தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வேலணை வேணியன் தனது அனுதாபச் செய்தியில் :
தமிழ் மக்களின் நலனுக்காக தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்து நின்ற சிறந்த ஊடகவியலாளர் அரசியல் விமர்சகர்,கட்டுரையாளர் வீரகேசரியின் மட்டக்களப்பு நிருபர் ஜி.நடேசனின் அகால மரணம் எவரும் எதிர்பார்க்காத ஒன்று இது அதிர்ச்சி தரும் துன்பகரமான செய்தியாகும்.
என வேலணை வேணியன் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படுகொலை ஒவ்வொரு தமிழ் மகனாலும் கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும். ஊடகவியலாளர்களைத் தாக்குவதும் கைது செய்வதும் படுகொலை செய்வதும் ஒரு அரசாங்கத்தில் அநாகரிகமான செயலாகும்.
நடேசனின் இழப்பு இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல புலம் பெயர்ந்து வாழும் உலகத் தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும். அன்னாரது குடும்பத்தினருக்கு எமது மேல் மாகாண மக்கள் முன்னணி ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

