05-19-2004, 11:19 PM
ஓடுகிற வண்டியோட...- மீளும் நினைவுகள் - 1
மதி அக்கா தனது யாழ்ப்பாண கொழும்புப் பயணம் பற்றி எழுதினாலும் எழுதினா,எனக்குள்ளும் ஒரு ஆசை,நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியூர் வந்தது அண்மைக் காலமேயென்றாலும்,நிறைய வித்தியாசமான அனுபவங்களை கண்டிருக்கிறேன்.அவற்றையெல்லாம் குடிலிலை எழுதினா சொந்த ஊருக்குப் போக விருப்பம் இருந்தும் போக முடியாமல் கொஞ்சப்பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு,ஊர் போய் வந்த திருப்தி கிடைக்கும்.
சரி எழுதலாம் எங்கேயிருந்து ஆரம்பிப்பது.எதைச் சொல்லவருகிறாயோ அதிலிருந்து தொடங்கவேண்டியதுதானே என்று சொல்லுவது கேட்கிறது.அதுதானே பிரச்சனையே.இதிலே எத்தனை பேருக்கு யாழ்ப்பாணம் கொழும்பு பிரயாணம் தெரியும்.அப்ப அவையளுக்கு எதிலிருந்து சொல்லுவது.சரி எல்லோருக்கும் விளங்கட்டும்.விளங்கிறமாதிரி சொல்லுவம்.
முதல்ல யாழ்ப்பாணத்திலையிருந்து கொழும்பு பயணம் மதி அக்கா சொன்ன மாதிரியோ அல்லது ரமணி அண்ணா மறுமொழியிலை சொன்னமாதிரியோ புகைவண்டிப்பிரயாணமாகத் தான் இருந்ததாம்.அது என்ன இருந்ததாம்?அதைத் தான் நான் பார்க்கேலையே பிறகு எப்பிடி இருந்தது என்று சொல்லுறது அதுதான் மற்றவர்களை மேற்கோள் காட்டி இருந்ததாம்.
<img src='http://kavithai.yarl.net/archives/jaffna_map.jpg' border='0' alt='user posted image'>
படம் பார்த்தா கொஞ்சம் விளங்கும்
காங்கேசன் துறையிலிருந்து தொடங்குகிற புகைவண்டி அப்படியே யாழ்ப்பாணம் மத்தி வந்து(இடையிலை நிறைய இடமிருக்கு சொன்னால் குழம்பிவிடும்) ஆனையிறவுப் பாதையாலை வவுனியா போய் அப்பிடியே கொழும்பு போகும் என்பது செவி வழிக்கதை.
<img src='http://kavithai.yarl.net/archives/srilanka_train.jpg' border='0' alt='user posted image'>
எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்முதலா யாழ்ப்பாணத்திலை ஒரு சில நாள் புகைவண்டி பார்த்திருக்கிறேன் போனதில்லை.ஒரு கட்டத்திலை வவுனியாவுக்கு இங்காலை புகைவண்டி மறிக்கப்பட்டாச்சு.கொஞ்ச நாள் தண்டவாளம் இருந்திச்சு பிறகு அதையும் அண்ணன்மாரும் பொதுமக்களும் எடுத்துக் கொண்டு போயிட்டினம்.வழித்தடம் மட்டும் அநாதையா இருந்திச்சுது இப்ப அதையும் மூடி மரங்கள் பற்றைகள் வளர்ந்திட்டுது,இந்தா இதாலைதான் முந்தி ரயின் ஓடிச்சுது எண்டு அம்மாமார் பிள்ளைகளுக்குக் காட்டுறதுக்கு கூட ஒண்டுமில்லை.
அப்ப பிறகு யாழ்ப்பாணத்திலை இருந்து ஒருத்தரும் கொழும்பு போகேலையோ.நீங்கள் கேட்பீர்கள் போனவை ஆனா பெரும் சாகசங்கள் செய்துதான் போகவேண்டியிருந்தது அந்த சாகசங்கள்
தொடரும்............
