05-19-2004, 11:21 PM
ஓடுகிற வண்டியோட...- மீளும் நினைவுகள் - 2
ம்ம் எதிலை விட்டனான்? ஆனையிறவுப் பாதை அடைபட்டதோடை விட்டனான் ஒரு கேள்வியோடை.ஆனையிறவுப் பாதை அடைபட்ட பிறகு யாழ்ப்பாண மக்கள் எப்படி கொழும்பு போனவை என்ற கேள்வியோடை.
அதுக்குப் பதில் சொல்ல முதல் ஒரு சின்ன விளக்கம்.வெறுமனே யாழ்ப்பாணத்திலியிருந்து கொழும்பு போறதுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்?, இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் கொழும்பு போகவேணும்?.உத்தியோக இடமாற்றம்,உயர்கல்வி போன்ற சின்னச் சின்னக் காரணங்கள் இருந்தாலும் சனம் அள்ளுகொள்ளையாக கொழும்பு போக வெளிக்கிட்டதுக்குக் காரணம் யுத்தத்தால் யாழ்ப்பாணத்திலை வாழ முடியாதென்று கொழும்புக்கோ வெளிநாடுகளுக்கோ வெளிக்கிட்டவை பாதிப்பேர்.
இப்படி வெளிநாடு போய் உழைச்சு அனுப்புறவையின்ரை காசிலை யாழ் மக்கள் தங்கியிருக்கவேண்டியதொரு காலம் வந்தது அதுதான் பொருளாதாரத்தடைக் காலம் .அதாவது யாழ்ப்பாணது உற்பத்தி வெளியிடத்துக்குப் போகாமலும் வெளியிடத்து உற்பத்தி உள்ளே வராமலும் அரசாங்கத்தால் தடுக்கப்பட்டது.இதோடை வாழ்க்கைச்செலவும் அதிகரிச்சதாலை,தன்னிறைவுப் பொருளாதாரமாக இருந்த யாழ்ப்பாணப் பொருளாதாரம் தங்கியிருத்தல்ப் பொருளாதாரம் ஆக மாறின காலம்.
இப்படி வெளிநாடுகளிலிருந்து வரும் காசிலை வாழ்க்கை நடத்த வேண்டி இருந்ததாலை பெரும்பான்மையான யாழ்ப்பாணத்தவர் கொழும்பு போய் வரவேண்டி இருந்தது.வெளிநாட்டிலை இருக்கிற மகனோடையோ மகளோடையோ கதைக்க வேணுமெண்டால் கூட யாழ்ப்பாணத்து ஆட்கள் கொழும்பு அல்லது வவுனியா போய்த் தான் கதைக்கவேண்டியிருந்தது.இப்படிப்பட்ட காரணங்களாலை வெட்டினாலும் வளரும்மரம்போலை கொழும்பு போரதுக்கு ஒரு வழி அடைபட்டால் மறுவை கண்டுபிடிச்சு ஆகவேண்டிய கட்டாயம்.
அந்தக் நேரத்திலை உதவினதுதான் கொம்படி ஊரியான் பாதையும் பூநகரிப்பாதையும்.இவையெல்லாம் கடனீரேரிப் பிரதேசங்கள்.கடல் பாதி சேறு பாதியாய் இருக்கும் கடலுக்குள்ளை பாதித் தூரம் போட்டைத் தள்ளிக் கொண்டு போய்த்தான் ஏறவேணும் இடுப்பளவு சேற்றுக்கை இறங்கித் தள்ளுறதுக்குள்ளை பாதி உயிர் போய்விடும்.
<img src='http://kavithai.yarl.net/archives/boat.jpg' border='0' alt='user posted image'>
இவ்வளவு கஷ்டத்துக்கை போற ஆட்களின்ரை எண்ணிக்கை குறைஞ்சிருக்கவேணுமெண்டா அதுதான் இல்லை ஏனெண்டா முன்னிலும் மோசமாக போர் நடக்கத் தொடங்கிவிட்டது எப்படியெண்டாலும் உயிர் தப்பினால் காணும் எண்ட நிலையிலை சனம் கொழும்புக்கு அள்ளுப்பட்டுது.
