Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணாவை எதிர்த்தவர் கொலை!
#39
தமிழீழ தேசியத் தலைவர், நாட்டுப்பற்றாளர் ஐp.நடேசனின் கொலை குறித்து அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டுள்ளார்

அண்மைக் காலத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அநாமதேயக் கொலைகள், கொலை மிரட்டல்கள் பற்றியும், குறிப்பாக நேற்று முன்தினம் மட்டக்களப்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐp.நடேசன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை குறித்தும் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வியொன்றிற்கு மிகுந்த விசனத்துடன் பதிலளித்த தமிழ்ச்செல்வன், தேசியத் தலைவரின் அதிர்ச்சியையும் கவலையையும் வெளிப்படுத்தினார்.

உலக வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி பீற்றர் ஹரோல்ட் அவர்களைச் சந்தித்த பின்னர், ஊடகவியலாளர்களைச் சந்தித்த சு.ப.தமிழ்ச்செல்வனிடம், சிரேஸ்ட பத்திரிகையாளர் ஐp.நடேசனின் கொலை குறித்து ஒரு நிருபர் கேட்டபோதே மிகவும் கோபத்தோடு பதிலளித்தார் தமிழ்ச்செல்வன்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

கேள்வி: தமிழ் ஊடகவியலாளர் ஜி.நடேசன் கொல்லப்பட்டிருக்கின்றார், இலங்கையில் தமிழ் தேசியத்திற்காக உழைக்கின்ற அல்லது தமிழ்த் தேசியத்திற்காக குரல் கொடுக்கின்ற ஊடகவியலாளர்கள் மட்டுமே தாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள் அவர்களை பாதுகாக்க வேண்டிய தேவை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருப்பதாக இன்று பல்வேறு ஊடகங்களில் தமிழ் ஊடகவியலாளர்கள் கருத்தை தெரிவித்திருக்கின்றார்கள். இது தொடர்பாக தங்களுடைய கருத்து என்ன?

பதில்: உண்மையிலேயே ஊடகவியலாளர்களுடைய இந்த எதிர்பார்ப்பை நாங்கள் விளங்கிக் கொள்கின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையும் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்திருக்கின்றது.

மிகவும் மூத்த பத்திரிகையாளரும் தமிழ்த் தேசியத்திற்கு உயிர் கொடுத்து தமிழ் தேசியத்தை வலியுறுத்தி உறுதியாகவும், துணிச்சலோடும் நின்று குரல் கொடுத்த ஒரு சிறந்த பத்திரிகையாளனை இன்று எங்களுடைய தேசம் இழந்து நிற்கின்றது. இதனால் எங்களுடைய தலைமைப் பீடமும் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்திருக்கின்றது. எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும் நாங்கள் தெரிவித்திருக்கின்றோம்.

உண்மையில் இந்த அடாவடித்தனமான, மோசமான செயல் மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. ஊடகவியலாளர் நடேசன் கொல்லப்பட்டது என்பது திட்டமிட்ட hPதியில் இலங்கை அரசாங்கத்தினுடையதும் அதன் படைத்தரப்பின் ஆதரவோடுதான் நடைபெற்றிருக்கின்றது.

தமிழ்த் தேசியத்தின் உயர்ச்சி - வளர்ச்சி - எழுச்சியை நசுக்கும் நோக்கோடு இன்று உறுதியடைந்திருக்கின்ற தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்துகின்ற நோக்கோடு மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தில் அண்மைக் காலமாக நடைபெற்ற நிகழ்வுகள் அதன் காரணமாகவே நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாகத்தான், அந்த படைத்தரப்பின் முழு ஆதரவோடுதான் இந்த கொலை நடந்திருக்கின்றது.

