05-04-2004, 08:07 AM
தமிழீழப் பாதுகாப்பிற்கான தமிழர்களின் விழிப்புணர்ச்சி
"புத்திஜீவிகள் தொடக்கம் சாதாரண பாமரமக்கள் வரை அனைவரும் தமிழரின் புலாய்வுப்போரியல் பங்கெடுக்க வேண்டும்."
சிங்களப் பேரினவாதம் தொடர்ந்து இழைந்துவந்த தமிழின விரோத நடவடிக்கைகளால் தமிழர்கள் அடிமை நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்தான காலகட்டத்தில் வாழ்ந்தார்கள். இவ்வரலாற்று நெருக்கடியான காலப்பகுதிகளில் தமிழர்கள், தமது தலைவிதியை நொந்து சும்மா இருந்து விடவில்லை.
மாறாகப் பெருமைப்படும் விதத்தில் சவால்களை எதிர்கொண்டு தேசியத் தலைவரின்கீழ் விடுதலைப் போருக்கு உரமேற்றிப் பங்கெடுத்தார்கள். ஏறத்தாழ இருபத்தைந்தாண்டுகள் விடுதலைக்கு இரத்தத்தால் உரமூட்டிய மாவீரர்கள், மக்களின் வீரம், விளைநிலமாக தமிழர் தாயகம் பலம் பெற்றது.
இப்பலம் பொருத்திய தாயகத்தை சின்னாபின்னப்படுத்திச் சிதைப்பதற்கும், தமிழர்கள் வாழ்வதற்கு கஷ்டமான ஒரு பூமியாகத் தாயகத்தை மாற்றுவதற்கும், பல்வேறு சூழ்ச்சிகரமான தந்திரோபாயங்களை சிங்களம் கையாண்டு வருகின்றது.
இத் தந்திரோபாயங்களை, அரசியல், போரியல், உளவியல், ஒற்றாடல் (புலனாய்வு) போன்ற அனைத்திலும் புகுத்தியே வந்துள்ளது. வருகின்றது. இது ஒட்டுமொத்தமாக தமிழ்ச்சமுதாய அமைப்பின் அடித்தளத்தைத் தகர்த்துவிடும் நோக்கத்தினைக் கொண்டதாகும்.
இதில் எதிரியால் முன்னெடுக்கும் புலனாய்வுப்போர் பற்றியும், அப்போரை எதிர்கொள்ள தமிழர்கள் புலனாய்வு விழிப்புணர்வுச் சமூகமாக மாறவேண்டிய அவசியம் பற்றியும் இங்கு நோக்குவோம்.
'ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் கொற்றம் கொளக்கிடந்தது இல்"
இக்குறள் தரும் விளக்கம் ஒற்றர்கள் இல்லையென்றால் உள் நாட்டிலும், அயல்நாட்டிலும், தகவல்கள் எதனையும் அரசன் அறிந்து கொள்ளமுடியாது. தெரிந்து கொள்ளவில்லையென்றால் பாதுகாப்பாக எதுவும் செய்து கொள்ளமுடியாது. அதனால் அரசு அழியும் ஆபத்து ஏற்படும். இது ஒன்றை எமக்கு உணர்த்துகிறது அதாவது தமிழீழம் முழுவதும் சாமர்த்தியமாக பின்னப்படவேண்டிய உளவு வலைப்பின்னலின் முக்கியத்துவம் பற்றியதாகும்.
தமிழீழ விடுதலை வீரர்கள் போர்க்களத்தில் உயிர்த்தியாகம் செய்து வருகையில், தாய் மண்ணில் சிங்களதேசத்திற்கு சார்பாக தமிழ் ஒற்றர்கள் திறைமறைவில் இயங்கிக் கொண்டிருப்பார்கள்.
இம்மறைமுக சூழ்க்கிகரமான புலனாய்வுப் பரிமாணங்களைப் பின்வருபவைகள் உள்ள.
01. தமிழீழப் பிரதேசங்களுக்குள் இயக்க நிர்வாகக் கட்டமைப்புக்குள் ஊடுருவி உளவு பார்த்தல்.
