05-31-2004, 11:23 AM
[align=center:add104f7ba]<img src='http://www.kumudam.com/reporter/030604/pg2a-t.jpg' border='0' alt='user posted image'>[/align:add104f7ba]
சென்னை போன்ற பெரிய நகரங்களிலுள்ள பெண்கள் இப்போது அச்சத்துடன் உச்சரிக்க ஆரம்பித்திருக்கும் வார்த்தை இது.
ஓட்டல் குளியலறைகள், ஜவுளிக்கடைகளில் உள்ள உடைமாற்றும் அறை போன்றவற்றில் நுழையும் பெண்கள், தாழ்ப்பாள் சரியாகப் போடப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பதைவிட, அங்கிருக்கும் கண்ணாடியை ஒருமுறை செக் பண்ணிவிட்டு ஆடை களைய ஆரம்பிப்பது நல்லது!
பெண்களின் அழகை ஒளிந்திருந்து பார்ப்பதற்காக, கதவில் ஓட்டை போடுவது, சாவித் துவாரத்தைப் பயன்படுத்துவது என்பதெல்லாம் பழைய டெக்னிக்! இப்போது முகம்பார்க்கும் கண்ணாடியே போதுமானது! இது ஒரு ஸ்பெஷல் கண்ணாடி. 'டூ வே மிரர்' என்றழைக்கப்படும் இக்கண்ணாடி, உள்ளதை உள்ளபடி காட்டிவிடும்!
இந்தக் கண்ணாடி, பார்ப்பதற்கு வழக்கமான முகம் பார்க்கும் கண்ணாடி போல்தான் இருக்கும். எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால், கண்ணாடிக்குப் பின்புறமிருந்து வேறொருவர் நம்மை முழுவதுமாகப் பார்க்கலாம்! ஆனால், நமக்கு நமது உடல் மட்டும்தான் தெரியும். கண்ணாடிக்குப் பின்னால் இருப்பவர் தெரிய மாட்டார். கார்களில் சன் கண்ட்ரோல் ஃபிலிம் ஒட்டியிருப்பார்களே அதேபோல்தான்!
வெளிநாடுகளில் சிறைக்கைதி களின் நடவடிக்கையைக் கண்காணிக்கவும், மனோதத்துவ ஆராய்ச்சிக்காகவும் இம் மாதிரியான கண்ணாடிகளைப் பயன்படுத்துகின்றனர். இக் கண்ணாடியைத்தான் செக்ஸ் வக்கிரம் பிடித்த சிலர் இப்படிப் பயன்படுத்தி விடுகிறார்கள்.
சென்னையிலுள்ள பெண்களிடையேயும் இதுபற்றிய சந்தேகங்கள் இப்போது பரவலாக எழத் தொடங்கியிருக்கின்றன. ஈமெயில்களில் 'ஜாக்கிரதை' என்று உஷார்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.
குற்றச்சாட்டுகளும் எச்சரிக்கைகளும் ஒருபுறமிருக்கட்டும், சென்னையில் இந்த 'டூ வே மிரர்' கிடைக்கிறதா என்பதையறிய கண்ணாடி வியாபாரத்திற்குப் பெயர்பெற்ற பாரிமுனையிலுள்ள தேவராஜ முதலித் தெருவிலுள்ள ஒரு கண்ணாடி கடைக்காரரிடம் விசாரித்தோம்.
"ஆமாங்க! இப்படி ஒரு கண்ணாடி இருக்குது! ஆனா, இந்தியாவில் யாரும் இதைத் தயாரிக்கிறதில்லை. வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதியாகுது. சாதாரண கண்ணாடிக்கும் இந்தக் கண்ணாடிக்கும் வித்தியாசமே தெரியாது. ஆனால், விலைதான் ஜாஸ்தி. சென்னையில் எங்கேயும் இந்தக் கண்ணாடியை ஸ்டாக் வச்சுக்கிறதில்லை. தேவைன்னு கேட்டால் மும்பையிலிருந்து வரவழைச்சுக் கொடுக்கிறோம்" என்று சொல்லி, அதிர்ச்சியை அதிகமாக்கினார் அவர்.
சரி, அறையின் உள்ளே மாட்டியிருப்பது சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடியா அல்லது வில்லங்க கண்ணாடியா என்பதை எப்படித்தான் கண்டுபிடிப்பது?
மிகச் சுலபமான வழி ஒன்று இருக்கிறது. உங்கள் ஆள்காட்டி விரலைக் கொண்டு கண்ணாடியைத் தொடுங்கள். உங்கள் விரலின் நகத்திற்கும் கண்ணாடியிலுள்ள பிம்ப நகத்திற்கும் இடையே இடைவெளி இருந்தால் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். கண்ணாடி நல்ல கண்ணாடிதான்! ஆனால், பிம்பத்திற்கும் நிஜத்திற்கும் இடைவெளியின்றி ஒட்டியதுபோல தோற்றமளித்தால் வெளியே ஓடிவந்துவிடுங்கள். அது நிச்சயம் வில்லங்க கண்ணாடிதான்! உலகம் முழுக்க கண்ணாடியைப் பரிசோதிக்க இந்த ஒரே ஒரு சோதனைதான் இருக்கிறது!