<b>நன்றி - ஈழநாதனின் வலைப்பூ</b>
மதி அக்கா தனது யாழ்ப்பாண கொழும்புப் பயணம் பற்றி எழுதினாலும் எழுதினா,எனக்குள்ளும் ஒரு ஆசை,நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியூர் வந்தது அண்மைக் காலமேயென்றாலும்,நிறைய வித்தியாசமான அனுபவங்களை கண்டிருக்கிறேன்.அவற்றையெல்லாம் குடிலிலை எழுதினா சொந்த ஊருக்குப் போக விருப்பம் இருந்தும் போக முடியாமல் கொஞ்சப்பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு,ஊர் போய் வந்த திருப்தி கிடைக்கும்.
சரி எழுதலாம் எங்கேயிருந்து ஆரம்பிப்பது.எதைச் சொல்லவருகிறாயோ அதிலிருந்து தொடங்கவேண்டியதுதானே என்று சொல்லுவது கேட்கிறது.அதுதானே பிரச்சனையே.இதிலே எத்தனை பேருக்கு யாழ்ப்பாணம் கொழும்பு பிரயாணம் தெரியும்.அப்ப அவையளுக்கு எதிலிருந்து சொல்லுவது.சரி எல்லோருக்கும் விளங்கட்டும்.விளங்கிறமாதிரி சொல்லுவம்.
முதல்ல யாழ்ப்பாணத்திலையிருந்து கொழும்பு பயணம் மதி அக்கா சொன்ன மாதிரியோ அல்லது ரமணி அண்ணா மறுமொழியிலை சொன்னமாதிரியோ புகைவண்டிப்பிரயாணமாகத் தான் இருந்ததாம்.அது என்ன இருந்ததாம்?அதைத் தான் நான் பார்க்கேலையே பிறகு எப்பிடி இருந்தது என்று சொல்லுறது அதுதான் மற்றவர்களை மேற்கோள் காட்டி இருந்ததாம்.
<img src='http://kavithai.yarl.net/archives/jaffna_map.jpg' border='0' alt='user posted image'>
படம் பார்த்தா கொஞ்சம் விளங்கும்
காங்கேசன் துறையிலிருந்து தொடங்குகிற புகைவண்டி அப்படியே யாழ்ப்பாணம் மத்தி வந்து(இடையிலை நிறைய இடமிருக்கு சொன்னால் குழம்பிவிடும்) ஆனையிறவுப் பாதையாலை வவுனியா போய் அப்பிடியே கொழும்பு போகும் என்பது செவி வழிக்கதை.
<img src='http://kavithai.yarl.net/archives/srilanka_train.jpg' border='0' alt='user posted image'>
எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்முதலா யாழ்ப்பாணத்திலை ஒரு சில நாள் புகைவண்டி பார்த்திருக்கிறேன் போனதில்லை.ஒரு கட்டத்திலை வவுனியாவுக்கு இங்காலை புகைவண்டி மறிக்கப்பட்டாச்சு.கொஞ்ச நாள் தண்டவாளம் இருந்திச்சு பிறகு அதையும் அண்ணன்மாரும் பொதுமக்களும் எடுத்துக் கொண்டு போயிட்டினம்.வழித்தடம் மட்டும் அநாதையா இருந்திச்சுது இப்ப அதையும் மூடி மரங்கள் பற்றைகள் வளர்ந்திட்டுது,இந்தா இதாலைதான் முந்தி ரயின் ஓடிச்சுது எண்டு அம்மாமார் பிள்ளைகளுக்குக் காட்டுறதுக்கு கூட ஒண்டுமில்லை.
அப்ப பிறகு யாழ்ப்பாணத்திலை இருந்து ஒருத்தரும் கொழும்பு போகேலையோ.நீங்கள் கேட்பீர்கள் போனவை ஆனா பெரும் சாகசங்கள் செய்துதான் போகவேண்டியிருந்தது அந்த சாகசங்கள்
தொடரும்............
<b>நன்றி - ஈழநாதனின் வலைப்பூ</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

