07-07-2003, 02:21 PM
கூட்டணி கடந்த காலத்தவறுகளை மீண்டும் புலிகளின் பெயரால் இழைக்க முனைகிறதோ...! புலிகள் கேட்கும் உரிமைகள் தமிழ் மக்களின் புதல்வர்களாக அவர்களின் குரல்களாக என்பது கடந்த பொங்குதமிழ் நிகழ்ச்சிகளில் தெளிவாக மக்களின் குரல்கள் வெளிப்பட்டபோது தெரிந்தும் சங்கரியார் சக்கடத்தார் ஏறிய குதிரையிலேயே தானும் ஏறப்போவதாக கங்கணம் கட்டி நிற்பதுதான் ஏன்...?! கூட்டணி 1987முதல் 90 வரை போட்ட கூத்துக்கள் இன்றும் நல்ல நினைவில் நிற்கின்றன. ஒரு பக்கம் கொலைகாரக்கும்பல்கள் கொலைவெறியாட இவர்கள் அந்நியரின் கைப்பொம்மைகளாக செயற்பட்டு ' மித வாத அரசியல்' என்ற போர்வையில் தமிழ் மக்களின் இரத்தம் குடித்தவர்கள். அன்று அந்நியருக்கு கைப்பொம்மைகளாக இருக்கத் துணிந்தவர்கள் இன்று தமது சொந்த மக்களுக்காக ஒற்றுமைப்பட்டு செயற்பட தன்மானம் என்ற ஒன்று தடையோ...?! சொந்த மக்களின் பிள்ளைகள் தான் புலிகள் அவர்களின் சொற்கேற்பது அல்லது அவர்களின் தூர நோக்குள்ள மக்கள் நல அரசியல் திட்டங்கள் நிறைவேற ஒத்துழைப்பது காலத்தின் தேவை கட்டாயம் ஏனெனில் கடந்த காலங்களில் மக்களை ஏமாற்றியதற்கான ஒரு சிறிய பிராயச்சித்தமாகவேணும் அமையட்டுமே...அதற்கும் சங்கரியாருக்கு மனமில்லை....! யுத்த காலத்தில் இவர் செய்த வெளிநாட்டு முகவர் வேலைகள் தடைப்பட்டதும் அந்நியருக்கு உளவுத்தகவல்கள் வழங்குவதும் தடைப்பட்டிருக்கிறது என்ற கவலையோ தெரியவில்லை....ஓ அதுசரி இப்ப வருமானம் சரியான வீழ்ச்சியாகத்தானே இருக்கும்....! அதுதான் மனுசன் திங் பண்ணுறார் போல....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