02. தமிழீழ மக்களது உளவரனை பலவீனப்படுத்தும் வகையில் நாசவேலைகள், மறைமுகத் தாக்குதல்களை மேற்கொள்ளுதல்.
03. தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான எதிரணிகளை உருவாக்கிக் கையாளுதல்.
04 தமிழரின் உரிமைப் போராட்டத்தின் மீதான பற்றுறுதியை திசைதிருப்பும் பொய்யான தகவல்களை பரப்புதல்.
05. தமிழர்களின் தேசியப் பலத்தை சிதைப்பதற்கு 'பிரித்தாளும்' சூழ்ச்சியைக் கையாளுதல்.
இவ்வகையான நாசகாரப் புலனாய்வுப் பிரமாணங்களுக்காக சிங்களம் தமிழ் ஒற்றர்களடங்கிய படையையே எப்போதும் அதிகமாக ஈடுபடுத்தி வருகின்றது.
அவையாவன.
01. அகத்து ஒற்றர் (ஊடுரு வலாளர்)
02. இரட்டை வேடம் போடும் ஒற்றர்.
03. மனம் மாற்றப்பட்ட ஒற்றர்.
04. உள்ளுர் ஒற்றர்.
05. காப்பான ஒற்றர்.
இவ்வொற்றர்களது பணி சார்ந்து சிறுவிளக்கத்தைப் பெறுவோம்.
முதலாவது அகத்து ஒற்றர் இயக்க நிர்வாகக் கட்டமைப்புக்களுக்குள் ஆழமாக ஊடுருவி நிலைபெற்று இருப்பார். இவர் விடுதலைப்போரை பலவீனப்படுத்தும் வகையில் விளை பயன்மிக்க தாக்குதலுக்கான தகவல்களை எதிரிக்கு வழங்குவார். அத்துடன் தாக்குதல்களை மேற்கொள்ளுதல் அல்லது அத்தாக்குதலுக்கான பின்புலப் பணிகளை ஒழுங்குபடுத்திக் கொடுப்பார்.
இரண்டாவது இரட்டை வேடும் போடும் ஒற்றர். எதிரிக்கே விசுவாசமாகச் செயல்படும் இவர் விடுதலைப்போராட்டத்திற்கு சார்பானவராகத் தன்னை இனங்காட்டிக் கொள்வார். இந்த இரட்டை வேடத்துடன் நடமாடிய படி தகவல் சேகரிப்புகளில் ஈடுபாடுவார்கள். தேவைப்படும் பட்சத்தல் தாக்குதல் சார்ந்த பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
மூன்றாவது மனம்மாற்றப் பட்ட ஒற்றர். தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்குள் பயன்மிக்கவர்களை எதிரி தமது வலைக்குள் வீழ்த்துவதாகும். இவர்கள் காசுக்காக எதையும் செய்யும் துரோகிகளாக மாறி விடுவார்கள். இம்மோசமான சுயநலக்காரர்கள் தமிழீழ விடுதலைக்கு மோசமான பாதிப்புக்களை உண்டுபண்ணுவார்கள்.
நான்காவது உள்ளுர் ஒற்றர் தமிழர்தாயகப் பகுதிகளிலே நிரந்தரமாக வாழ்ந்துகொண்டு எதிரிக்குத் தகவல்களை வழங்குபவர். மக்களுக்குள் கசியும் தகவல்களையும் இயக்க நடமாட்டங்கள், செயற்பாடுகள் பற்றிய அவதானிப்பு தகவல்களையும் சேகரிப்பவர்.
ஜந்தாவது காப்பான ஒற்றர் சிறிலங்காப் பகுதிகளில் நிரந்தரமாக வாழும் இவர்கள் பொருத்தமான மறைப்புப் கதைகளுடன் தமிழீழப் பகுதிக்குள் உள்நுழைந்து புலனாய்வு வேலைகளை மேற்கொள்வார்கள். வேவு பார்த்தல், தகவல்களை உறுதி செய்தல், தொடர்புகைப் பேணுதல் என இவர்களது பணிகள் இருக்கும், கிடைக்கும் அனைத்து அறிக்கைகளையும் பாதுகாப்பாக எதிரியிடம் சேர்ப்பிப்பார்கள்.
