05-04-2004, 08:22 AM
சத்யனுக்கு சங்கரியின் பதில்!
சத்யன் 'ஞாயிறு தினக்குரல்" இல் எனக்கு எழுதிய கடிýதத்திற்கு பதில் எழுதவேண்டிýய கடமை எனக்கு உண்டு என்பதனால் இதனைத் தருகின்றேன்.
தமிழர் விடுதலைக் கூýட்டணி ஒரு பாரம்பரிய, பழைமையானதும், ஜனநாயக மரபிற்குட்பட்ட கட்சி என்பதும் யாவரும் அறிந்ததே. அந்தக் கட்சியின் தலைமைப் பதவியில் இருக்கும் எனக்கும் பல பொறுப்புக்கள் உண்டு. கட்சித் தலைமைப் பதவியில் இருந்து என்னை வலுக்கட்டாயமாக பதவியிறக்க முயற்சி செய்ததில் இருந்து, தேசியப்பட்டிýயலில் ஹெல உறுமய எனக்கு வழங்க முன்வந்த பா.உ. பதவியையும், நிராகரித்த விடயம் வரை நான் பொறுப்புணர்வுடனும், தலைமைத்துவப் பண்புடனும், சுயநலன்களுக்கப்பால் இருந்து செயற்படக் கடமைப்பட்டுள்ளேன் என்பதை வெளிப்படுத்தியுள்ளேன். கண்ணியமான எமது கட்சித் தலைவர்கள் விட்டுச் சென்ற இடத்தில் நான் இருந்து கொண்டு அவர்களை மறந்து எனது பணிகளைத் தொடர்வது சத்திய வாழ்வாகுமா?.
எனது 50 வருட அரசியல் வாழ்விலும், நான் வந்த பாதையை, பொது வாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிýக்க வேண்டும் என்பதில் எனது உறுதி தளராது. எனது அரசியல் வாழ்வு ஒரு திறந்த புத்தகம், அதைவிட வேறு ஏதும் சிறப்பான சான்று எனக்கில்லை.
தலைமைப் பதவி என்பது கட்சியானாலும் சரி, ஒரு நிறுவனமானாலும் சரி மிகவும் பொறுப்பு வாய்ந்தது என்பதை நீங்களும் நன்கறிவீர்கள். தமிழர் விடுதலைக் கூýட்டணிக் கட்சியின் தலைவராகிய எனக்கு ஒரு அடையாளம் உண்டு. அது இருக்க வேண்டும் என நம்புபவன் நான். நான் கூýறுவதும் எழுதுவதும் எல்லாம் எனது பெயரிலேயே வெளிவரும். ஆனந்தசங்கரி இன்று ஒன்றும், நேற்று ஒன்றும் கூýறுபவராக நான் அடையாளம் காணப்படுவதை விரும்புபவனும் அல்லன்.
அந்தவகையில் சில நிகழ்கால உதாரணங்களைப் பாருங்கள். கருணா பிரச்சினை, தேர்தல் காலத்தில் எழுந்தபோது அது விடுதலைப்புலிகளின் உள்விவகாரம், அதில் தலையிட எனக்கு உரிமையில்லை என்றே இதுபற்றி அப்போது என்னிடம் வினா எழுப்பிய பத்திரிகைகளுக்கு நான் கூýறியிருந்தேன். எனினும், வடக்கு-கிழக்கு இணைந்த பிரதேசம் என்பதை வலியுறுத்தியும் இருந்தேன். கருணா விவகாரத்தை சில நாட்களில் அவர்களுடைய இரானுவ பாணியில் முடிýத்துவைத்து நிலைமைகளைக் கட்டுப்பாட்டிýற்குள் கொண்டு வந்தார்கள் விடுதலைப்புலிகள். எமது கட்சியிலும் அவ்வாறு சில பிரச்சினைகள் எழுந்தன. தலைமைப் பதவியில் ஆசை கொண்டவர்கள் உட்கட்சிப் பிரச்சினையை ஏற்படுத்தியதை தமிழ் உலகம் நன்கு அறியும். எமது கட்சிக்குரிய வழியில் நான் எனது தலைமைப் பதவியை தக்கவைத்துக்கொள்ள ஜனநாயக வரையறைக்குள் போராடவேண்டிý இருந்தது. அதில் என்ன தவறு?
