06-01-2004, 04:53 AM
என் படத்தில் நடிக்க மறுத்தார் கமல்!
ஷாருக்கான் புழுக்கம்
கிரேட்! சிங்கப்பூரில் நடந்த விருது வழங்கும் விழாவை அந்த ஊரின் முன்னணிப் பத்திரிகையான ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் இப்படித்தான் வர்ணித்திருந்தது. வெளிநாடுகளில் இந்திய சினிமாவைப் பிரபலப்படுத்த வேண்டும். ஹாலிவுட் போல பாலிவுட்டையும் உலக அரங்கில் முன்னிறுத்தவேண்டும் என்பதே நோக்கம். அமிதாப்பச்சன் முதல் அமிர்தா அரோரா வரை, ஷாரூக்கான் முதல் ஷர்மிளா டாகூரின் பெண் ஷோஹா அலிகான் வரை... மும்பைத் திரையுலகமே ஒட்டுமொத்தமாக சிங்கப்பூரில்!
சிங்கப்பூர் இன்டோர் ஸ்டேடியத்தில் அந்த நாட்டு ஜனாதிபதி நாதன் முன்கூட்டியே தனது அமைச்சரவை சகாக்களோடு வந்து, இந்திய நட்சத்திரங்களைக் கைகுலுக்கி வரவேற்றார். சிங்கப்பூர் அரசாங்கம் நம்மவர்களை வெறும் நட்சத்திரங்களாகப் பார்க்கவில்லை... கலாசாரத் தூதுவர்களாகவே பார்க்கிறது!
<img src='http://www.vikatan.com/av/2004/jun/06062004/p12.jpg' border='0' alt='user posted image'>
Ôவன் மெட்ராஸ் பையன் சார்!
மணிரத்னத்தின் யுவா, ஆய்த எழுத்து இரண்டில் எது சூப்பர்? அடியாள் காரெக்டரில் மாதவன் நடிப்பு பிரமாதமா அல்லது அபிஷேக் பச்சன் பின்னியிருந்தாரா? ரொம்ப அழகு யார்? த்ரிஷாவா, கரீனா கபூரா? மணிரத்னத்தையே நடுவராக நடுவில் உட்காரவைத்து அவரது யுவா, ஆய்த எழுத்து படங்களில் நடித்த நட்சத்திரங்களைக் கொண்டே விறுவிறுப்பானதொரு பட்டிமன்றம் நடத்தியது மாதிரி இருந்தது, லீடோ மல்டிபிளக்ஸ் தியேட்டரில் நடந்த இந்தப் படங்களுக்கான பிரஸ்மீட்!
ஆய்த எழுத்து க்காக வக்காலத்து வாங்கிப் பேச மாதவன், சித்தார்த் என இரண்டே பேர்தான்! (சூர்யா ஏன் வரவில்லை?) ஆனால், யுவாவுக்கோ அபிஷேக் பச்சன், அஜய் தேவ்கன், விவேக் ஓபராய், ஈஷா தியோல், கரீனா கபூர், ராணி முகர்ஜி என்று ஒரு பெரிய பட்டாளமே இருந்தது. பிரஸ்மீட்டின் இடை இடையேவிவேக் ஓபராய் அசத்தலாக தமிழில் பொளந்து கட்ட, இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட நிருபர்கள், Ôஎன்ன விவேக்... உங்களுக்குத் தமிழ் தெரியுமா? என்று கேட்டார்கள். விவேக் ஓபராயை முந்திக் கொண்டு ஈஷா தியோல், இவனுக்கு நான்தான் தமிழ் சொல்லித் தந்தேன் என்று பெருமை கொண்டாட, இல்லை சார்... ஈஷா டூப்பு விடுது! விவேக் நம்ம மெட்ராஸ் பையன்தான் சார்! என்று மாதவன் சிரித்தார்.
<img src='http://www.vikatan.com/av/2004/jun/06062004/p14.jpg' border='0' alt='user posted image'>
க்ளைமாக்ஸ்...
