05-18-2004, 09:48 PM
அவுஸ்திரேலிய தொடரை புறக்கணிக்கும் முரளிதரனின் முடிவுக்கு ஆதரவு
அவுஸ்திரேலிய தொடரை புறக்கணிக்கும் முரளிதரனின் முடிவுக்கு இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனுக்கும் இடையிலான பிரச்சினை சுமார் 10 ஆண்டு காலமாக நீடிக்கிறது. இவரது ஒவ்வொரு அசைவுக்கும் ஏதாவது ஒரு புகாரை கூறுவது அவுஸ்திரேலிய அணியினரின் வழக்கம். கடந்த 199596இல் இலங்கை அணி அவுஸ்திரேலியா சென்ற போது முரளிதரன் பந்தை எறிவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு பின்னரும் இவரது பந்துவீச்சு முறை குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் கிளப்பப்பட்டு வந்தன. சமீபத்தில் அவுஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மீண்டும் பிரச்சினை வெடித்தது.
"துõஸ்ரா' தடை அதாவது முரளியின் "தூஸ்ரா' வகை பந்துவீச்சு, வலது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடியை தருவதாக கூறப்பட்டது. இவ்வகை பந்துகள் அதிவிரைவாக விலகிச் செல்வதால் துடுப்பாட்ட வீரர்களால் பந்தை அடிக்க இயலவில்லை என்று விளக்கமும் தரப்பட்டது.பின்னர் இது பற்றி சோதனை நடத்தப்பட்டது. இறுதியில் இந்த வகையில் பந்துவீச இவருக்கு தடை விதிக்கப்பட்டது. இப்படி அவுஸ்திரேலியாவுடன் மோதும் போதெல்லாம் முரளி பற்றி ஏதாவது ஒரு பிரச்சினை கிளப்பப்படும்.
இந்நிலையில் அடுத்த மாதம் இலங்கை அணி அவுஸ்திரேலியா சென்று 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரில் பங்கேற்பது குறித்து முரளிதரன் சந்தேகம் வெளியிட்டு இருந்தார்.
தனது பந்துவீச்சை மதிக்காமல் தொடர்ந்து புகார் கூறும் மண்ணில் விளையாட விருப்பம் இல்லை என்றும் கூறியிருந்தார். இதற்கிடையே அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹோவார்ட் முரளிதரன் பந்தை எறிகிறார் என்று சமீபத்தில் புகார் கூற பிரச்சினை பூதாகரமாக மாறியது. அவுஸ்திரேலிய அரசை நடத்துவதில் மட்டும் ஹோவார்ட் கவனம் செலுத்தினால் போதும். உண்மை அறியாமல் எனது பந்துவீச்சு குறித்து விமர்சிக்க தேவையில்லை என்று முரளிதரன் பதிலடி கொடுத்தார். இவரது இந்த கருத்தை இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவும் பிரதிபலித்துள்ளார். டெஸ்ட் அரங்கில் 523 விக்கெட்டுகள் வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ள வீரர் மீது ஹோவர்ட் புகார் கூறியுள்ளது முட்டாள்தனமானது.
வெளிநாட்டவர்கள் வேண்டுமென்றே முரளிதரன் குறித்து சர்ச்சையை கிளப்புவதை ஏற்க இயலாது என கருத்து தெரிவித்துள்ளார். இதே போல் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் மொஹான் டி சில்வாவும் முரளிதரனுக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியா செல்ல விருப்பம் இல்லை என்று முரளிதரன் கோரிக்கை விடுத்தால், அதை உடனடியாக ஏற்போம். இவருக்கு மதிப்பு அளிக்காத இடத்துக்கு வற்புறுத்தி அனுப்பி வைக்க மாட்டோம். ஹோவர்டின் கருத்து ஏமாற்றத்தை தந்துள்ளது என்கிறார் டி சில்வா.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வோர்னை(519 விக்.,) முந்தி அதிக விக்கெட் வீழ்த்திய முரளிதரனால் சர்ச்சையில் இருந்து மட்டும் மீள முடியவில்லை. இவரது பிரச்சினையால் அவுஸ்திரேலிய, இலங்கை இடையிலான விளையாட்டு உறவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் ஹோவார்டின் புகார், அதை தொடர்ந்து முரளியின் புறக்கணிப்பு முடிவு போன்றவை நிலைமையை இன்னும் மோசமடையச் செய்யக்கூடும்.
