05-19-2004, 11:24 PM
ஓடுகிற வண்டியோட...- மீளும் நினைவுகள் - 3
பூநகரி ஆர்மியாலை பூநகரிப்பாதையால் நடைபெற்ற படகுப் போக்குவரத்து முடிவுக்கு வந்ததென்று சொல்லி நிறுத்தினேன்.அது எவ்வாறான பிரச்சனை என்று சொல்லவில்லை.படகுகள் இக்கரையிலிருந்து புறப்பட்டதும் அவற்றுக்கு வழிகாட்ட எந்தவொரு வசதியும் இல்லை அக்கரையில் தெரியும் ஒளிப்பொட்டுக்களை வைத்தே அடையாளம் கண்டு பிடித்துச் செல்லும்.இப்படிச் செல்லும் போது தெரியும் ஒளிப்பொட்டுக்கள் நிச்சயம் அடுத்த கரையிலுள்ள இறங்கு துறையாகத் தான் இருக்கவேண்டும் என்பதில்லை.சிறிது காற்றுப் பலமாக அடிச்சுதென்றால் போய்ச்சேர்றது பூநகரி முகாமாகத்தான் இருக்கும்.அப்படிப் போய் உயிர்விட்ட கதையும் உண்டு.அதோடை இந்தப்படகுப் போக்குவரத்தை குழப்பவென்றே.பூநகரியின் பக்கத்தில் நாகதேவன் துறை என்ற இடத்திலை நவீன வசதிகளோடை கடற்படை முகாமொன்றும் அமைக்கப்படதும் சனத்துக்கு அந்தப் பாதையை தொடர்ந்து பயன்படுத்திறது பாதுகாப்பா தெரியேலை.
அதாலை சனம் கிளாலி என்ற இடத்திலை ஓரளவு வசதியா இருந்த இடத்தைப் படகுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தத் தொடங்கிச்சுது.இந்த இடத்தாலை முந்தி வன்னிக்கு வத்தைகளிலை போக்குவரத்து நடந்ததாம் ஓரளவு ஆழம் குறைந்த கடற்பகுதி.இங்கேயும் அதே நிலைமைதான்.ஓரளவு இளைஞர்களாக இருக்கிறவை படகை தள்ளிக் கொண்டு இடுப்புக்கு மேல் தண்ணீர் வருமளவுக்கும் போகவேணும் அதுக்குப் பிறகே படகு ஓடத்தொடங்கும்.
சனம் பூநகரிப் பாதையை விட்டு கிளாலியாலை போறது ஆர்மிக்கும் தெரிஞ்சிட்டுது.சும்மா இருப்பானோ?எப்படியாவது யாழ்ப்பாண மக்களைப் பட்டினி போட வேண்டுமென்று தீர்மானிச்சவன்.மக்கள் இப்படி கொழும்பு போய் வெளிநாடுகளிலிருந்து வாற காசிலை ஓரளவுக்காவது சாப்பிட்டு உயிர்வாழுறது அவனுக்கு கண்ணுக்கை குத்திச்சுது.
பிறகென்ன தொடர்கதைதான் ஆனையிறவாலையும் பூநகரியாலையும் வெளிக்கிட்டு வாற கடற்படைப் படகுகள் பயணிகள் போற படகுகளைத் துரத்தத் தொடங்கியது.சனமும் ஆர்மிக்குப் பயந்து பகலிலை போறதை நிற்பாட்டி இரவிலை போக வெளிக்கிட்டுது.இதிலை போக்குவரத்துக்குப் பயன்படுத்தின படகுகளைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேணும்,யாழ்ப்பாணத்தின்ரை கரையோரப்பகுதிகளிலை இருந்து மீன்பிடியைத் தொழிலாகக் கொண்ட மக்கள்,ஆர்மி கடலிலை இறங்கி மீன் பிடிக்கிறதைத் தடை செய்ததாலை வேறு வழியில்லாமல் தாங்கள் மீன் பிடிச்ச படகுகளைக் கொண்டுவந்து கிளாலியில் போக்குவரத்துக்குப் பயன்படுத்துச்சினம்.இதுக்குப் பிறகும் நான் அந்தப் படகுகளின் திறத்தைச் சொல்லத் தேவையில்லை.