இவ்வகையான ஒற்றரடங்கிய படை தமிழீழப் போர்களத்திற்கு அப்பால் இராணுவ சீருடை அணியாத சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகளால்
வழிநடத்தப்படுகின்றது.
தமிழீழ போர்க்களத்தில் காணப்படும் சிங்களப் படையினரின் பலவீனத்தை ஈடுசெய்வதற்காகவும், தமிழரின் படைப்பலத்தைப் பலவீனப்படுத்துவதாகவும், இது சிறிலங்காப் புலனாய்வு அமைப்பினால் பின்னப்பட்டடிருக்கும் உளவு வலைப்பின்னலாகும்.
இத்தகைய எதிரிப் புலனாய்வு அமைப்பிற்கு நவீன நிபுணத்துவ ஆலோசனைகளை இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டிஷ், பாகிஸ்தான் ஆகியநாடுகள் வழங்கி வருகின்றன.
அத்தோடு நவீனத்துவப் புலனாய்வுப் பயிற்சிகள், நவீன தொழில்நுட்ப உதவிகள், நிதி உதவிகள் பயன்மிக்க தகவல் உதவிகள் என அந்நாடுகள் வழங்கி பக்கத் துணையாக இருக்கின்றன.
இவ்வளங்கள் ஒரு புறம் இருக்க தமிழ்த்தேசிய விரோத சக்திகளின் ஆளணி வளமும் எதிரிக்கு பக்கபலமாக இருந்து வருகின்றது.
இவ்வளம்மிக்க, பலமுள்ள சிறிலங்காப் புலனாய்வு அமைப்பானது சிங்கள இனவாத பௌத்தமத அடிப்படைக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.
அவ்வமைப்பிலுள்ள புலனாய்வுகளின் உணர்ச்சி முழுவதும் தமிழரின் தேசிய வாழ்வை சிதைப்பதற்கான எண்ணங்களால் நிரம்பிக்கிடக்கிறது.
இம்மூல எண்ணக்கருவின் இலக்கை எட்டுவதற்காக தமிழரின் மனிதவளத்தையே அதிகம் சிங்களம் பயன்படுத்தி வருவதே சோகமான உண்மையாகும்.
அதாவது தாயப்பகுதியில் உள்ள சந்துபொந்தெல்லாம் சிங்களப் புலனாய்வு அதிகாரிகளுக்குத் தெரியும் என்பார்கள். அது ஓரளவு நிஜம் தான் சந்துபொந்தெல்லாம் மாத்திரமல்ல தாயகப்பகுதிகளில் நடைபெறும் செயல்பாடுகளும் தெரியும்.
காரணம் தமிழ் ஒற்றர்களையே உபபோகிக்கின்றார்கள் என்பதுதான்.
சிங்களப் போர்விமானத்தின் விமானிக்கோ, அதனை வழிநடாத்தும் அதிகாரிக்கோ ஒரு இலக்குக்குரிய தகவலும் தெரியாது. ஆனால் விமானத்தினால் விடுதலைப் போருக்கு, தாயகப் பகுதிக்கு ஏற்படும் பாதிப்பு ஆழமானது. அவ் இலக்குகளுக்குரிய தகவல்களை வழங்குபவர்கள் தமிழ் ஒற்றர்களே.
இவ்வொற்றர்களால் வழங்கப்படும் தகவல் வளங்களினை ஆரம்பப்புள்ளியாக வைத்தே ஆளில்லாத உளவு விமானம் (U.A.V) தாயக வான்பரப்பில் உளவு வேலைகளை மேற்கொள்கின்றது. இதனால் தாக்குதலுக்கான இலக்குகளை துல்லியமானகப் படம் எடுக்கிறது.
இத்தகைய தொழில்நுட்பப்புலனாய்வுச் செயற்பாட்டிற்கு உயிர்நாடியாக மனிதவளப்புலனாய்வு உள்ளது. இந்த தவிர்க்கப்படவியலாத யதார்த்தத்தை ஒத்த உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.
பலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தலைவர் யாசீன் கொல்லப்படுவதற்கு முன்பு இன்னொரு ஹாமாஸ் இயக்கத்தலைவர் கொல்லப்பட்டார். இத்தாக்குதலுக்கு நவீன தொழில்நுட்ப உலங்குவானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டது. இதிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இலக்கை அழிப்பதற்கு காரணமாக அமைந்தது.
கண்ணுக்குத் தெரியாத மைகாரின் மேற்பரப்பில் பூசப்பட்டதனாலாகும். அதாவது செய்மதிகளின் உணரிகள் குவியம் கொள்ளக்கூடிய இம் மையை பூசியவர் இஸ்ரேலினால் விலைக்கு வாங்கப்பட்ட ஒற்றராகும்.
இதுபோன்றே மனிதவளப் புலனாய்வு ஆழமாகவும், விசாலமாகவும், உறுதியாகவும் பின்னிப்பிணைந்துள்ளதாக இருக்கும்.
எதிரிப்புலனாய்வாளர்கள் தமது கழுகுப்பார்வையைச் செலுத்தாத எந்த ஒரு துறையும் தாயகப் பகுதிகளில் இல்லை. அதற்கான மூலவளம் தமிழ் ஒற்றர்கள்.
சிறிலங்கா புலனாய்வாளர்கள் மனித மனங்கள் பற்றி நன்கறிந்தவர்கள், அதுவும் தொடர்ச்சியான மன நெருக்கீடுகளுக்குள் உள்ள தமிழர்களுக்கு உளப்பரிகாரம் தேவைப்படும் என்பதனை அறிந்தவர்கள்.
அதாவது எத்தனைய அணுகு மறைகளைக் கையாண்டால் தமிழர்களை உள்வாங்கலாம் என்பதும், எத்தகைய சலுகைகளை வழங்கினால் தமிழர்களது மனங்களை தம்பக்கம் ஈர்த்தெடுக்க முடியுமென்பதில் அனுபவமுள்ளவர்கள்.
இப்படி மனோவியல் ரீதியாக தமிழர்களை சிங்களம் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் தம் புலனாய்வுவேலைகளை முன்னெடுக்கின்றது. இச் சூழ்ச்சிகரமான வேலைகளுக்காக தமிழரின் மன அரங்கை ஒரு களமாக மாற்றி, தமிழரின் இருப்புக்கே ஆணிவேராகக் கருதப்படும் பாதுபாப்புபலத்தை சிதைக்கும் இலக்கைக் கொண்டதாகும்.
இவ்விலக்கை எதிரி எட்ட முடியாதவாறு பார்த்துக்கொள்ளக் கூடிய மனப்பலம் ஒவ்வொரு தமிழரிடமும் உண்டு. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தாயகத்தைப் பாதுகாக்கும் எண்ணம் மேலோங்க வேண்டும். இவ்விழிப்புணர்ச்சி தமிழர்களிடம் இருக்கும்வரை சிங்களத்தால் எதனையும் சாதிக்கவே முடியாது போகும்.
இங்கு அபிசீனியா (தென்னாபிரிக்கா) நாட்டு மக்களது விழிப்புணர்ச்சியை வெளிப்படுத்திய உண்மைக்கதையொன்றை அறிவோம்.
இரு வெளிநாட்டு ஒற்றர்கள் அபிசீனியாவில் உள்ள பொருளாதார வளங்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக அந்நாட்டினுள் நுழைந்தார்கள்.
அங்குள்ள மக்களைச் சந்தித்து தகவல்களைப் பெற முயற்சி செய்த போதும் எந்தவொரு தகவல்களையும் பெறமுடியவில்லை. மாறாக மக்கள் தம் வாயைக் கையால் பொத்திக் கொண்டார்கள். அத்தோடுநின்று விடாது அவ்வொன்றர்கள் தொடர்பான தகவலை தமது மன்னருக்குக் கிடைக்கச் செய்தார்கள். பின்னர் ஒற்றர்கள் இருவரும் மன்னரால் நாடுகடத்தப்பட்டார்கள்.