வீரகேசரி
அவுஸ்திரேலிய தொடரை புறக்கணிக்கும் முரளிதரனின் முடிவுக்கு இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனுக்கும் இடையிலான பிரச்சினை சுமார் 10 ஆண்டு காலமாக நீடிக்கிறது. இவரது ஒவ்வொரு அசைவுக்கும் ஏதாவது ஒரு புகாரை கூறுவது அவுஸ்திரேலிய அணியினரின் வழக்கம். கடந்த 199596இல் இலங்கை அணி அவுஸ்திரேலியா சென்ற போது முரளிதரன் பந்தை எறிவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு பின்னரும் இவரது பந்துவீச்சு முறை குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் கிளப்பப்பட்டு வந்தன. சமீபத்தில் அவுஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மீண்டும் பிரச்சினை வெடித்தது.
"துõஸ்ரா' தடை அதாவது முரளியின் "தூஸ்ரா' வகை பந்துவீச்சு, வலது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடியை தருவதாக கூறப்பட்டது. இவ்வகை பந்துகள் அதிவிரைவாக விலகிச் செல்வதால் துடுப்பாட்ட வீரர்களால் பந்தை அடிக்க இயலவில்லை என்று விளக்கமும் தரப்பட்டது.பின்னர் இது பற்றி சோதனை நடத்தப்பட்டது. இறுதியில் இந்த வகையில் பந்துவீச இவருக்கு தடை விதிக்கப்பட்டது. இப்படி அவுஸ்திரேலியாவுடன் மோதும் போதெல்லாம் முரளி பற்றி ஏதாவது ஒரு பிரச்சினை கிளப்பப்படும்.
இந்நிலையில் அடுத்த மாதம் இலங்கை அணி அவுஸ்திரேலியா சென்று 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரில் பங்கேற்பது குறித்து முரளிதரன் சந்தேகம் வெளியிட்டு இருந்தார்.
தனது பந்துவீச்சை மதிக்காமல் தொடர்ந்து புகார் கூறும் மண்ணில் விளையாட விருப்பம் இல்லை என்றும் கூறியிருந்தார். இதற்கிடையே அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹோவார்ட் முரளிதரன் பந்தை எறிகிறார் என்று சமீபத்தில் புகார் கூற பிரச்சினை பூதாகரமாக மாறியது. அவுஸ்திரேலிய அரசை நடத்துவதில் மட்டும் ஹோவார்ட் கவனம் செலுத்தினால் போதும். உண்மை அறியாமல் எனது பந்துவீச்சு குறித்து விமர்சிக்க தேவையில்லை என்று முரளிதரன் பதிலடி கொடுத்தார். இவரது இந்த கருத்தை இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவும் பிரதிபலித்துள்ளார். டெஸ்ட் அரங்கில் 523 விக்கெட்டுகள் வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ள வீரர் மீது ஹோவர்ட் புகார் கூறியுள்ளது முட்டாள்தனமானது.
வெளிநாட்டவர்கள் வேண்டுமென்றே முரளிதரன் குறித்து சர்ச்சையை கிளப்புவதை ஏற்க இயலாது என கருத்து தெரிவித்துள்ளார். இதே போல் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் மொஹான் டி சில்வாவும் முரளிதரனுக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியா செல்ல விருப்பம் இல்லை என்று முரளிதரன் கோரிக்கை விடுத்தால், அதை உடனடியாக ஏற்போம். இவருக்கு மதிப்பு அளிக்காத இடத்துக்கு வற்புறுத்தி அனுப்பி வைக்க மாட்டோம். ஹோவர்டின் கருத்து ஏமாற்றத்தை தந்துள்ளது என்கிறார் டி சில்வா.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வோர்னை(519 விக்.,) முந்தி அதிக விக்கெட் வீழ்த்திய முரளிதரனால் சர்ச்சையில் இருந்து மட்டும் மீள முடியவில்லை. இவரது பிரச்சினையால் அவுஸ்திரேலிய, இலங்கை இடையிலான விளையாட்டு உறவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் ஹோவார்டின் புகார், அதை தொடர்ந்து முரளியின் புறக்கணிப்பு முடிவு போன்றவை நிலைமையை இன்னும் மோசமடையச் செய்யக்கூடும்.
வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

