Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பல்கலைக்கழக மாணவர் வேண்டுகோள்
#2
புலிகளின் பகுதியில் மறுகட்டமைப்புப் பணிகளில் ஈடுபட இந்தியா தயார்.

கொழும்பு:

இனப் போரினால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மாகாணங்களில் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட இந்தியா தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்தியத் தூதர் நிரூபம் சென் இதனைத் தெரிவித்தார். யாழ்பாணத்தைச் சேர்ந்த பாரம்பரிய கலைகளுக்கான வளர்ச்சிக் கழகத்திற்கு இசைக் கருவிகளை வழங்கி சென் பேசியதாவது:

வட கிழக்குப் பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட இந்தியாவுக்கு அழைப்பு வந்தால் நிச்சயம் அதை ஏற்போம். அந்தப் பணிகளில் இந்திய பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படும்.

அதே நேரத்தில் புலிகளுடன் இந்திய அரசு எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ளாது என்றார்.

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மறுகட்டமைப்புப் பணிகளில் ஈடுபட இந்தியா முன் வந்துள்ளது இதுவே முதல்முறையாகும். புலிகளின் ஒத்துழைப்பும் அனுமதியும் இல்லாமல் இந்தப் பணிகள் சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்ஸ் தமிழ் டொட் கொம்....!

-------------------------

இது இந்தியாவின் இரண்டும் கெட்டான் இக்கட்டு நிலையை நன்கு உணர்த்துகிறது....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 05-25-2004, 08:39 PM
[No subject] - by tamilini - 05-25-2004, 09:49 PM
தமிழன் - by kavithan - 06-11-2004, 07:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)