05-14-2004, 03:42 AM
கருணாவின் குடும்பத்தை கண்டுபிடிக்க புலிகளின் உளவுப்பிரிவினர் மலேசியாவிற்கு அனுப்பிவைப்பு
கருணாவின் குடும்பத்தைக் கண்டு பிடிப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட இராணுவக் குழுவொன்றை மலேஷியாவுக்கு அனுப்பிவைத்துள்ளனர். இவர்கள் உளவுப்பிரிவைச் சேர்ந்தவர்கள். இக்குழுவினர் கருணாவின் குடும்பத்தை கண்டு பிடிப்பதில் மும்முரமாக ஈடுபடுவர் என ஆசியன் டிரிபியூன் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆசியன் டிரிபியூன் சஞ்சிகை கருணாவின் மனைவி, பிள்ளைகள் ஆகியோர் உட்பட அவரின் குடும்பத்தினர் மலேஷியாவில் தங்கியிருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.
அவர்கள் கடந்த மார்ச் மாதத்துக்குப் பின்னரே மலேஷிய பயணத்தை மேற்கொண்டார்கள் என்றும் அச்சஞ்சிகை குறிப்பிட்டிருந்தது. கருணாவின் சகாக்கள் கிழக்கில் பல கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்.
கிழக்கிலிருந்து வெளியேறியுள்ள கருணாவின் குடும்பத்தை நிர்மூலமாக்குவதன் மூலம் கருணாவுக்கு பெருந்தாக்கத்தை ஏற்படுத்த முடிவு கட்டப்பட்டுள்ளது. அதேவேளை கருணாவின் சகோதரர் ரெஜி, சுமார் 80 கொமாண்டோக்களோடு, அம்பாறை மாவட்டக்காட்டுப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புலிகள் படையினருக்கு பெருத்த சேதங்களை விளைவிப்பதே அவர்களின் நோக்கமாகும். கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச உளவுப்பிரிவின் தலைவர் பொட்டு அம்மான், குட்டி என்பவரின் தலைமையில் நால்வரைக்கொண்ட குழுவினரை மே 10 ஆம் திகதி கோலாலம்பூருக்கு அனுப்பிவைத்துள்ளார். இவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து அங்கு கிளம்பியுள்ளனர் என்றும் அச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
நன்றி - வீரகேசரி
கருணாவின் குடும்பத்தைக் கண்டு பிடிப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட இராணுவக் குழுவொன்றை மலேஷியாவுக்கு அனுப்பிவைத்துள்ளனர். இவர்கள் உளவுப்பிரிவைச் சேர்ந்தவர்கள். இக்குழுவினர் கருணாவின் குடும்பத்தை கண்டு பிடிப்பதில் மும்முரமாக ஈடுபடுவர் என ஆசியன் டிரிபியூன் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆசியன் டிரிபியூன் சஞ்சிகை கருணாவின் மனைவி, பிள்ளைகள் ஆகியோர் உட்பட அவரின் குடும்பத்தினர் மலேஷியாவில் தங்கியிருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.
அவர்கள் கடந்த மார்ச் மாதத்துக்குப் பின்னரே மலேஷிய பயணத்தை மேற்கொண்டார்கள் என்றும் அச்சஞ்சிகை குறிப்பிட்டிருந்தது. கருணாவின் சகாக்கள் கிழக்கில் பல கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்.
கிழக்கிலிருந்து வெளியேறியுள்ள கருணாவின் குடும்பத்தை நிர்மூலமாக்குவதன் மூலம் கருணாவுக்கு பெருந்தாக்கத்தை ஏற்படுத்த முடிவு கட்டப்பட்டுள்ளது. அதேவேளை கருணாவின் சகோதரர் ரெஜி, சுமார் 80 கொமாண்டோக்களோடு, அம்பாறை மாவட்டக்காட்டுப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புலிகள் படையினருக்கு பெருத்த சேதங்களை விளைவிப்பதே அவர்களின் நோக்கமாகும். கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச உளவுப்பிரிவின் தலைவர் பொட்டு அம்மான், குட்டி என்பவரின் தலைமையில் நால்வரைக்கொண்ட குழுவினரை மே 10 ஆம் திகதி கோலாலம்பூருக்கு அனுப்பிவைத்துள்ளார். இவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து அங்கு கிளம்பியுள்ளனர் என்றும் அச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

