05-26-2004, 05:55 PM
புலிகளுடன் இந்திரா காந்தி கொண்டிருந்த நிலைப்பாட்டை பேண சோனியா காந்தி விருப்பம் தெரிவிப்பு?
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இந்திரா காந்தி கொண்டிருந்த சமரச நிலையை ஒத்த தன்மையைக் கைக்கொள்வதற்கு சோனியா காந்தி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ஒருவரே இத்தகவலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வமைச்சரை தொடர்பு கொண்ட இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, இலங்கை இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் மேற்கத்தைய நாடுகள் தலையிடுவது இந்திய வல்லான்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாமென்றும், இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமரச முயற்சிகளை பேணுவதற்கான தனிப்பட்ட கொள்கையினை தான் கொண்டுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் நிருபம் சென் தெரிவித்துள்ளார்.
puthinam
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இந்திரா காந்தி கொண்டிருந்த சமரச நிலையை ஒத்த தன்மையைக் கைக்கொள்வதற்கு சோனியா காந்தி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ஒருவரே இத்தகவலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வமைச்சரை தொடர்பு கொண்ட இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, இலங்கை இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் மேற்கத்தைய நாடுகள் தலையிடுவது இந்திய வல்லான்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாமென்றும், இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமரச முயற்சிகளை பேணுவதற்கான தனிப்பட்ட கொள்கையினை தான் கொண்டுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் நிருபம் சென் தெரிவித்துள்ளார்.
puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