என்னைப் பற்றி விடுதலைப்புலிகளிடம் விர்மத்தனமாக மூýட்டிýவைத்தவர்கள் சுயநலத்தில் நடந்து கொண்டதையும், அவர்கள் இங்கொன்றும், அங்கொன்றும் கதைப்பதை விடுதலைப்புலிகள் இயக்கம் விபரமாக அறியமுற்படாதது துரதிர்ர்;டமானது என்றே நான் கருதுகிறேன். இவர்களெல்லாம் பொறுப்புள்ள பதவியில் இருந்து கதைக்கும்போது, என்னைப் போலவே இந்திய அரசின் நட்பை, இந்தியாவின் ஆதரவை நாடிý நிற்கின்றனர்.
வலுக்கட்டாயமாக, நியாயமற்ற முறையில் ஒருவரை அவர் இருக்கும் இடத்தில் இருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தால் நீங்களோ, அல்லது எந்த ஒரு சுயமரியாதை உள்ள ஒருவரோ ஏற்றுக்கொள்வாரா? எனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பகையை வேண்டும் என்றே வளர்த்த சிலர் விடுதலைப் புலிகளின் உதவியை நாடிý எமது உட்கட்சியில் உருவான பிரச்சினையை பெரிது படுத்தியதும் நீங்கள் அறியாமல் இருந்திருக்க முடிýயாது. எமது கட்சியில் பிரச்சினை வந்தபோது, அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று நாம் விட்டுவைக்கப்படவில்லை. கடைசியில் வேறு வழியின்றி நீதி கேட்டு நீதிமன்றிற்குப்போக நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். கோட்டுக்குப் போய்த்தான் சத்தியத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால், என்னுடன் இருந்தவர்களெல்லாம் சத்தியவான்களாக இல்லையென்பதுதானே உண்மை.
தேசியப்பட்டிýயல் மூýலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்னைத் தேடிý வருவது இது முதற்தடவையல்ல. இரண்டாவது தடவையுமல்ல. முதலில் அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட போதும் இடம் வந்தது., 'இதுவரை பாராளுமன்றம் செல்லாத ஒரு இளைஞரை அனுப்புவதே சிறப்பு" என்று தனக்கே பொருத்தமானதாக ஜாடையாகச் சொல்லி கேட்டுப் பெற்றுக் கொண்டார் மாவை சேனாதிராஜா. அதை மனமுவந்து விட்டுக் கொடுத்ததும் நானே. பின்னர் நீலனின் மறைவிற்குப் பின்னர் கூýட காலவதியான இடம் வந்தபோது தன்னையே மீண்டும் அவ்வெற்றிடத்திற்கு நியமிக்க வேண்டும் என சேனாதிராஜா கேட்டுக்கொண்டார். அப்போதும் நான் போட்டிý போடாமல் விட்டுக்கொடுத்தேன். அவர் பதவியைப் பெற்றுக் கொண்டார். இதனால் அவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வ10தியத்தினை பெறுவதற்கு என்னால் உதவக் கூýடிýயதாகவிருந்தது.
1970 இல் மூýன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டும் வென்றோம். அருளம்பலம், தியாகராசாவுடன் நானும் வெல்ல, ஜீ.ஜீ. உட்பட அனைவரும் தோல்வி கண்டனர். அருளம்பலம், தியாகராசா அரசுடன் சேர்ந்து கொண்டனர். நான் மட்டுமே அன்று தனித்து இருந்த அந்நாள் தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர். விரும்பியிருந்தால் அன்றே நான் அரசுடன் சேர்ந்திருக்க முடிýயும். அமைச்சராகவும் போயிருக்க முடிýயும். ஆனால், நான் அரசில் சேரவும் இல்லை. அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவும் இல்லை. தேசியப்பட்டிýயல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி மூýலம் நன்றி மறந்து எமது கட்சிக்காரர் சிலர் போல் கோடிýக் கணக்கில் உழைத்திருக்கவும் முடிýயும். அப்படிý ஒரு பணக்கார வாய்ப்புக்கு சிலரைப் போல் அடிýபடுவதை விட எனது இலட்சியத்துக்காக மோதித் தோற்றாலும் அதை என் உயிரைவிட உயர்வாய் கருதுகிறேன்.
யாழ்ப்பாண தேர்தல் பிரசாரம் எப்படிý நடந்தது என்பதை சத்தியத்தின் பெயர் கொண்டு எழுதும் நீங்கள் உண்மைகளை உண்மையாகவும் எழுத வேணடும். யாழ். பிரசாரத்தில் நாம் பிரசாரம் செய்ய முடிýயவில்லை. கூýட்டங்கள் நடத்த முடிýயவில்லை. சில காடையர்கள் எமது பிரசுரங்களை எரித்த சம்பவமும், எமது வேட்பாளர்கள் வீட்டிýற்கு மலர்வளையங்கள் வைத்து மிரட்டிýச் சென்ற சம்பவங்களும் நடந்தேறின. பிரசார வாகனங்கள் மறித்து தாக்கப்பட்டதும் உண்டு. கூýட்டமைப்பின் பெண் வேட்பாளரின் பிரசார அணியினரால் எமது வேட்பாளர் தாக்கப்பட்டதும் அதற்கான பொலிஸ் முறைப்பாடுகளும் யாழ்ப்பாணத்தில் உண்டு. பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? என்பது இதைத்தானா?
