05-14-2004, 12:36 AM
ஜனாதிபதிக்கும் தமிழீழ தேசியத் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு தற்போது அவசியமில்லை -புலிகள்
சிறிலங்கா ஜனாதிபதிக்கும், தமிழீழ தேசியத் தலைவருக்கும் இடையிலான சந்திப்பொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான செய்திகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக மறுத்துள்ளனர்.
நோர்வே தரப்பின் ஊடாக தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்காவை லண்டனில் சந்திக்கவுள்ளதாக "டெய்லி மிரர்" ஆங்கில நாளேடு உட்பட கொழும்பின் செய்தி ஸ்தாபனங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.
இச்செய்தி குறித்து எமது அமைப்பும் உறுப்பினர்களும் ஆச்சரியம் அடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்;டர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சந்திப்பொன்றில் அவசியம் இருப்பதாக விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் கருதவில்லை எனத் தெரிவித்த அவர் சமாதானப் பேச்சுவார்த்தை குறித்து எமது நிலைப்பாட்டை ஏற்கனவே அரசுக்கு அறிவித்துவிட்டோம். அந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் கருத்துரைத்துள்ளார்.
தற்போதைய சமாதான முயற்சிகளுக்கு சாதகமான பதில் கிடைக்காமல் உலகம் சுற்றி எவரையும் சந்திப்பதில் தமிழீழு விடுதலைப் புலிகள் ஆர்வம் கொள்ளவில்லை எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் விளக்கியுள்ளார்.
புதினம்
சிறிலங்கா ஜனாதிபதிக்கும், தமிழீழ தேசியத் தலைவருக்கும் இடையிலான சந்திப்பொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான செய்திகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக மறுத்துள்ளனர்.
நோர்வே தரப்பின் ஊடாக தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்காவை லண்டனில் சந்திக்கவுள்ளதாக "டெய்லி மிரர்" ஆங்கில நாளேடு உட்பட கொழும்பின் செய்தி ஸ்தாபனங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.
இச்செய்தி குறித்து எமது அமைப்பும் உறுப்பினர்களும் ஆச்சரியம் அடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்;டர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சந்திப்பொன்றில் அவசியம் இருப்பதாக விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் கருதவில்லை எனத் தெரிவித்த அவர் சமாதானப் பேச்சுவார்த்தை குறித்து எமது நிலைப்பாட்டை ஏற்கனவே அரசுக்கு அறிவித்துவிட்டோம். அந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் கருத்துரைத்துள்ளார்.
தற்போதைய சமாதான முயற்சிகளுக்கு சாதகமான பதில் கிடைக்காமல் உலகம் சுற்றி எவரையும் சந்திப்பதில் தமிழீழு விடுதலைப் புலிகள் ஆர்வம் கொள்ளவில்லை எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் விளக்கியுள்ளார்.
புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