<img src='http://kavithai.yarl.net/archives/kilali_boat.jpg' border='0' alt='user posted image'>
படகு ஓட்டிகளுக்கு குடும்பம் வாழவேண்டுமானால் இப்படி ஏதாவது செய்யவேண்டிய நிலை,போறவைக்கு கொழும்பு அல்லது வவுனியா போனால்தான் பணம் பெறலாம் அல்லது வெளிநாடுகளுக்குப் போனால்தான் உயிர்தப்பலாம் எண்ட நிலை இதாலை யாரும் உயிருக்குப் பயந்தார்களெண்டாலும் போக்குவரத்தைக் கைவிடவில்லை.
<img src='http://kavithai.yarl.net/archives/payanam.jpg' border='0' alt='user posted image'>
இக்கரையில் பயணத்திற்காகக் காத்திருக்கும் மக்கள்
1992 ம் ஆண்டு மார்கழி மாதமளவில் புலிகளால் நடத்தப்பட்ட தாகுதலுக்குப் பழிவாங்கும் முகமாக கிளாலியில் பொதுமக்கள் பயணம் செய்த படகு ஒன்றை வழிமறித்த சிறீலங்காக் கடற்படையினர் 15 இற்கும் மேற்பட்ட பொதுமக்களை ஈவு இரக்கமின்றிக் கொன்று குவித்தனர்.கிளலியில் நடைபெற்ற இந்தப்படுகொளையானது யாழ்ப்பாணம் முழுவதும் எதிரொலித்தது ஏனெனில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் அன்று பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.இப்படி நடந்திட்டுதாம் என்ற செய்தி கேட்டதுமே அவர்களின் சொந்தபந்தமெல்லாம் அலறியடித்துக் கொண்டு வந்து கிளாலிக் கரையில் கூடிச்சுது.எங்கும் ஒரே ஓலம் ஒப்பாரி செத்தது யார் உயிர் தப்பினது யார் என்றே தெரியாமல் இருந்திச்சு அடுத்தநாள் விடியக்காலமை புலிகளின் படகுகளும் சில மீனவர்களின் படகுகளும் போய் உயிரிழந்தவர்களுடன் படகைக் கட்டியிழுத்து வரும்வரைக்கும் ஒரே அல்லோலகல்லோலம்.
இது நடந்து சில நாட்களுக்குப் படகுப் போக்குவரத்து நிற்பாட்டப்பட்டிட்டுது.படகு ஓட்டிகள் மட்டுமில்லை சனத்துக்கும் போறதுக்குப் பயம்.இருக்கிறதாலை உயிருக்கு ஆபத்து என்று வெளிநாடு போக வெளிக்கிட்டா போகிற வழியிலை உயிர் போய்விடுமோ என்கிற நிலமை.
சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் படகுப் போக்குவரத்து ஆரம்பிச்சுது.புலிகளின்ரை ஆலோசனையின் பேரிலை படகிலை.காற்றடைத்த டியூப்,வெற்றுக் கான் என்பன உயிர்காக்கும் மிதவைகளாக கொண்டு செல்லப்பட்டன கொஞ்சநாள் நிம்மதியாய்ப் போச்சுது.அதற்குப் பிறகும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சம்பவங்கள் நடந்தன.அக்கரை என்று நினைத்து காற்றினால் அள்ளுண்டு பூநகரி முகாமுக்கே போனது ஒரு படகு.
திரும்பவும் 1993 ம் ஆண்டு தை மாதம் 3ம் திகதி யாழ்ப்பாணத்து மக்களுக்கு ஒரு துக்கதினமாக விடிந்தது.அன்று இரவு (2ம்திகதி) பயணம்செய்த படகுகள் சிறிலங்காக் கடற்படையாலை வழிமறிக்கப்பட்டு கொத்திக் குதறப்பட்டனர்..இதிலை ஓட்டியளோடை நீந்தத் தெரிஞ்சசிலபேர் கடலிலை குதிச்சுத் தப்பப் பார்த்திருக்கினம்,அவர்களுக்கு மேலால் கடற்படைப் படகுகள் ஓட்டப்பட்டு சின்னபின்னமாக்கப்பட்டனர்.அப்படியும் தப்பி வந்த சிலர் சொன்ன சம்பவம் தான் இது.இதிலை 50 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியானார்கள்,15 இற்கும் மேற்பட்டோர் வெட்டுக்கயங்களுடன் உயிர் தப்பினர்.இதில் இறந்த பலரது உடல்கள் யாழ்ப்பாணக் குருநகர்ப் பகுதியிலும் கிளாலி அக்கரையிலும் கரையொதுங்கின .
<img src='http://kavithai.yarl.net/archives/Skull.jpg' border='0' alt='user posted image'>
பல நாட்கள் நீருள் கிடந்து உருக்குலைந்த சடலமொன்று படத்தில் காணப்படுகிறது.