கள்ள வாக்குப் போடுவது எப்போதும் நடப்பது தானே என்று நியாயம் கற்பிக்கிறீர்கள். பெண் ஆணாகவும், ஆண் பெண்ணாகவும், இறந்தவர்கள் எழுந்து வந்ததும், வெளிநாட்டிýல் அகதியாய் இருப்பவர் திடPரென வாக்களிக்க வந்ததும், மனைவியும் மூýன்று பிள்ளைகளுமான குடும்பத் தலைவனாக பதினேழு வயதுச் சிறுவன் வந்ததும் இத்தேர்தலில் தான் என்றால் அதனையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். மிரட்டல்கள், மோசடிýகள், ஆட்கடத்தல்கள் போன்றவை இடம்பெற்றதை நீங்கள் பத்திரிகைகளில் படிýத்து அறிந்திருக்க முடிýயாது. வாக்கு அட்டைகளை வீடுகளுக்குச் சென்று வாங்கிச் சென்றதும், சிலரை வாக்களிக்கக் கூýடாது என எச்சரித்ததும் நிறையவே நடந்தன. உண்மைகளை நாம் ஒவ்வொருவரும் உணர மறுக்கும் போது நியாயம் மிகத் தொலைவில் தான் நிற்கும்.
உங்கள் பத்திரிகை கடிýதத்தில் இன்று அவர்களை <b>'ஏகபிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டு தேர்தலில் வென்றிருப்பவர்களில் சகலருமே உத்தம புத்திரர்களில்லை"</b> என நீங்கள் எழுதிய வரிகள் மூýலம் உண்மைகள் எங்கிருந்தாலும் அவை வந்து சேரும் என்ற நம்பிக்கை ஒளி விடுவது எனக்கு கண்டிýப்பாக உற்சாகம் தருகிறது.
மேலும், என்னை வெளியே சென்று கூýட்டம் வைக்க தடங்கல் பண்ணி நீங்களே ஒப்புக்கொண்ட 'உத்தமமற்ற" தமிழ் கூýட்டமைப்பு வேட்பாளர்களின் விர்மத்தனமான பொய்ப் பிரசாரத்திற்கு அனுமதித்தது நியாயமா சத்யன்? ஒருவரைக் கட்டிýவைத்துவிட்டு, ஏனையவர்களை ஓடச்செய்து வெற்றிபெற வைப்பது நியாயமான பந்தயம்தானா? சொல்லுங்கள். தம்பி பிரபாகரன் 80 களில் கூýறிய ஒரு பதிலில் 'தடிý எடுத்தவன் எல்லாம் சண்டிýயன் இல்லை" என்று தெரிவித்ததைத்தான் நான் இங்கும் ஞாபகப்படுத்த முடிýயும். ஏனென்றால் நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களெல்லாம் சேவை மனப்பான்மை கொண்டவர்களோ, அன்றி இலட்சியவான்களோ அல்லர்.
சுரேர்; பிரேமச்சந்திரன் சில வருடங்களுக்கு முன்னர் நடந்து கொண்டது போல் அல்லது விடுதலைப்புலிகளை பாஸிசப் புலிகள் என விமர்சித்ததும், அவர்களைத் தேடிýத் தேடிý அழித்த அளவிற்கு நான் எமது மக்களின் நலனிற்கோ, அன்றி, விடுதலைப்புலிகளுக்கு எதிராகவோ செயற்பட்டதில்லை. சுரேர்; பிரேமச்சந்திரன் மீன்பிடிý அமைச்சில் தனக்கு வேலை ஒன்றை கேட்டுப் பெற்றுக் கொண்டதைப் போல் வரலாறு எனக்கில்லை., சேனாதிராஜாவைப் போல் தேசியப்பட்டிýயலுக்கு எனது பெயரைப் போட போராட்டம் நடத்தியதுமில்லை. எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தியே பழக்கப்பட்டவர் அவர். சத்தியமாகச் சொல்லுங்கள் சத்யன், அமரர் அமிர்தலிங்கத்தை மறந்த சேனாதிராஜாவிற்கு, விடுதலைப்புலிகளை மறக்க நீண்ட காலமா எடுக்கும்?.