உஷார்! உஷார்!!
படம்: புதூர் சரவணன்
Kumudam.com
சென்னை போன்ற பெரிய நகரங்களிலுள்ள பெண்கள் இப்போது அச்சத்துடன் உச்சரிக்க ஆரம்பித்திருக்கும் வார்த்தை இது.
ஓட்டல் குளியலறைகள், ஜவுளிக்கடைகளில் உள்ள உடைமாற்றும் அறை போன்றவற்றில் நுழையும் பெண்கள், தாழ்ப்பாள் சரியாகப் போடப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பதைவிட, அங்கிருக்கும் கண்ணாடியை ஒருமுறை செக் பண்ணிவிட்டு ஆடை களைய ஆரம்பிப்பது நல்லது!
பெண்களின் அழகை ஒளிந்திருந்து பார்ப்பதற்காக, கதவில் ஓட்டை போடுவது, சாவித் துவாரத்தைப் பயன்படுத்துவது என்பதெல்லாம் பழைய டெக்னிக்! இப்போது முகம்பார்க்கும் கண்ணாடியே போதுமானது! இது ஒரு ஸ்பெஷல் கண்ணாடி. 'டூ வே மிரர்' என்றழைக்கப்படும் இக்கண்ணாடி, உள்ளதை உள்ளபடி காட்டிவிடும்!
இந்தக் கண்ணாடி, பார்ப்பதற்கு வழக்கமான முகம் பார்க்கும் கண்ணாடி போல்தான் இருக்கும். எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால், கண்ணாடிக்குப் பின்புறமிருந்து வேறொருவர் நம்மை முழுவதுமாகப் பார்க்கலாம்! ஆனால், நமக்கு நமது உடல் மட்டும்தான் தெரியும். கண்ணாடிக்குப் பின்னால் இருப்பவர் தெரிய மாட்டார். கார்களில் சன் கண்ட்ரோல் ஃபிலிம் ஒட்டியிருப்பார்களே அதேபோல்தான்!
வெளிநாடுகளில் சிறைக்கைதி களின் நடவடிக்கையைக் கண்காணிக்கவும், மனோதத்துவ ஆராய்ச்சிக்காகவும் இம் மாதிரியான கண்ணாடிகளைப் பயன்படுத்துகின்றனர். இக் கண்ணாடியைத்தான் செக்ஸ் வக்கிரம் பிடித்த சிலர் இப்படிப் பயன்படுத்தி விடுகிறார்கள்.
சென்னையிலுள்ள பெண்களிடையேயும் இதுபற்றிய சந்தேகங்கள் இப்போது பரவலாக எழத் தொடங்கியிருக்கின்றன. ஈமெயில்களில் 'ஜாக்கிரதை' என்று உஷார்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.
குற்றச்சாட்டுகளும் எச்சரிக்கைகளும் ஒருபுறமிருக்கட்டும், சென்னையில் இந்த 'டூ வே மிரர்' கிடைக்கிறதா என்பதையறிய கண்ணாடி வியாபாரத்திற்குப் பெயர்பெற்ற பாரிமுனையிலுள்ள தேவராஜ முதலித் தெருவிலுள்ள ஒரு கண்ணாடி கடைக்காரரிடம் விசாரித்தோம்.
"ஆமாங்க! இப்படி ஒரு கண்ணாடி இருக்குது! ஆனா, இந்தியாவில் யாரும் இதைத் தயாரிக்கிறதில்லை. வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதியாகுது. சாதாரண கண்ணாடிக்கும் இந்தக் கண்ணாடிக்கும் வித்தியாசமே தெரியாது. ஆனால், விலைதான் ஜாஸ்தி. சென்னையில் எங்கேயும் இந்தக் கண்ணாடியை ஸ்டாக் வச்சுக்கிறதில்லை. தேவைன்னு கேட்டால் மும்பையிலிருந்து வரவழைச்சுக் கொடுக்கிறோம்" என்று சொல்லி, அதிர்ச்சியை அதிகமாக்கினார் அவர்.
சரி, அறையின் உள்ளே மாட்டியிருப்பது சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடியா அல்லது வில்லங்க கண்ணாடியா என்பதை எப்படித்தான் கண்டுபிடிப்பது?
மிகச் சுலபமான வழி ஒன்று இருக்கிறது. உங்கள் ஆள்காட்டி விரலைக் கொண்டு கண்ணாடியைத் தொடுங்கள். உங்கள் விரலின் நகத்திற்கும் கண்ணாடியிலுள்ள பிம்ப நகத்திற்கும் இடையே இடைவெளி இருந்தால் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். கண்ணாடி நல்ல கண்ணாடிதான்! ஆனால், பிம்பத்திற்கும் நிஜத்திற்கும் இடைவெளியின்றி ஒட்டியதுபோல தோற்றமளித்தால் வெளியே ஓடிவந்துவிடுங்கள். அது நிச்சயம் வில்லங்க கண்ணாடிதான்! உலகம் முழுக்க கண்ணாடியைப் பரிசோதிக்க இந்த ஒரே ஒரு சோதனைதான் இருக்கிறது!
உஷார்! உஷார்!!
படம்: புதூர் சரவணன்
Kumudam.com

