Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எல்லாம் புரிந்தும் ஏன் இப்படியும் சிலர்....?!
#3
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
மரண தண்டனை என்பது ஒரு அதி உச்ச தீர்ப்பு என்பதுடன் அடிப்படை மனிதாபிமானக் கோட்பாடுகளுக்குள் வைத்து நியாயப்படுத்த முடியாத ஒரு தீர்ப்பும் கூட...! அப்படி இருந்தும் குற்றவாளிகளை நல் வழிப்படுத்தும் நோக்கில் மரண தண்டனை பற்றிய ஒரு உளவியல் பயத்தை தோற்றுவித்து அதன் மூலம் சமூகச் சீரழிவு நோக்கிய குற்றங்களைக் கட்டுப்படுத்துவது எங்கும் பொதுவானதே...ஆனால் மனிதனில் சக மனிதனுக்கு எதிராக கொடும் குற்றங்கள் புரிபவர்கள் இதனை விளங்கிக் கொள்ளவோ அல்லது இது தொடர்பாக வரும் முன்னெச்சரிக்கைகளை உள்வாங்கிக் கொள்ளவோ முனையாது தமது சமூகச் சீரழிவு அநியாயங்களைத் தொடரும் போது பலரதும் அடிப்படை மனித உரிமைகளைக் காப்பாற்ற இப்படியானர்களின் மீதான மனிதாபிமானப் பார்வை இழக்கப்படுவது என்பது என்னவோ தவிர்க்கமுடியாது போகிறது போலும்...! இருந்தாலும் குற்றவாளிகளும் மனிதர்களே என்று தண்டனை வழங்குபவர்கள் அவர்களுக்கு ஒரு அதிகபட்ச காலத்தை தமது தீவிர ரகசிய கண்காணிப்பின் கீழ் அவர்கள் நல்லவர்களாக திருந்தி வாழ அனுமதிக்க வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் அவசியம்....!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த கண்காணிப்பு, பல தடவைகள் எச்சரிப்புஇ ஆனால் அதை ஒரு பொருட்டாக மதிக்காது தொடரந்தும் பணத்திற்கு கொலை செய்பவர்களை என்ன செய்யலாம். குறிப்பாக யாழ் குடாவில் இராணுவ கட்டுப்பாடு. இவரை நல்வளிப்படுத்த வன்னிக்கு கடத்திச்செல்ல வேண்டும். ஆனால் அதற்குள் இவர்கள் சும்மாயிருப்பார்களா? நியாயமான கூற்று ஆனால் நடைமுறை? சில இடங்களில் நடை முறை சாத்தியம் நியாயப்பாடுகளையும் நிராகரிக்க வைக்கும் என்பது வேதனையான உண்மை!
Reply


Messages In This Thread
[No subject] - by Shan - 05-18-2004, 11:10 AM
[No subject] - by Shan - 05-18-2004, 11:11 AM
[No subject] - by kuruvikal - 05-18-2004, 03:35 PM
[No subject] - by tamilini - 05-18-2004, 09:02 PM
[No subject] - by kuruvikal - 05-24-2004, 05:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)