எனவே யாழ். மாவட்டத்தில் எனக்கும், ஜனநாயகத்திற்கும் நடந்ததை ஹெல உறுமய உணர்ந்து எனக்கு தேசியப் பட்டிýயலில் இடம் தரினும் அதை ஏற்கக்கூýடிýய கொள்கையில்லா அரசியல் எனக்கு வேண்டாத ஒன்று. கொள்கையில் எனக்கும் ஹெல உறுமயவிற்கும் மிக நீண்ட தூரம். எதிர் எதிர் திசைகள். எனது முன்னாள் சகாக்கள் போல் பாராளுமன்ற பதவிக்கும், வசதிக்கும் அரசியல் நடத்துபவன் அல்ல நான். இதுவே உண்மையாக இருக்கும் போது ஹெல உறுமயவிடம் நான் ஏதோ பதவி கேட்டுச் செல்வது போலவும், என்னை ஒரு பௌத்த பிக்குவாகவும், அட்சய பாத்திரத்துடன் அவர்கள் பின்னே செல்வதாகவும் ஒரு கேலிச் சித்திரம் வரைந்து சித்திரித்ததையும் மறப்பதற்கில்லை. விடுதலைப்புலிகள் ஒவ்வொரு வேட்பாளரையும் தனித்தனியே விமர்சனம் செய்யும்படிý, கோரட்டும். நடிýத்தவர்கள் யார்? நடிýப்பவர்கள் யார்? என்பதை அவர்களே உணருவர். அக்காலம் மிகத் தொலைவில் இல்லை என்பதே என் கணிப்பு. சில உண்மைகளை நேரடிýயாகவே சொல்லி விடுகின்றேன் என்ற உண்மையைத் தவிர, விடுதலைப்புலிகளிடம் மூýடிý மறைக்க எதுவும் என்னிடத்தில் இல்லை. மேலும், ஏகபிரதிநிதிகள் என்ற சொல்லின் அர்த்தத்தில்தான் எனது வேறுபாடேயன்றி மிகுதி யாவும் மிகைப்படுத்தலே. விடுதலைப்புலிகள் தான் அரசுடன் பேச வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து என்றும் இருந்ததில்லை. பலரும் பிரதிநிதித்துவப்படுத்தும் போது ஏகபிரதிநிதியென்பது பொருத்தமற்ற சொற்பிரயோகம் என்பதே எனது விவாதமாக இருந்தது.
பதவிக்காக எதையும் சொல்வார் சுரேர்; பிரேமச்சந்திரன் போன்றோர். இந்திய அமைதிப்படைக் காலத்தில் ஒரு கதை. அம்மையாரிடம் மீன்பிடிý அமைச்சில் வேலை பெறுவதற்கு ஒரு விளக்கம். இன்று பதவிக்காக ஒரு புது விளக்கம். இவர்கள் போன்றோர் பதவிக்காக யாரையும் போற்றக் கூýடும். நாளை அவர்களையே தூற்றவும் செய்வர். <b>விடுதலைப் புலிகளையே தூற்றித் திரிந்து, துரத்திப் பிடிýத்து வேட்டையாடிýயவர்கள் இன்று போற்றிப் பேசுவதால் அவர்கள் தியாகிகளாகி விட்டனரா? இவர்களுக்கு உடனேயே தமிழ் தேசியப் பற்றும் வந்துவிட்டதா?</b> தேர்தல் வெற்றியொன்றையே நோக்கமாகக் கொண்டு செயற்பட்ட இவர்களில் சிலர் தங்களின் தலைவர்களையே துரோகிகளாக காட்டிý அவர்களின் பெயரைக் கூýட உச்சரிக்க கூýச்சப்படுபவர்களாகவே இருக்கின்றனர். தலைவர்களை அடிýயோடு மறந்தவர்களும் உண்டு. விடுதலைப்புலிகளுக்கு நல்ல பிள்ளைகளாக நடிýப்பவர்களும் உண்டு.
மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல தலைவர்களான ஜீ.ஜீ. பொன்னம்பலம், அமிர்தலிங்கம் போன்றவர்கள் கூýறியதாக கூýறப்படும் கடும் சொற்களை நான் ஒரு போதும் ஆதரிக்கவில்லை. ஏனெனில், ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். அவர்களின் தீர்ப்பிற்கு நாம் கட்டுப்பட்டவர்கள். இந்த முறை தேர்தலும் நேர்மையாக நடந்திருந்தால் மக்களின் தீர்ப்பினை ஏற்றிருப்பேன். எனவே, இத்தனை தடைகளையும் தாண்டிý வந்து வாக்களித்த 5 170 பேரின் துணிவிற்கும், உள்ளத் தூய்மைக்கும், ஆதரவிற்கும் எனது நன்றிகள் என்றும் இருக்கும்.
