05-18-2004, 09:50 PM
முரளியை விமர்சித்த வீரருக்கு ஒரு போட்டித்தடை
சிம்பாவே கிரிக்கெட் அணியில் அன்டிபிளவர், ஹென்றி ஒலங்கா இருவரும் ஆரம்பித்து வைத்தார்கள். அன்று தொடக்கம் இன்றுவரை அவ் அணியில் சர்ச்சைகளுக்கு குறைவே இல்லை.
முதலில் 15 வெள்ளையின வீரர்களின் வெளியேற்றம் மஹ்வியறின் முறையற்ற பந்து வீச்சு இது தவிர தற்போது இலங்கை அணியின் முரளிதரனை விமர்சித்தார் என சிம்பாப்வே அணியின் உபதலைவர் டியோன் எப்ராஹிம் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் சிம்பாப்வே அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதலாவது நாள் ஆட்ட முடிவில் தொலைபேசி பேட்டியொன்றின் போது முரளிதரன் குறித்து கருத்து வெளியிட்ட எப்ராஹிம், முரளிதரன் வீசிய பந்துகளிலேயே "லெக்பிரேக்' பந்து வீச்சு மாத்திரமே முறையானது என்றார். உடனே ஏப்ராஹிமின் இக்கருத்துக்கெதிராக போட்டி நடுவர் மைக் பிரொக்டரிடம் இலங்கை அணியின் நிர்வாகிகள் முறையிடவே எப்ராஹிம்மை அழைத்து விசாரித்த போட்டி நடுவர் அவருக்கு ஒரு போட்டிக்கான தடையை விதித்தார்.
வீரகேசரி
சிம்பாவே கிரிக்கெட் அணியில் அன்டிபிளவர், ஹென்றி ஒலங்கா இருவரும் ஆரம்பித்து வைத்தார்கள். அன்று தொடக்கம் இன்றுவரை அவ் அணியில் சர்ச்சைகளுக்கு குறைவே இல்லை.
முதலில் 15 வெள்ளையின வீரர்களின் வெளியேற்றம் மஹ்வியறின் முறையற்ற பந்து வீச்சு இது தவிர தற்போது இலங்கை அணியின் முரளிதரனை விமர்சித்தார் என சிம்பாப்வே அணியின் உபதலைவர் டியோன் எப்ராஹிம் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் சிம்பாப்வே அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதலாவது நாள் ஆட்ட முடிவில் தொலைபேசி பேட்டியொன்றின் போது முரளிதரன் குறித்து கருத்து வெளியிட்ட எப்ராஹிம், முரளிதரன் வீசிய பந்துகளிலேயே "லெக்பிரேக்' பந்து வீச்சு மாத்திரமே முறையானது என்றார். உடனே ஏப்ராஹிமின் இக்கருத்துக்கெதிராக போட்டி நடுவர் மைக் பிரொக்டரிடம் இலங்கை அணியின் நிர்வாகிகள் முறையிடவே எப்ராஹிம்மை அழைத்து விசாரித்த போட்டி நடுவர் அவருக்கு ஒரு போட்டிக்கான தடையை விதித்தார்.
வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