பூநகரிப்பகுதியிலை இருந்த ஆர்மியின்ரை முகாமாலை அந்தப் பாதைகளால் நடந்த போக்குவரத்தும் முடிவுக்கு வந்தது.அடுத்து என்ன வழி ..... கொஞ்ச நாள் பொறுங்கோ
<b>நன்றி - ஈழநாதனின் வலைப்பூ</b>
ம்ம் எதிலை விட்டனான்? ஆனையிறவுப் பாதை அடைபட்டதோடை விட்டனான் ஒரு கேள்வியோடை.ஆனையிறவுப் பாதை அடைபட்ட பிறகு யாழ்ப்பாண மக்கள் எப்படி கொழும்பு போனவை என்ற கேள்வியோடை.
அதுக்குப் பதில் சொல்ல முதல் ஒரு சின்ன விளக்கம்.வெறுமனே யாழ்ப்பாணத்திலியிருந்து கொழும்பு போறதுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்?, இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் கொழும்பு போகவேணும்?.உத்தியோக இடமாற்றம்,உயர்கல்வி போன்ற சின்னச் சின்னக் காரணங்கள் இருந்தாலும் சனம் அள்ளுகொள்ளையாக கொழும்பு போக வெளிக்கிட்டதுக்குக் காரணம் யுத்தத்தால் யாழ்ப்பாணத்திலை வாழ முடியாதென்று கொழும்புக்கோ வெளிநாடுகளுக்கோ வெளிக்கிட்டவை பாதிப்பேர்.
இப்படி வெளிநாடு போய் உழைச்சு அனுப்புறவையின்ரை காசிலை யாழ் மக்கள் தங்கியிருக்கவேண்டியதொரு காலம் வந்தது அதுதான் பொருளாதாரத்தடைக் காலம் .அதாவது யாழ்ப்பாணது உற்பத்தி வெளியிடத்துக்குப் போகாமலும் வெளியிடத்து உற்பத்தி உள்ளே வராமலும் அரசாங்கத்தால் தடுக்கப்பட்டது.இதோடை வாழ்க்கைச்செலவும் அதிகரிச்சதாலை,தன்னிறைவுப் பொருளாதாரமாக இருந்த யாழ்ப்பாணப் பொருளாதாரம் தங்கியிருத்தல்ப் பொருளாதாரம் ஆக மாறின காலம்.
இப்படி வெளிநாடுகளிலிருந்து வரும் காசிலை வாழ்க்கை நடத்த வேண்டி இருந்ததாலை பெரும்பான்மையான யாழ்ப்பாணத்தவர் கொழும்பு போய் வரவேண்டி இருந்தது.வெளிநாட்டிலை இருக்கிற மகனோடையோ மகளோடையோ கதைக்க வேணுமெண்டால் கூட யாழ்ப்பாணத்து ஆட்கள் கொழும்பு அல்லது வவுனியா போய்த் தான் கதைக்கவேண்டியிருந்தது.இப்படிப்பட்ட காரணங்களாலை வெட்டினாலும் வளரும்மரம்போலை கொழும்பு போரதுக்கு ஒரு வழி அடைபட்டால் மறுவை கண்டுபிடிச்சு ஆகவேண்டிய கட்டாயம்.
அந்தக் நேரத்திலை உதவினதுதான் கொம்படி ஊரியான் பாதையும் பூநகரிப்பாதையும்.இவையெல்லாம் கடனீரேரிப் பிரதேசங்கள்.கடல் பாதி சேறு பாதியாய் இருக்கும் கடலுக்குள்ளை பாதித் தூரம் போட்டைத் தள்ளிக் கொண்டு போய்த்தான் ஏறவேணும் இடுப்பளவு சேற்றுக்கை இறங்கித் தள்ளுறதுக்குள்ளை பாதி உயிர் போய்விடும்.
<img src='http://kavithai.yarl.net/archives/boat.jpg' border='0' alt='user posted image'>
இவ்வளவு கஷ்டத்துக்கை போற ஆட்களின்ரை எண்ணிக்கை குறைஞ்சிருக்கவேணுமெண்டா அதுதான் இல்லை ஏனெண்டா முன்னிலும் மோசமாக போர் நடக்கத் தொடங்கிவிட்டது எப்படியெண்டாலும் உயிர் தப்பினால் காணும் எண்ட நிலையிலை சனம் கொழும்புக்கு அள்ளுப்பட்டுது.
பூநகரிப்பகுதியிலை இருந்த ஆர்மியின்ரை முகாமாலை அந்தப் பாதைகளால் நடந்த போக்குவரத்தும் முடிவுக்கு வந்தது.அடுத்து என்ன வழி ..... கொஞ்ச நாள் பொறுங்கோ
<b>நன்றி - ஈழநாதனின் வலைப்பூ</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