நாங்கள் இது சம்பந்தமாக நோர்வேத் தரப்பிற்கும், கண்காணிப்புக் குழுவிற்கும் மிக கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கின்றோம். இது நடைபெற்றது இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம் மட்டுமல்ல, இராணுவத்தின் மிகவும் கண்காணிப்புக்கு உட்பட்ட அவர்களுடைய செறிவாக முகாம்கள் அமைந்த பலப்படுத்தப்பட்ட பிரதேசத்தில்தான் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆகவே இது நிச்சயமாக படைத்தரப்பினுடைய ஆதரவோடுதான் நடைபெற்றிருக்கின்றது. அண்மைய நாட்களாக இராணுவ புலனாய்வு அமைப்பினரால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வைத்துப் பார்க்கின்ற போது இப்படியான கொலைகள் தொடருமென்கிற செய்தியை அந்த துண்டுப் பிரசுரங்கள் ஊடாக மக்கள் மத்தியில் விநியோகித்திருந்தார்கள்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற போது எங்களால் முழுமையாக ஊகிக்க கூடியதாக இருக்கின்றது. இது படைத்தரப்பினுடைய முழு ஆதரவோடுதான் நடந்திருக்கின்றது. குறிப்பாக தேசத்துரோகி கருணாவோடும், அவரோடு வெளியேறிய சில துரோகிகளையும் படைத்தரப்பு பாதுகாத்து வைத்திருக்கின்றது. அதுபோல ஏனைய ஆயுதக் குழுக்களையும் பாதுகாத்து அங்கே வைத்திருக்கின்றது. அவர்கள் ஆயுதங்களோடு அண்மைக் காலத்தில் மட்டக்களப்பு நகர்ப்பிரதேசங்களில் நடமாடுவதாக நாங்கள் அறிந்து அது சம்பந்தமாக படைத்தரப்புக்கும் கண்காணிப்புக் குழுவிற்கும் அறிவுறுத்தியிருக்கின்றோம்.

இவ்வளவு எச்சரிக்கைகளையும் இவ்வளவு அறிவுறுத்தல்களையும் கொடுத்த நிலையிலும் அங்கே முழு அளவில் பாதுகாப்பு நிலையை ஏற்படுத்தாதது எமக்கு வருத்தம் தருகின்றது. இது வேதனைக்குரியதும் கூட. திட்டமிட்ட hPதியில் தமிழ்த் தேசியத்தினுடைய வளர்ச்சியை சீர்குலைக்கும் நோக்கில் செயற்படுத்தப்படும் கொலைகளாகத்தான் இவற்றை நாங்கள் பார்க்கின்றோம். தொடர்ந்து இடம்பெறும் இவ்வன்முறைகளை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதனை ஒரு போதும் எமது மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். ஆகவே மிக விரைவில் இதற்கு தீர்க்கமான முடிவுகள் எடுக்க வேண்டும். அதுதான் எங்கள் மக்களுடைய எதிர்பார்ப்பாகவும், ஊடகவியலாளர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.