மூன்று நாட்கள் நடந்த இந்த பாலிவுட் திரு விழாவின் க்ளைமாக்ஸ்... சிறந்த நடிகையாக பிரீத்தி ஜிந்தாவையும் சிறந்த நடிகராக ஹிரிதிக் ரோஷனையும் தேர்வு செய்து விருது வழங்கி னார்கள். நாளை என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இன்று சந்தோஷமாக இரு! என்று சொல்லும் கல்ஹோ நாஹோ படத்துக்கு, சிறந்த திரைப்படத் துக்கான விருது கிடைத்தது. Ôஎன்ன காரணமோ... தெரியவில்லை!ÕÕ
ஸ்டைல், டான்ஸ், நகைச்சுவை..என்று சிங்கப்பூர் ரசிகர்களை மட்டும் அல்ல, நிருபர்களையும் கவர்ந்தவர் ஷாரூக்கான்.
பொண்டாட்டி, புள்ளைங்களோட கொஞ்சி விளையாடியே பல மாசம் ஆச்சு! பாருங்க, இன்னிக்கு என் பொண்ணுக்கு பர்த் டே! அவ இப்ப அவங்க அம்மாவோட லண்டன்ல இருக்கா. நான் இதோ இங்கே இருக்கேன். என்ன பண்றது..! என்று ஷாரூக் முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டு சொல்ல, கூடியிருந்தவர்கள் அத்தனை பேரும் உச் கொட்டினார்கள். கமல்ஹாசனைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டபோது, அவர் மாபெரும் கலைஞர். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருடைய ஹே ராம் படத்தில் நடித்தேன். அதே போல் என்னுடைய மே ஹோ னா படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கேட்டேன். என்ன காரணமோ தெரியவில்லை... இதோ அதோ என்று இழுத்தடித்துக்கொண்டே போனவர் கடைசியில் ஏதோ காரணம் சொல்லி, முடியாது என்று மறுத்துவிட்டார். அதில் எனக்கு மிகவும் வருத்தம்தான்! என்றார் ஷாரூக் தொண்டை கரகரக்க.
<img src='http://www.vikatan.com/av/2004/jun/06062004/p15.jpg' border='0' alt='user posted image'>
இந்திய சினிமாக்களைப் பற்றித் தெரிந்திராத சீன, மலாய் இன மக்களுக்கு, இந்தி சினிமா வளர்ந்த கதையை நான்கரை மணிநேரத்தில் சொல்லிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு நிகழ்ச்சி. அதன்படி அமிதாப் பச்சன், திலீப்குமார், ராஜேஷ்கன்னா, மதுபாலா என இந்தி சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய மூத்த தலைமுறைக்குப் புகழ்மாலை அணிவிக்கும் விதமாக, அவர்களின் ஹிட் பாடல்களுக்கு அந்தந்த நட்சத்திரங் களின் பாணியிலேயே டான்ஸ் ஆடினார்கள் இளைய தலைமுறையைச் சேர்ந்த விவேக் ஓபராய், ஷாரூக்கான், பிரீத்தி ஜிந்தா ஆகியோர். கூடவே, பக்கவாட்டில் இருந்த ஒரு திரையில் சாதனை படைத்த அந்த சினிமா பாடல் காட்சிகளும் திரையிடப்பட்டன. தள்ளாடியபடி நடந்து வந்த அந்தக் காலத்து கவர்ச்சிக் கன்னி ஹெலனைக் கைத்தாங்கலாக மேடைக்கு அழைத்து வந்தார்கள். அவரது அந்தக் காலத்துப் பாடல்களுக்கு இன்றைய முன்னணி நடிகைகள் அத்தனை பேரும் டான்ஸ் ஆட, ஹெலனால் அந்தத் தள்ளாத வயதி லும் ஆடாமல் இருக்க முடியவில்லை.
தயாராகிக்கொண்டிருக்கும் தங்கள் படங்களைப் பற்றி சிங்கப்பூர் ரசிகர்களுக்கு டிரெய்லர் போட்டுக்காட்டி விளம்பரம் செய்ய, இந்தியாவிலிருந்து ஆறு சினிமா டீம் ஸ்பெஷலாக சிங்கப்பூர் வந்திருந்தது. அனில் கபூர், சஞ்சய் தத், ஷமீரா ரெட்டி ஆகியோர் நடிக்கும் முசாப்பர் படமும் அவற்றில் ஒன்று. இந்த டிரெய்லரில் இடம்பெற்றிருந்த முத்தக்காட்சிகளைப் பார்த்துவிட்டு ஷமீரா ரெட்டியிடம் சீன நிருபர் ஒருவர், இந்தக் காட்சியில் நடிக்க எத்தனை தடவை ரிகர்ஸல் பார்த்தீர்கள்? என்று கேட்க, ஸாரி! எண்ணிக்கை நினைவில்லை! என்றார் ஷமீரா கூலாக!