தினக்குரல்
சத்யன் 'ஞாயிறு தினக்குரல்" இல் எனக்கு எழுதிய கடிýதத்திற்கு பதில் எழுதவேண்டிýய கடமை எனக்கு உண்டு என்பதனால் இதனைத் தருகின்றேன்.
தமிழர் விடுதலைக் கூýட்டணி ஒரு பாரம்பரிய, பழைமையானதும், ஜனநாயக மரபிற்குட்பட்ட கட்சி என்பதும் யாவரும் அறிந்ததே. அந்தக் கட்சியின் தலைமைப் பதவியில் இருக்கும் எனக்கும் பல பொறுப்புக்கள் உண்டு. கட்சித் தலைமைப் பதவியில் இருந்து என்னை வலுக்கட்டாயமாக பதவியிறக்க முயற்சி செய்ததில் இருந்து, தேசியப்பட்டிýயலில் ஹெல உறுமய எனக்கு வழங்க முன்வந்த பா.உ. பதவியையும், நிராகரித்த விடயம் வரை நான் பொறுப்புணர்வுடனும், தலைமைத்துவப் பண்புடனும், சுயநலன்களுக்கப்பால் இருந்து செயற்படக் கடமைப்பட்டுள்ளேன் என்பதை வெளிப்படுத்தியுள்ளேன். கண்ணியமான எமது கட்சித் தலைவர்கள் விட்டுச் சென்ற இடத்தில் நான் இருந்து கொண்டு அவர்களை மறந்து எனது பணிகளைத் தொடர்வது சத்திய வாழ்வாகுமா?.
எனது 50 வருட அரசியல் வாழ்விலும், நான் வந்த பாதையை, பொது வாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிýக்க வேண்டும் என்பதில் எனது உறுதி தளராது. எனது அரசியல் வாழ்வு ஒரு திறந்த புத்தகம், அதைவிட வேறு ஏதும் சிறப்பான சான்று எனக்கில்லை.
தலைமைப் பதவி என்பது கட்சியானாலும் சரி, ஒரு நிறுவனமானாலும் சரி மிகவும் பொறுப்பு வாய்ந்தது என்பதை நீங்களும் நன்கறிவீர்கள். தமிழர் விடுதலைக் கூýட்டணிக் கட்சியின் தலைவராகிய எனக்கு ஒரு அடையாளம் உண்டு. அது இருக்க வேண்டும் என நம்புபவன் நான். நான் கூýறுவதும் எழுதுவதும் எல்லாம் எனது பெயரிலேயே வெளிவரும். ஆனந்தசங்கரி இன்று ஒன்றும், நேற்று ஒன்றும் கூýறுபவராக நான் அடையாளம் காணப்படுவதை விரும்புபவனும் அல்லன்.
அந்தவகையில் சில நிகழ்கால உதாரணங்களைப் பாருங்கள். கருணா பிரச்சினை, தேர்தல் காலத்தில் எழுந்தபோது அது விடுதலைப்புலிகளின் உள்விவகாரம், அதில் தலையிட எனக்கு உரிமையில்லை என்றே இதுபற்றி அப்போது என்னிடம் வினா எழுப்பிய பத்திரிகைகளுக்கு நான் கூýறியிருந்தேன். எனினும், வடக்கு-கிழக்கு இணைந்த பிரதேசம் என்பதை வலியுறுத்தியும் இருந்தேன். கருணா விவகாரத்தை சில நாட்களில் அவர்களுடைய இரானுவ பாணியில் முடிýத்துவைத்து நிலைமைகளைக் கட்டுப்பாட்டிýற்குள் கொண்டு வந்தார்கள் விடுதலைப்புலிகள். எமது கட்சியிலும் அவ்வாறு சில பிரச்சினைகள் எழுந்தன. தலைமைப் பதவியில் ஆசை கொண்டவர்கள் உட்கட்சிப் பிரச்சினையை ஏற்படுத்தியதை தமிழ் உலகம் நன்கு அறியும். எமது கட்சிக்குரிய வழியில் நான் எனது தலைமைப் பதவியை தக்கவைத்துக்கொள்ள ஜனநாயக வரையறைக்குள் போராடவேண்டிý இருந்தது. அதில் என்ன தவறு?
என்னைப் பற்றி விடுதலைப்புலிகளிடம் விர்மத்தனமாக மூýட்டிýவைத்தவர்கள் சுயநலத்தில் நடந்து கொண்டதையும், அவர்கள் இங்கொன்றும், அங்கொன்றும் கதைப்பதை விடுதலைப்புலிகள் இயக்கம் விபரமாக அறியமுற்படாதது துரதிர்ர்;டமானது என்றே நான் கருதுகிறேன். இவர்களெல்லாம் பொறுப்புள்ள பதவியில் இருந்து கதைக்கும்போது, என்னைப் போலவே இந்திய அரசின் நட்பை, இந்தியாவின் ஆதரவை நாடிý நிற்கின்றனர்.