இத்தகைய உணர்வுமிக்க நிகழ்வுகளும் தமிழர் தாயகத்திலும் வரலாற்றுப் பகுதிகளாக இருக்கின்றன.
எந்தவொரு சலுகைகளுக்கும் மயங்கிவிடாது தம் அடிப்படை வாழ்வை இழந்த தன்மானமுள்ளவர்கள் இவர்கள். எதிரியின் சூழ்ச்சிகரமாக வலைக்குள் வீழ்ந்துவிடாது கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளாகிய மனப்பலமுள்ளவர்கள் எனத் தமிழர்களின் வரலாறு நீண்டது.
இத்தகைய தனித்துவமான தமிழர்களிடத்திலும் எட்டப்பர்களின் ஆளுமை இருப்பதே சாபக்கேடாகும்.
அதுவும் எதிரி தமிழரின் மனித வளத்தையே பயன்படுத்தி தமிழரின் தேசியப் பலத்தைப் பலவீனப்படுத்த முயல்வதே இன்னும்சோகமானது.
இதுவரை காலமும் சிங்கள இனவாதம் பலியெடுத்த தமிழர்களது, மனித இழப்பு, விடுதலைப் போரில் களமாடிய இளம் வீரர்களது மனிதவள இழப்பு என தமிழ் இனத்தின் இழப்பு ஓர் இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
இப்பெருந்தொகையான மனிதவள இழப்பீட்டை நிவர்த்தி செய்வதாயின் இன்னும் 25 ஆண்டுகள் தேவைப்படும் என்பது மனிதவள ஆய்வாளர்களது கணிப்பீடு.
இச்சோகமான நிலையில் இனிமேலும் எதிரியின் சூழ்ச்சி வலைக்குள் வீழ்ந்து உரிமைப்போரை காட்டிக் கொடுக்க முனையும்போது தாமதங்கள் ஏற்படவே செய்யும். அது நெருக்கடிக்குள்ளாகவும் நேரிடும். அதனால் தமிழர்களின் மனிதவளம் இன்னும் பாதிப்பிற்குள்ளாகவே செய்யும்.
தேசத்துரோகம் இழைத்த தமிழ் ஒற்றர்களைத் தமிழீழதேசம் ஒரு போதும் மன்னித்ததும் இல்லை. அத்துரோகிகளும் தம்முயிரை இழக்கவே நேரிடுகிறது. ஒட்டுமொத்தமாக தமிழரின் மனவளம் அழிவின் விளிம்பிற்கு இட்டுச் செல்வதே சிங்களப்புலனாய்வாளர்களின் நோக்கம்.
இத்தளத்தில் நின்று கொண்டே சிறிலங்காப் புலனாய்வு, பிராந்தியப் புலனாய்வு, சர்வதேசப் புலனாய்வு நிறுவனங்கள் செயலாற்றி வருகின்றன. இவைகள் தமிழ்ச் சமுதாயத்தின் சகலதுறைகளிற்குள்ளும் தகவல் வழங்குணர்களின் வலையமைப்புப் பணிகளை விரிவாக்கஞ் செய்து கொள்கின்றன.
இவ்வலையமைப்பில் தமிழரின் அறிவுப்பலமுள்ள தகவல் வழங்குனர்களை இணைத்துக் கொள்கின்றனர்.
தமிழரின் அறிவுப்பலம் மிகவும் சக்தி வாய்ந்தது. அச்சக்தியை, அப்பலத்தை தமிழ் அன்னையை கேவலப்படுத்தவும், அடிமையாக்கவும் கொன்றொழிக்கவும் முனையும் எதிரிப் புலனாய்வு சக்திகளுக்கு விலை போக இடங்கொடுக்கலாகாது.
தமிழரின் மனிதவளத்தையும் புலமைத் தளத்தையும் தமிழரின் அழிவுக்குப் பயன்படுத்தும் சோகமான வரலாற்றை மாற்றியமைக்க வேண்டும்.