Vikatan
ஷாருக்கான் புழுக்கம்
கிரேட்! சிங்கப்பூரில் நடந்த விருது வழங்கும் விழாவை அந்த ஊரின் முன்னணிப் பத்திரிகையான ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் இப்படித்தான் வர்ணித்திருந்தது. வெளிநாடுகளில் இந்திய சினிமாவைப் பிரபலப்படுத்த வேண்டும். ஹாலிவுட் போல பாலிவுட்டையும் உலக அரங்கில் முன்னிறுத்தவேண்டும் என்பதே நோக்கம். அமிதாப்பச்சன் முதல் அமிர்தா அரோரா வரை, ஷாரூக்கான் முதல் ஷர்மிளா டாகூரின் பெண் ஷோஹா அலிகான் வரை... மும்பைத் திரையுலகமே ஒட்டுமொத்தமாக சிங்கப்பூரில்!
சிங்கப்பூர் இன்டோர் ஸ்டேடியத்தில் அந்த நாட்டு ஜனாதிபதி நாதன் முன்கூட்டியே தனது அமைச்சரவை சகாக்களோடு வந்து, இந்திய நட்சத்திரங்களைக் கைகுலுக்கி வரவேற்றார். சிங்கப்பூர் அரசாங்கம் நம்மவர்களை வெறும் நட்சத்திரங்களாகப் பார்க்கவில்லை... கலாசாரத் தூதுவர்களாகவே பார்க்கிறது!
<img src='http://www.vikatan.com/av/2004/jun/06062004/p12.jpg' border='0' alt='user posted image'>
Ôவன் மெட்ராஸ் பையன் சார்!
மணிரத்னத்தின் யுவா, ஆய்த எழுத்து இரண்டில் எது சூப்பர்? அடியாள் காரெக்டரில் மாதவன் நடிப்பு பிரமாதமா அல்லது அபிஷேக் பச்சன் பின்னியிருந்தாரா? ரொம்ப அழகு யார்? த்ரிஷாவா, கரீனா கபூரா? மணிரத்னத்தையே நடுவராக நடுவில் உட்காரவைத்து அவரது யுவா, ஆய்த எழுத்து படங்களில் நடித்த நட்சத்திரங்களைக் கொண்டே விறுவிறுப்பானதொரு பட்டிமன்றம் நடத்தியது மாதிரி இருந்தது, லீடோ மல்டிபிளக்ஸ் தியேட்டரில் நடந்த இந்தப் படங்களுக்கான பிரஸ்மீட்!
ஆய்த எழுத்து க்காக வக்காலத்து வாங்கிப் பேச மாதவன், சித்தார்த் என இரண்டே பேர்தான்! (சூர்யா ஏன் வரவில்லை?) ஆனால், யுவாவுக்கோ அபிஷேக் பச்சன், அஜய் தேவ்கன், விவேக் ஓபராய், ஈஷா தியோல், கரீனா கபூர், ராணி முகர்ஜி என்று ஒரு பெரிய பட்டாளமே இருந்தது. பிரஸ்மீட்டின் இடை இடையேவிவேக் ஓபராய் அசத்தலாக தமிழில் பொளந்து கட்ட, இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட நிருபர்கள், Ôஎன்ன விவேக்... உங்களுக்குத் தமிழ் தெரியுமா? என்று கேட்டார்கள். விவேக் ஓபராயை முந்திக் கொண்டு ஈஷா தியோல், இவனுக்கு நான்தான் தமிழ் சொல்லித் தந்தேன் என்று பெருமை கொண்டாட, இல்லை சார்... ஈஷா டூப்பு விடுது! விவேக் நம்ம மெட்ராஸ் பையன்தான் சார்! என்று மாதவன் சிரித்தார்.
<img src='http://www.vikatan.com/av/2004/jun/06062004/p14.jpg' border='0' alt='user posted image'>
க்ளைமாக்ஸ்...
மூன்று நாட்கள் நடந்த இந்த பாலிவுட் திரு விழாவின் க்ளைமாக்ஸ்... சிறந்த நடிகையாக பிரீத்தி ஜிந்தாவையும் சிறந்த நடிகராக ஹிரிதிக் ரோஷனையும் தேர்வு செய்து விருது வழங்கி னார்கள். நாளை என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இன்று சந்தோஷமாக இரு! என்று சொல்லும் கல்ஹோ நாஹோ படத்துக்கு, சிறந்த திரைப்படத் துக்கான விருது கிடைத்தது. Ôஎன்ன காரணமோ... தெரியவில்லை!ÕÕ
ஸ்டைல், டான்ஸ், நகைச்சுவை..என்று சிங்கப்பூர் ரசிகர்களை மட்டும் அல்ல, நிருபர்களையும் கவர்ந்தவர் ஷாரூக்கான்.