வலுக்கட்டாயமாக, நியாயமற்ற முறையில் ஒருவரை அவர் இருக்கும் இடத்தில் இருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தால் நீங்களோ, அல்லது எந்த ஒரு சுயமரியாதை உள்ள ஒருவரோ ஏற்றுக்கொள்வாரா? எனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பகையை வேண்டும் என்றே வளர்த்த சிலர் விடுதலைப் புலிகளின் உதவியை நாடிý எமது உட்கட்சியில் உருவான பிரச்சினையை பெரிது படுத்தியதும் நீங்கள் அறியாமல் இருந்திருக்க முடிýயாது. எமது கட்சியில் பிரச்சினை வந்தபோது, அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று நாம் விட்டுவைக்கப்படவில்லை. கடைசியில் வேறு வழியின்றி நீதி கேட்டு நீதிமன்றிற்குப்போக நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். கோட்டுக்குப் போய்த்தான் சத்தியத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால், என்னுடன் இருந்தவர்களெல்லாம் சத்தியவான்களாக இல்லையென்பதுதானே உண்மை.
தேசியப்பட்டிýயல் மூýலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்னைத் தேடிý வருவது இது முதற்தடவையல்ல. இரண்டாவது தடவையுமல்ல. முதலில் அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட போதும் இடம் வந்தது., 'இதுவரை பாராளுமன்றம் செல்லாத ஒரு இளைஞரை அனுப்புவதே சிறப்பு" என்று தனக்கே பொருத்தமானதாக ஜாடையாகச் சொல்லி கேட்டுப் பெற்றுக் கொண்டார் மாவை சேனாதிராஜா. அதை மனமுவந்து விட்டுக் கொடுத்ததும் நானே. பின்னர் நீலனின் மறைவிற்குப் பின்னர் கூýட காலவதியான இடம் வந்தபோது தன்னையே மீண்டும் அவ்வெற்றிடத்திற்கு நியமிக்க வேண்டும் என சேனாதிராஜா கேட்டுக்கொண்டார். அப்போதும் நான் போட்டிý போடாமல் விட்டுக்கொடுத்தேன். அவர் பதவியைப் பெற்றுக் கொண்டார். இதனால் அவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வ10தியத்தினை பெறுவதற்கு என்னால் உதவக் கூýடிýயதாகவிருந்தது.
1970 இல் மூýன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டும் வென்றோம். அருளம்பலம், தியாகராசாவுடன் நானும் வெல்ல, ஜீ.ஜீ. உட்பட அனைவரும் தோல்வி கண்டனர். அருளம்பலம், தியாகராசா அரசுடன் சேர்ந்து கொண்டனர். நான் மட்டுமே அன்று தனித்து இருந்த அந்நாள் தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர். விரும்பியிருந்தால் அன்றே நான் அரசுடன் சேர்ந்திருக்க முடிýயும். அமைச்சராகவும் போயிருக்க முடிýயும். ஆனால், நான் அரசில் சேரவும் இல்லை. அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவும் இல்லை. தேசியப்பட்டிýயல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி மூýலம் நன்றி மறந்து எமது கட்சிக்காரர் சிலர் போல் கோடிýக் கணக்கில் உழைத்திருக்கவும் முடிýயும். அப்படிý ஒரு பணக்கார வாய்ப்புக்கு சிலரைப் போல் அடிýபடுவதை விட எனது இலட்சியத்துக்காக மோதித் தோற்றாலும் அதை என் உயிரைவிட உயர்வாய் கருதுகிறேன்.
யாழ்ப்பாண தேர்தல் பிரசாரம் எப்படிý நடந்தது என்பதை சத்தியத்தின் பெயர் கொண்டு எழுதும் நீங்கள் உண்மைகளை உண்மையாகவும் எழுத வேணடும். யாழ். பிரசாரத்தில் நாம் பிரசாரம் செய்ய முடிýயவில்லை. கூýட்டங்கள் நடத்த முடிýயவில்லை. சில காடையர்கள் எமது பிரசுரங்களை எரித்த சம்பவமும், எமது வேட்பாளர்கள் வீட்டிýற்கு மலர்வளையங்கள் வைத்து மிரட்டிýச் சென்ற சம்பவங்களும் நடந்தேறின. பிரசார வாகனங்கள் மறித்து தாக்கப்பட்டதும் உண்டு. கூýட்டமைப்பின் பெண் வேட்பாளரின் பிரசார அணியினரால் எமது வேட்பாளர் தாக்கப்பட்டதும் அதற்கான பொலிஸ் முறைப்பாடுகளும் யாழ்ப்பாணத்தில் உண்டு. பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? என்பது இதைத்தானா?