யாழ்ப்பாணமே சோகத்தில் மூழ்கியது.இறந்தவர்கள் பற்றின கவலை ஒருபக்கம் இனி எப்பிப் போறது என்ற கவலை மறுபக்கமாய் சனம் அலைக்கழிந்தது.இந்தச்சம்பவம் பற்றிப் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபித்தபோது அவை மக்கள் பயணம் செய்த படகுகள் அல்ல புலிகள் பயணம் செய்த படகுகள் என்று கதை சொல்லப்பட்டது.தமது தலைவிதியை நொந்து கொள்வதைத் தவிர மக்களுக்கு வேறு வழி தெரியவில்லை.
சில வாரங்களாகத் தடைப்பட்ட போக்குவரத்து மீண்டும் ஆரம்பித்தது என்ன செய்வது போய்த்தான் ஆகவேண்டும் என்ற நிலை.இப்போது மக்களுக்கு வழிப்பயணத்திற்குப் பாதுகாப்பு வழங்க புலிகளின் கடற்படைப் பிரிவு முன்வந்தது.
பொதுமக்கள் பயணம் செய்யும் படகுகள் வலுக்குறைந்த இயந்திரங்கள் மூலம் இயக்கப்படுபவை.அவை ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு சிறிது வலுக்கூடிய வெளியிணைப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.வழி மாறிவிடாமல் இருப்பதற்காக வழித்தடம் ஓலைகளால் அடையாளப்படுத்தப்பட்டது.மக்கள் பிளாஸ்ரிக் கான் காற்றடைத்த ரியூப் என்பவற்றைத் தம்முடன் எடுத்துச் சென்றனர்.கொழும்பு அல்லது வெளியிடங்களுக்கு புறப்படுபவர்களைப் பார்த்து மற்றவர்கள் அண்ணை மறக்காமல் இரண்டு "ஒல்லித் தேங்காய்" எடுத்து வையுங்கோ என்று பகிடி பண்ணுவார்கள்.அந்தளவுக்குப் பாதுகாப்பில்லாமல் மாறிப்போனது பயணம்.
பயணம் தொடரும்...........
<b>நன்றி - ஈழநாதனின் வலைப்பூ</b>
பூநகரி ஆர்மியாலை பூநகரிப்பாதையால் நடைபெற்ற படகுப் போக்குவரத்து முடிவுக்கு வந்ததென்று சொல்லி நிறுத்தினேன்.அது எவ்வாறான பிரச்சனை என்று சொல்லவில்லை.படகுகள் இக்கரையிலிருந்து புறப்பட்டதும் அவற்றுக்கு வழிகாட்ட எந்தவொரு வசதியும் இல்லை அக்கரையில் தெரியும் ஒளிப்பொட்டுக்களை வைத்தே அடையாளம் கண்டு பிடித்துச் செல்லும்.இப்படிச் செல்லும் போது தெரியும் ஒளிப்பொட்டுக்கள் நிச்சயம் அடுத்த கரையிலுள்ள இறங்கு துறையாகத் தான் இருக்கவேண்டும் என்பதில்லை.சிறிது காற்றுப் பலமாக அடிச்சுதென்றால் போய்ச்சேர்றது பூநகரி முகாமாகத்தான் இருக்கும்.அப்படிப் போய் உயிர்விட்ட கதையும் உண்டு.அதோடை இந்தப்படகுப் போக்குவரத்தை குழப்பவென்றே.பூநகரியின் பக்கத்தில் நாகதேவன் துறை என்ற இடத்திலை நவீன வசதிகளோடை கடற்படை முகாமொன்றும் அமைக்கப்படதும் சனத்துக்கு அந்தப் பாதையை தொடர்ந்து பயன்படுத்திறது பாதுகாப்பா தெரியேலை.
அதாலை சனம் கிளாலி என்ற இடத்திலை ஓரளவு வசதியா இருந்த இடத்தைப் படகுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தத் தொடங்கிச்சுது.இந்த இடத்தாலை முந்தி வன்னிக்கு வத்தைகளிலை போக்குவரத்து நடந்ததாம் ஓரளவு ஆழம் குறைந்த கடற்பகுதி.இங்கேயும் அதே நிலைமைதான்.ஓரளவு இளைஞர்களாக இருக்கிறவை படகை தள்ளிக் கொண்டு இடுப்புக்கு மேல் தண்ணீர் வருமளவுக்கும் போகவேணும் அதுக்குப் பிறகே படகு ஓடத்தொடங்கும்.