பொண்டாட்டி, புள்ளைங்களோட கொஞ்சி விளையாடியே பல மாசம் ஆச்சு! பாருங்க, இன்னிக்கு என் பொண்ணுக்கு பர்த் டே! அவ இப்ப அவங்க அம்மாவோட லண்டன்ல இருக்கா. நான் இதோ இங்கே இருக்கேன். என்ன பண்றது..! என்று ஷாரூக் முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டு சொல்ல, கூடியிருந்தவர்கள் அத்தனை பேரும் உச் கொட்டினார்கள். கமல்ஹாசனைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டபோது, அவர் மாபெரும் கலைஞர். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருடைய ஹே ராம் படத்தில் நடித்தேன். அதே போல் என்னுடைய மே ஹோ னா படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கேட்டேன். என்ன காரணமோ தெரியவில்லை... இதோ அதோ என்று இழுத்தடித்துக்கொண்டே போனவர் கடைசியில் ஏதோ காரணம் சொல்லி, முடியாது என்று மறுத்துவிட்டார். அதில் எனக்கு மிகவும் வருத்தம்தான்! என்றார் ஷாரூக் தொண்டை கரகரக்க.
<img src='http://www.vikatan.com/av/2004/jun/06062004/p15.jpg' border='0' alt='user posted image'>
இந்திய சினிமாக்களைப் பற்றித் தெரிந்திராத சீன, மலாய் இன மக்களுக்கு, இந்தி சினிமா வளர்ந்த கதையை நான்கரை மணிநேரத்தில் சொல்லிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு நிகழ்ச்சி. அதன்படி அமிதாப் பச்சன், திலீப்குமார், ராஜேஷ்கன்னா, மதுபாலா என இந்தி சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய மூத்த தலைமுறைக்குப் புகழ்மாலை அணிவிக்கும் விதமாக, அவர்களின் ஹிட் பாடல்களுக்கு அந்தந்த நட்சத்திரங் களின் பாணியிலேயே டான்ஸ் ஆடினார்கள் இளைய தலைமுறையைச் சேர்ந்த விவேக் ஓபராய், ஷாரூக்கான், பிரீத்தி ஜிந்தா ஆகியோர். கூடவே, பக்கவாட்டில் இருந்த ஒரு திரையில் சாதனை படைத்த அந்த சினிமா பாடல் காட்சிகளும் திரையிடப்பட்டன. தள்ளாடியபடி நடந்து வந்த அந்தக் காலத்து கவர்ச்சிக் கன்னி ஹெலனைக் கைத்தாங்கலாக மேடைக்கு அழைத்து வந்தார்கள். அவரது அந்தக் காலத்துப் பாடல்களுக்கு இன்றைய முன்னணி நடிகைகள் அத்தனை பேரும் டான்ஸ் ஆட, ஹெலனால் அந்தத் தள்ளாத வயதி லும் ஆடாமல் இருக்க முடியவில்லை.
தயாராகிக்கொண்டிருக்கும் தங்கள் படங்களைப் பற்றி சிங்கப்பூர் ரசிகர்களுக்கு டிரெய்லர் போட்டுக்காட்டி விளம்பரம் செய்ய, இந்தியாவிலிருந்து ஆறு சினிமா டீம் ஸ்பெஷலாக சிங்கப்பூர் வந்திருந்தது. அனில் கபூர், சஞ்சய் தத், ஷமீரா ரெட்டி ஆகியோர் நடிக்கும் முசாப்பர் படமும் அவற்றில் ஒன்று. இந்த டிரெய்லரில் இடம்பெற்றிருந்த முத்தக்காட்சிகளைப் பார்த்துவிட்டு ஷமீரா ரெட்டியிடம் சீன நிருபர் ஒருவர், இந்தக் காட்சியில் நடிக்க எத்தனை தடவை ரிகர்ஸல் பார்த்தீர்கள்? என்று கேட்க, ஸாரி! எண்ணிக்கை நினைவில்லை! என்றார் ஷமீரா கூலாக!
Vikatan
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

