05-22-2004, 01:36 AM
புதிய அரசு அமைந்ததும் அதனிடம் இலங்கை
தொடர்பாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம்
பி.பி.சி.க்கு வைகோ தெரிவிப்பு
இந்தியாவில் புதிய அரசு அமைந்ததன் பின்னர் அந்த அரசிடம் இலங்கை தொடர்பாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம்.
கடந்த காலங்களில் நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிக்கு இந்திய அரசாங்கம் உதவுகின்ற வகையில் செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் வைகோ தெரிவித்துள்ளார். பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறுகையில்; இலங்கையில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்பதே எங்களுடைய அவாவாகும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடுதலைப் புலிகளின் கைகளில்தான் இருக்கின்றது. தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் புலிகளை விலக்கிக் கொண்டு சமாதானப் பேச்சினை முன்னெடுக்க முடியாது என்பதுடன் இந்தியா சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு வழங்கி அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர நேரடியாக பங்கு கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றேன் என்றார்.
வீரகேசரி
தொடர்பாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம்
பி.பி.சி.க்கு வைகோ தெரிவிப்பு
இந்தியாவில் புதிய அரசு அமைந்ததன் பின்னர் அந்த அரசிடம் இலங்கை தொடர்பாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம்.
கடந்த காலங்களில் நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிக்கு இந்திய அரசாங்கம் உதவுகின்ற வகையில் செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் வைகோ தெரிவித்துள்ளார். பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறுகையில்; இலங்கையில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்பதே எங்களுடைய அவாவாகும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடுதலைப் புலிகளின் கைகளில்தான் இருக்கின்றது. தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் புலிகளை விலக்கிக் கொண்டு சமாதானப் பேச்சினை முன்னெடுக்க முடியாது என்பதுடன் இந்தியா சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு வழங்கி அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர நேரடியாக பங்கு கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றேன் என்றார்.
வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