கள்ள வாக்குப் போடுவது எப்போதும் நடப்பது தானே என்று நியாயம் கற்பிக்கிறீர்கள். பெண் ஆணாகவும், ஆண் பெண்ணாகவும், இறந்தவர்கள் எழுந்து வந்ததும், வெளிநாட்டிýல் அகதியாய் இருப்பவர் திடPரென வாக்களிக்க வந்ததும், மனைவியும் மூýன்று பிள்ளைகளுமான குடும்பத் தலைவனாக பதினேழு வயதுச் சிறுவன் வந்ததும் இத்தேர்தலில் தான் என்றால் அதனையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். மிரட்டல்கள், மோசடிýகள், ஆட்கடத்தல்கள் போன்றவை இடம்பெற்றதை நீங்கள் பத்திரிகைகளில் படிýத்து அறிந்திருக்க முடிýயாது. வாக்கு அட்டைகளை வீடுகளுக்குச் சென்று வாங்கிச் சென்றதும், சிலரை வாக்களிக்கக் கூýடாது என எச்சரித்ததும் நிறையவே நடந்தன. உண்மைகளை நாம் ஒவ்வொருவரும் உணர மறுக்கும் போது நியாயம் மிகத் தொலைவில் தான் நிற்கும்.
உங்கள் பத்திரிகை கடிýதத்தில் இன்று அவர்களை <b>'ஏகபிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டு தேர்தலில் வென்றிருப்பவர்களில் சகலருமே உத்தம புத்திரர்களில்லை"</b> என நீங்கள் எழுதிய வரிகள் மூýலம் உண்மைகள் எங்கிருந்தாலும் அவை வந்து சேரும் என்ற நம்பிக்கை ஒளி விடுவது எனக்கு கண்டிýப்பாக உற்சாகம் தருகிறது.
மேலும், என்னை வெளியே சென்று கூýட்டம் வைக்க தடங்கல் பண்ணி நீங்களே ஒப்புக்கொண்ட 'உத்தமமற்ற" தமிழ் கூýட்டமைப்பு வேட்பாளர்களின் விர்மத்தனமான பொய்ப் பிரசாரத்திற்கு அனுமதித்தது நியாயமா சத்யன்? ஒருவரைக் கட்டிýவைத்துவிட்டு, ஏனையவர்களை ஓடச்செய்து வெற்றிபெற வைப்பது நியாயமான பந்தயம்தானா? சொல்லுங்கள். தம்பி பிரபாகரன் 80 களில் கூýறிய ஒரு பதிலில் 'தடிý எடுத்தவன் எல்லாம் சண்டிýயன் இல்லை" என்று தெரிவித்ததைத்தான் நான் இங்கும் ஞாபகப்படுத்த முடிýயும். ஏனென்றால் நியாயமற்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களெல்லாம் சேவை மனப்பான்மை கொண்டவர்களோ, அன்றி இலட்சியவான்களோ அல்லர்.
சுரேர்; பிரேமச்சந்திரன் சில வருடங்களுக்கு முன்னர் நடந்து கொண்டது போல் அல்லது விடுதலைப்புலிகளை பாஸிசப் புலிகள் என விமர்சித்ததும், அவர்களைத் தேடிýத் தேடிý அழித்த அளவிற்கு நான் எமது மக்களின் நலனிற்கோ, அன்றி, விடுதலைப்புலிகளுக்கு எதிராகவோ செயற்பட்டதில்லை. சுரேர்; பிரேமச்சந்திரன் மீன்பிடிý அமைச்சில் தனக்கு வேலை ஒன்றை கேட்டுப் பெற்றுக் கொண்டதைப் போல் வரலாறு எனக்கில்லை., சேனாதிராஜாவைப் போல் தேசியப்பட்டிýயலுக்கு எனது பெயரைப் போட போராட்டம் நடத்தியதுமில்லை. எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தியே பழக்கப்பட்டவர் அவர். சத்தியமாகச் சொல்லுங்கள் சத்யன், அமரர் அமிர்தலிங்கத்தை மறந்த சேனாதிராஜாவிற்கு, விடுதலைப்புலிகளை மறக்க நீண்ட காலமா எடுக்கும்?.