சனம் பூநகரிப் பாதையை விட்டு கிளாலியாலை போறது ஆர்மிக்கும் தெரிஞ்சிட்டுது.சும்மா இருப்பானோ?எப்படியாவது யாழ்ப்பாண மக்களைப் பட்டினி போட வேண்டுமென்று தீர்மானிச்சவன்.மக்கள் இப்படி கொழும்பு போய் வெளிநாடுகளிலிருந்து வாற காசிலை ஓரளவுக்காவது சாப்பிட்டு உயிர்வாழுறது அவனுக்கு கண்ணுக்கை குத்திச்சுது.
பிறகென்ன தொடர்கதைதான் ஆனையிறவாலையும் பூநகரியாலையும் வெளிக்கிட்டு வாற கடற்படைப் படகுகள் பயணிகள் போற படகுகளைத் துரத்தத் தொடங்கியது.சனமும் ஆர்மிக்குப் பயந்து பகலிலை போறதை நிற்பாட்டி இரவிலை போக வெளிக்கிட்டுது.இதிலை போக்குவரத்துக்குப் பயன்படுத்தின படகுகளைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேணும்,யாழ்ப்பாணத்தின்ரை கரையோரப்பகுதிகளிலை இருந்து மீன்பிடியைத் தொழிலாகக் கொண்ட மக்கள்,ஆர்மி கடலிலை இறங்கி மீன் பிடிக்கிறதைத் தடை செய்ததாலை வேறு வழியில்லாமல் தாங்கள் மீன் பிடிச்ச படகுகளைக் கொண்டுவந்து கிளாலியில் போக்குவரத்துக்குப் பயன்படுத்துச்சினம்.இதுக்குப் பிறகும் நான் அந்தப் படகுகளின் திறத்தைச் சொல்லத் தேவையில்லை.
<img src='http://kavithai.yarl.net/archives/kilali_boat.jpg' border='0' alt='user posted image'>
படகு ஓட்டிகளுக்கு குடும்பம் வாழவேண்டுமானால் இப்படி ஏதாவது செய்யவேண்டிய நிலை,போறவைக்கு கொழும்பு அல்லது வவுனியா போனால்தான் பணம் பெறலாம் அல்லது வெளிநாடுகளுக்குப் போனால்தான் உயிர்தப்பலாம் எண்ட நிலை இதாலை யாரும் உயிருக்குப் பயந்தார்களெண்டாலும் போக்குவரத்தைக் கைவிடவில்லை.
<img src='http://kavithai.yarl.net/archives/payanam.jpg' border='0' alt='user posted image'>
இக்கரையில் பயணத்திற்காகக் காத்திருக்கும் மக்கள்
1992 ம் ஆண்டு மார்கழி மாதமளவில் புலிகளால் நடத்தப்பட்ட தாகுதலுக்குப் பழிவாங்கும் முகமாக கிளாலியில் பொதுமக்கள் பயணம் செய்த படகு ஒன்றை வழிமறித்த சிறீலங்காக் கடற்படையினர் 15 இற்கும் மேற்பட்ட பொதுமக்களை ஈவு இரக்கமின்றிக் கொன்று குவித்தனர்.கிளலியில் நடைபெற்ற இந்தப்படுகொளையானது யாழ்ப்பாணம் முழுவதும் எதிரொலித்தது ஏனெனில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் அன்று பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.இப்படி நடந்திட்டுதாம் என்ற செய்தி கேட்டதுமே அவர்களின் சொந்தபந்தமெல்லாம் அலறியடித்துக் கொண்டு வந்து கிளாலிக் கரையில் கூடிச்சுது.எங்கும் ஒரே ஓலம் ஒப்பாரி செத்தது யார் உயிர் தப்பினது யார் என்றே தெரியாமல் இருந்திச்சு அடுத்தநாள் விடியக்காலமை புலிகளின் படகுகளும் சில மீனவர்களின் படகுகளும் போய் உயிரிழந்தவர்களுடன் படகைக் கட்டியிழுத்து வரும்வரைக்கும் ஒரே அல்லோலகல்லோலம்.
இது நடந்து சில நாட்களுக்குப் படகுப் போக்குவரத்து நிற்பாட்டப்பட்டிட்டுது.படகு ஓட்டிகள் மட்டுமில்லை சனத்துக்கும் போறதுக்குப் பயம்.இருக்கிறதாலை உயிருக்கு ஆபத்து என்று வெளிநாடு போக வெளிக்கிட்டா போகிற வழியிலை உயிர் போய்விடுமோ என்கிற நிலமை.
சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் படகுப் போக்குவரத்து ஆரம்பிச்சுது.புலிகளின்ரை ஆலோசனையின் பேரிலை படகிலை.காற்றடைத்த டியூப்,வெற்றுக் கான் என்பன உயிர்காக்கும் மிதவைகளாக கொண்டு செல்லப்பட்டன கொஞ்சநாள் நிம்மதியாய்ப் போச்சுது.அதற்குப் பிறகும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சம்பவங்கள் நடந்தன.அக்கரை என்று நினைத்து காற்றினால் அள்ளுண்டு பூநகரி முகாமுக்கே போனது ஒரு படகு.
திரும்பவும் 1993 ம் ஆண்டு தை மாதம் 3ம் திகதி யாழ்ப்பாணத்து மக்களுக்கு ஒரு துக்கதினமாக விடிந்தது.அன்று இரவு (2ம்திகதி) பயணம்செய்த படகுகள் சிறிலங்காக் கடற்படையாலை வழிமறிக்கப்பட்டு கொத்திக் குதறப்பட்டனர்..இதிலை ஓட்டியளோடை நீந்தத் தெரிஞ்சசிலபேர் கடலிலை குதிச்சுத் தப்பப் பார்த்திருக்கினம்,அவர்களுக்கு மேலால் கடற்படைப் படகுகள் ஓட்டப்பட்டு சின்னபின்னமாக்கப்பட்டனர்.அப்படியும் தப்பி வந்த சிலர் சொன்ன சம்பவம் தான் இது.இதிலை 50 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியானார்கள்,15 இற்கும் மேற்பட்டோர் வெட்டுக்கயங்களுடன் உயிர் தப்பினர்.இதில் இறந்த பலரது உடல்கள் யாழ்ப்பாணக் குருநகர்ப் பகுதியிலும் கிளாலி அக்கரையிலும் கரையொதுங்கின .
<img src='http://kavithai.yarl.net/archives/Skull.jpg' border='0' alt='user posted image'>
பல நாட்கள் நீருள் கிடந்து உருக்குலைந்த சடலமொன்று படத்தில் காணப்படுகிறது.
யாழ்ப்பாணமே சோகத்தில் மூழ்கியது.இறந்தவர்கள் பற்றின கவலை ஒருபக்கம் இனி எப்பிப் போறது என்ற கவலை மறுபக்கமாய் சனம் அலைக்கழிந்தது.இந்தச்சம்பவம் பற்றிப் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபித்தபோது அவை மக்கள் பயணம் செய்த படகுகள் அல்ல புலிகள் பயணம் செய்த படகுகள் என்று கதை சொல்லப்பட்டது.தமது தலைவிதியை நொந்து கொள்வதைத் தவிர மக்களுக்கு வேறு வழி தெரியவில்லை.
சில வாரங்களாகத் தடைப்பட்ட போக்குவரத்து மீண்டும் ஆரம்பித்தது என்ன செய்வது போய்த்தான் ஆகவேண்டும் என்ற நிலை.இப்போது மக்களுக்கு வழிப்பயணத்திற்குப் பாதுகாப்பு வழங்க புலிகளின் கடற்படைப் பிரிவு முன்வந்தது.
பொதுமக்கள் பயணம் செய்யும் படகுகள் வலுக்குறைந்த இயந்திரங்கள் மூலம் இயக்கப்படுபவை.அவை ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு சிறிது வலுக்கூடிய வெளியிணைப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.வழி மாறிவிடாமல் இருப்பதற்காக வழித்தடம் ஓலைகளால் அடையாளப்படுத்தப்பட்டது.மக்கள் பிளாஸ்ரிக் கான் காற்றடைத்த ரியூப் என்பவற்றைத் தம்முடன் எடுத்துச் சென்றனர்.கொழும்பு அல்லது வெளியிடங்களுக்கு புறப்படுபவர்களைப் பார்த்து மற்றவர்கள் அண்ணை மறக்காமல் இரண்டு "ஒல்லித் தேங்காய்" எடுத்து வையுங்கோ என்று பகிடி பண்ணுவார்கள்.அந்தளவுக்குப் பாதுகாப்பில்லாமல் மாறிப்போனது பயணம்.
பயணம் தொடரும்...........
<b>நன்றி - ஈழநாதனின் வலைப்பூ</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