இப்படியான கொலைகள் தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கும் விடிவிற்கும் தடையாக இருக்கப் போவதில்லை. இதற்குக் காரணமானவர்கள் நிச்சயமாக அந்த விளைவுகளை சந்தித்தே ஆவார்கள். எங்களுடைய ஊடகவியலாளருடைய இழப்பு எங்களால் தாங்கிக் கொள்ள முடியாததாக இருந்தாலும், நிச்சயமாக ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் துணிவோடு தங்களுடைய தமிழ்த் தேசியத்தின் விடிவிற்காக ஓங்கி குரல் கொடுக்கின்ற அந்த நிலை தொடர வேண்டுமென்பதுதான் எங்களுடைய விருப்பம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் நீண்ட கரிசனை கொண்டிருக்கின்றார்கள் இது சம்பந்தமாக நடவடிக்கைகளை மிக விரைவில் முன்னெடுப்பார்கள். எங்களுடைய தேசியத் தலைவரும் இதில் மிகவும் வேதனையடைந்திருக்கின்றார். அவருடைய சார்பாகவும் அமரர்.திரு.ஐp.நடேசன் அவர்களது குடும்பத்தினருக்கும் ஊடகவியலாளர் சமூகத்திற்கும் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 05-31-2004, 01:19 PM
[No subject] - by Mathan - 05-31-2004, 01:21 PM
[No subject] - by Mathan - 05-31-2004, 01:24 PM
Re: adsd - by Mathivathanan - 05-31-2004, 01:25 PM
[No subject] - by Eelavan - 05-31-2004, 01:55 PM
[No subject] - by Mathivathanan - 05-31-2004, 02:10 PM
[No subject] - by Eelavan - 05-31-2004, 03:25 PM
[No subject] - by Mathan - 05-31-2004, 04:30 PM
[No subject] - by Mathivathanan - 05-31-2004, 06:14 PM
[No subject] - by Mathan - 05-31-2004, 06:53 PM
[No subject] - by Mathan - 05-31-2004, 06:54 PM
[No subject] - by Mathan - 05-31-2004, 06:59 PM
[No subject] - by Mathivathanan - 05-31-2004, 07:18 PM
[No subject] - by tamilini - 05-31-2004, 10:21 PM
[No subject] - by Kanthar - 05-31-2004, 10:59 PM
[No subject] - by Mathivathanan - 05-31-2004, 11:54 PM
[No subject] - by kuruvikal - 06-01-2004, 12:13 AM
[No subject] - by kuruvikal - 06-01-2004, 12:25 AM
[No subject] - by Mathivathanan - 06-01-2004, 12:30 AM
[No subject] - by kuruvikal - 06-01-2004, 12:44 AM
[No subject] - by Mathivathanan - 06-01-2004, 01:01 AM
[No subject] - by kuruvikal - 06-01-2004, 01:16 AM
[No subject] - by Mathivathanan - 06-01-2004, 02:25 AM
[No subject] - by Eelavan - 06-01-2004, 06:23 AM
[No subject] - by Eelavan - 06-01-2004, 06:30 AM
[No subject] - by kuruvikal - 06-01-2004, 12:16 PM
[No subject] - by kuruvikal - 06-01-2004, 12:30 PM
[No subject] - by Mathivathanan - 06-01-2004, 01:00 PM
[No subject] - by Eelavan - 06-01-2004, 01:59 PM
[No subject] - by Mathivathanan - 06-01-2004, 02:21 PM
[No subject] - by kuruvikal - 06-01-2004, 03:12 PM
Re: adsd - by shanthy - 06-01-2004, 04:14 PM
[No subject] - by Eelavan - 06-01-2004, 04:24 PM
[No subject] - by Eelavan - 06-01-2004, 04:26 PM
[No subject] - by Mathivathanan - 06-01-2004, 05:10 PM
[No subject] - by Mathivathanan - 06-01-2004, 05:32 PM
[No subject] - by Rajan - 06-01-2004, 05:47 PM
[No subject] - by Mathan - 06-01-2004, 05:56 PM
[No subject] - by kuruvikal - 06-01-2004, 06:27 PM
[No subject] - by Mathivathanan - 06-01-2004, 06:43 PM
[No subject] - by Mathan - 06-01-2004, 06:48 PM
[No subject] - by Mathan - 06-01-2004, 06:51 PM
[No subject] - by Mathan - 06-01-2004, 06:52 PM
[No subject] - by Mathivathanan - 06-01-2004, 07:06 PM
[No subject] - by Mathivathanan - 06-01-2004, 07:20 PM
[No subject] - by kuruvikal - 06-01-2004, 08:30 PM
[No subject] - by Mathivathanan - 06-01-2004, 10:33 PM
[No subject] - by Mathan - 06-02-2004, 03:00 AM
[No subject] - by Mathan - 06-02-2004, 03:05 AM
[No subject] - by Mathivathanan - 06-02-2004, 04:19 AM
[No subject] - by Mathan - 06-02-2004, 10:29 AM
[No subject] - by Eelavan - 06-02-2004, 02:36 PM
[No subject] - by Eelavan - 06-02-2004, 02:39 PM
[No subject] - by Mathan - 06-02-2004, 10:13 PM
[No subject] - by Mathivathanan - 06-03-2004, 12:02 AM
[No subject] - by Mathan - 06-03-2004, 02:23 AM
[No subject] - by Mathan - 06-03-2004, 02:28 AM
[No subject] - by Eelavan - 06-03-2004, 06:40 AM
[No subject] - by Mathivathanan - 06-03-2004, 11:13 AM
[No subject] - by Eelavan - 06-03-2004, 01:21 PM
[No subject] - by Mathivathanan - 06-03-2004, 03:47 PM
[No subject] - by Eelavan - 06-03-2004, 04:21 PM
[No subject] - by Mathivathanan - 06-03-2004, 04:35 PM
[No subject] - by Eelavan - 06-05-2004, 05:53 AM
[No subject] - by Mathivathanan - 06-05-2004, 07:20 AM
[No subject] - by yarlmohan - 06-08-2004, 08:39 AM
[No subject] - by Eelavan - 06-08-2004, 02:44 PM
[No subject] - by Mathivathanan - 06-08-2004, 05:30 PM
[No subject] - by Eelavan - 06-08-2004, 05:56 PM
[No subject] - by Mathivathanan - 06-08-2004, 06:11 PM
[No subject] - by tamilini - 06-08-2004, 09:03 PM
[No subject] - by Eelavan - 06-09-2004, 04:59 AM
[No subject] - by Mathivathanan - 06-09-2004, 04:09 PM
[No subject] - by Eelavan - 06-10-2004, 11:23 AM
[No subject] - by Kanthar - 06-10-2004, 12:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)