எனவே யாழ். மாவட்டத்தில் எனக்கும், ஜனநாயகத்திற்கும் நடந்ததை ஹெல உறுமய உணர்ந்து எனக்கு தேசியப் பட்டிýயலில் இடம் தரினும் அதை ஏற்கக்கூýடிýய கொள்கையில்லா அரசியல் எனக்கு வேண்டாத ஒன்று. கொள்கையில் எனக்கும் ஹெல உறுமயவிற்கும் மிக நீண்ட தூரம். எதிர் எதிர் திசைகள். எனது முன்னாள் சகாக்கள் போல் பாராளுமன்ற பதவிக்கும், வசதிக்கும் அரசியல் நடத்துபவன் அல்ல நான். இதுவே உண்மையாக இருக்கும் போது ஹெல உறுமயவிடம் நான் ஏதோ பதவி கேட்டுச் செல்வது போலவும், என்னை ஒரு பௌத்த பிக்குவாகவும், அட்சய பாத்திரத்துடன் அவர்கள் பின்னே செல்வதாகவும் ஒரு கேலிச் சித்திரம் வரைந்து சித்திரித்ததையும் மறப்பதற்கில்லை. விடுதலைப்புலிகள் ஒவ்வொரு வேட்பாளரையும் தனித்தனியே விமர்சனம் செய்யும்படிý, கோரட்டும். நடிýத்தவர்கள் யார்? நடிýப்பவர்கள் யார்? என்பதை அவர்களே உணருவர். அக்காலம் மிகத் தொலைவில் இல்லை என்பதே என் கணிப்பு. சில உண்மைகளை நேரடிýயாகவே சொல்லி விடுகின்றேன் என்ற உண்மையைத் தவிர, விடுதலைப்புலிகளிடம் மூýடிý மறைக்க எதுவும் என்னிடத்தில் இல்லை. மேலும், ஏகபிரதிநிதிகள் என்ற சொல்லின் அர்த்தத்தில்தான் எனது வேறுபாடேயன்றி மிகுதி யாவும் மிகைப்படுத்தலே. விடுதலைப்புலிகள் தான் அரசுடன் பேச வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து என்றும் இருந்ததில்லை. பலரும் பிரதிநிதித்துவப்படுத்தும் போது ஏகபிரதிநிதியென்பது பொருத்தமற்ற சொற்பிரயோகம் என்பதே எனது விவாதமாக இருந்தது.
பதவிக்காக எதையும் சொல்வார் சுரேர்; பிரேமச்சந்திரன் போன்றோர். இந்திய அமைதிப்படைக் காலத்தில் ஒரு கதை. அம்மையாரிடம் மீன்பிடிý அமைச்சில் வேலை பெறுவதற்கு ஒரு விளக்கம். இன்று பதவிக்காக ஒரு புது விளக்கம். இவர்கள் போன்றோர் பதவிக்காக யாரையும் போற்றக் கூýடும். நாளை அவர்களையே தூற்றவும் செய்வர். <b>விடுதலைப் புலிகளையே தூற்றித் திரிந்து, துரத்திப் பிடிýத்து வேட்டையாடிýயவர்கள் இன்று போற்றிப் பேசுவதால் அவர்கள் தியாகிகளாகி விட்டனரா? இவர்களுக்கு உடனேயே தமிழ் தேசியப் பற்றும் வந்துவிட்டதா?</b> தேர்தல் வெற்றியொன்றையே நோக்கமாகக் கொண்டு செயற்பட்ட இவர்களில் சிலர் தங்களின் தலைவர்களையே துரோகிகளாக காட்டிý அவர்களின் பெயரைக் கூýட உச்சரிக்க கூýச்சப்படுபவர்களாகவே இருக்கின்றனர். தலைவர்களை அடிýயோடு மறந்தவர்களும் உண்டு. விடுதலைப்புலிகளுக்கு நல்ல பிள்ளைகளாக நடிýப்பவர்களும் உண்டு.
மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல தலைவர்களான ஜீ.ஜீ. பொன்னம்பலம், அமிர்தலிங்கம் போன்றவர்கள் கூýறியதாக கூýறப்படும் கடும் சொற்களை நான் ஒரு போதும் ஆதரிக்கவில்லை. ஏனெனில், ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். அவர்களின் தீர்ப்பிற்கு நாம் கட்டுப்பட்டவர்கள். இந்த முறை தேர்தலும் நேர்மையாக நடந்திருந்தால் மக்களின் தீர்ப்பினை ஏற்றிருப்பேன். எனவே, இத்தனை தடைகளையும் தாண்டிý வந்து வாக்களித்த 5 170 பேரின் துணிவிற்கும், உள்ளத் தூய்மைக்கும், ஆதரவிற்கும் எனது நன்றிகள் என்றும் இருக்கும்.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

