05-20-2004, 01:19 AM
அமைச்சுப்பதவியும் பெருந்தொகைப்பணமும்
தருவதாக ஆசைவார்த்தை கூறினார்கள்
துரோகமிழைக்க விரும்பவில்லை என புஷ்பகுமார சபையில் தெரிவிப்பு
பிரதி அமைச்சர் பதவியும் தேவையான பெருந்தொகைப்பணமும் தருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் என்னை வற்புறுத்தினர். ஆனாலும் நான் அசைந்து கொடுக்கவில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் புஷ்பகுமார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபாநாயகரின் அனுமதியுடன் நேற்று சபையில் விசேட உரையாற்றிய புஷ்பகுமார தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். ஆனால் இராஜினாமா செய்வதற்கான காரணங்கள் எதனையும் அவர் சபையில் கூறவில்லை.
புஷ்மகுமார தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது: பௌத்த சிங்களவனாக இருந்தும் என்னை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியலில் சேர்த்துக் கொண்டார்கள். அதற்காக நான் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சிதான் பொருத்தமானது. அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அதற்காக மிகவும் உறுதியாக செயற்படுகின்றார். அவரது தலைமைத்துவத்தை மாசுபடுத்த சிலர் முற்படுகின்றனர். முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை பெறுவதற்கு அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகின்றது.
எங்களுக்கு ஆசைவார்த்தை காட்டினார்கள். பிரதி அமைச்சர் பதவியும், பிரதேச அமைப்பாளர் பதவியும், பணமும் தருவதாக கூறி வற்புறுத்தினார்கள். ஆனால் நாங்கள் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. இதேவேளை புஷ்பகுமார உரையாற்றிய போது அரசதரப்பு உறுப்பினர்கள் சபையில் கூச்சலிட்டனர்.
வீரகேசரி
தருவதாக ஆசைவார்த்தை கூறினார்கள்
துரோகமிழைக்க விரும்பவில்லை என புஷ்பகுமார சபையில் தெரிவிப்பு
பிரதி அமைச்சர் பதவியும் தேவையான பெருந்தொகைப்பணமும் தருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் என்னை வற்புறுத்தினர். ஆனாலும் நான் அசைந்து கொடுக்கவில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் புஷ்பகுமார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபாநாயகரின் அனுமதியுடன் நேற்று சபையில் விசேட உரையாற்றிய புஷ்பகுமார தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். ஆனால் இராஜினாமா செய்வதற்கான காரணங்கள் எதனையும் அவர் சபையில் கூறவில்லை.
புஷ்மகுமார தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது: பௌத்த சிங்களவனாக இருந்தும் என்னை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியலில் சேர்த்துக் கொண்டார்கள். அதற்காக நான் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சிதான் பொருத்தமானது. அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அதற்காக மிகவும் உறுதியாக செயற்படுகின்றார். அவரது தலைமைத்துவத்தை மாசுபடுத்த சிலர் முற்படுகின்றனர். முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை பெறுவதற்கு அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகின்றது.
எங்களுக்கு ஆசைவார்த்தை காட்டினார்கள். பிரதி அமைச்சர் பதவியும், பிரதேச அமைப்பாளர் பதவியும், பணமும் தருவதாக கூறி வற்புறுத்தினார்கள். ஆனால் நாங்கள் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. இதேவேளை புஷ்பகுமார உரையாற்றிய போது அரசதரப்பு உறுப்பினர்கள் சபையில் கூச்சலிட்டனர்.
வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