எத்தகையவளம், பலமிக்க புலனாய்வு நிறுவனங்களது சவால்களை எதிர்கொள்ளத்தக்க பேரெழுச்சிமிக்க தமிழ்தேசியப்பலம் தாயகத்திடம் உள்ளது.
புத்திஜீவிகள் தொடக்கம் சாதாரண பாமரமக்கள் வரை அனைவரும் தமிழரின் புலாய்வுப்போரியல் பங்கெடுக்க வேண்டும்.
எதிரியின் வஞ்சகக் குரல்களுக்கு வசப்பட்டுப்போகாமலும் எதிரியின் நயவஞ்சக விஷம் பொருந்திய கரங்கள் தாயகத்தின் மீது படாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். தமிழீழ பாதுகாப்பிற்கு நாம் என்ன மாதிரி தொண்டாற்றலாம் என்பதை தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் மனத்திலே எண்ணுதல் வேண்டும். சுயநலத்தை முதன்மையாக்கி வாழும் சிந்தனைத் தளத்திலிருந்து சற்று விலகி நின்று தமிழர்களின் விடுதலைப்போருக்கு வலுச்சேர்க்கத்தக்க வகையில் பாடுபட வேண்டும். அத்துடன் நாம் புலனாய்வு விழிப்புணர்வு பெற்ற சமூகமாகமாறி தாயகத்தின் பாதுகாப்பிற்கான சக்தியாக இயங்குதல் வேண்டும்.
நீலன் ஈழநாதம்.
"புத்திஜீவிகள் தொடக்கம் சாதாரண பாமரமக்கள் வரை அனைவரும் தமிழரின் புலாய்வுப்போரியல் பங்கெடுக்க வேண்டும்."
சிங்களப் பேரினவாதம் தொடர்ந்து இழைந்துவந்த தமிழின விரோத நடவடிக்கைகளால் தமிழர்கள் அடிமை நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்தான காலகட்டத்தில் வாழ்ந்தார்கள். இவ்வரலாற்று நெருக்கடியான காலப்பகுதிகளில் தமிழர்கள், தமது தலைவிதியை நொந்து சும்மா இருந்து விடவில்லை.
மாறாகப் பெருமைப்படும் விதத்தில் சவால்களை எதிர்கொண்டு தேசியத் தலைவரின்கீழ் விடுதலைப் போருக்கு உரமேற்றிப் பங்கெடுத்தார்கள். ஏறத்தாழ இருபத்தைந்தாண்டுகள் விடுதலைக்கு இரத்தத்தால் உரமூட்டிய மாவீரர்கள், மக்களின் வீரம், விளைநிலமாக தமிழர் தாயகம் பலம் பெற்றது.
இப்பலம் பொருத்திய தாயகத்தை சின்னாபின்னப்படுத்திச் சிதைப்பதற்கும், தமிழர்கள் வாழ்வதற்கு கஷ்டமான ஒரு பூமியாகத் தாயகத்தை மாற்றுவதற்கும், பல்வேறு சூழ்ச்சிகரமான தந்திரோபாயங்களை சிங்களம் கையாண்டு வருகின்றது.
இத் தந்திரோபாயங்களை, அரசியல், போரியல், உளவியல், ஒற்றாடல் (புலனாய்வு) போன்ற அனைத்திலும் புகுத்தியே வந்துள்ளது. வருகின்றது. இது ஒட்டுமொத்தமாக தமிழ்ச்சமுதாய அமைப்பின் அடித்தளத்தைத் தகர்த்துவிடும் நோக்கத்தினைக் கொண்டதாகும்.
இதில் எதிரியால் முன்னெடுக்கும் புலனாய்வுப்போர் பற்றியும், அப்போரை எதிர்கொள்ள தமிழர்கள் புலனாய்வு விழிப்புணர்வுச் சமூகமாக மாறவேண்டிய அவசியம் பற்றியும் இங்கு நோக்குவோம்.
'ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் கொற்றம் கொளக்கிடந்தது இல்"
இக்குறள் தரும் விளக்கம் ஒற்றர்கள் இல்லையென்றால் உள் நாட்டிலும், அயல்நாட்டிலும், தகவல்கள் எதனையும் அரசன் அறிந்து கொள்ளமுடியாது. தெரிந்து கொள்ளவில்லையென்றால் பாதுகாப்பாக எதுவும் செய்து கொள்ளமுடியாது. அதனால் அரசு அழியும் ஆபத்து ஏற்படும். இது ஒன்றை எமக்கு உணர்த்துகிறது அதாவது தமிழீழம் முழுவதும் சாமர்த்தியமாக பின்னப்படவேண்டிய உளவு வலைப்பின்னலின் முக்கியத்துவம் பற்றியதாகும்.
தமிழீழ விடுதலை வீரர்கள் போர்க்களத்தில் உயிர்த்தியாகம் செய்து வருகையில், தாய் மண்ணில் சிங்களதேசத்திற்கு சார்பாக தமிழ் ஒற்றர்கள் திறைமறைவில் இயங்கிக் கொண்டிருப்பார்கள்.
இம்மறைமுக சூழ்க்கிகரமான புலனாய்வுப் பரிமாணங்களைப் பின்வருபவைகள் உள்ள.
01. தமிழீழப் பிரதேசங்களுக்குள் இயக்க நிர்வாகக் கட்டமைப்புக்குள் ஊடுருவி உளவு பார்த்தல்.
02. தமிழீழ மக்களது உளவரனை பலவீனப்படுத்தும் வகையில் நாசவேலைகள், மறைமுகத் தாக்குதல்களை மேற்கொள்ளுதல்.
03. தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான எதிரணிகளை உருவாக்கிக் கையாளுதல்.
04 தமிழரின் உரிமைப் போராட்டத்தின் மீதான பற்றுறுதியை திசைதிருப்பும் பொய்யான தகவல்களை பரப்புதல்.
05. தமிழர்களின் தேசியப் பலத்தை சிதைப்பதற்கு 'பிரித்தாளும்' சூழ்ச்சியைக் கையாளுதல்.
இவ்வகையான நாசகாரப் புலனாய்வுப் பிரமாணங்களுக்காக சிங்களம் தமிழ் ஒற்றர்களடங்கிய படையையே எப்போதும் அதிகமாக ஈடுபடுத்தி வருகின்றது.
அவையாவன.
01. அகத்து ஒற்றர் (ஊடுரு வலாளர்)
02. இரட்டை வேடம் போடும் ஒற்றர்.
03. மனம் மாற்றப்பட்ட ஒற்றர்.
04. உள்ளுர் ஒற்றர்.
05. காப்பான ஒற்றர்.
இவ்வொற்றர்களது பணி சார்ந்து சிறுவிளக்கத்தைப் பெறுவோம்.
முதலாவது அகத்து ஒற்றர் இயக்க நிர்வாகக் கட்டமைப்புக்களுக்குள் ஆழமாக ஊடுருவி நிலைபெற்று இருப்பார். இவர் விடுதலைப்போரை பலவீனப்படுத்தும் வகையில் விளை பயன்மிக்க தாக்குதலுக்கான தகவல்களை எதிரிக்கு வழங்குவார். அத்துடன் தாக்குதல்களை மேற்கொள்ளுதல் அல்லது அத்தாக்குதலுக்கான பின்புலப் பணிகளை ஒழுங்குபடுத்திக் கொடுப்பார்.
இரண்டாவது இரட்டை வேடும் போடும் ஒற்றர். எதிரிக்கே விசுவாசமாகச் செயல்படும் இவர் விடுதலைப்போராட்டத்திற்கு சார்பானவராகத் தன்னை இனங்காட்டிக் கொள்வார். இந்த இரட்டை வேடத்துடன் நடமாடிய படி தகவல் சேகரிப்புகளில் ஈடுபாடுவார்கள். தேவைப்படும் பட்சத்தல் தாக்குதல் சார்ந்த பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
மூன்றாவது மனம்மாற்றப் பட்ட ஒற்றர். தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்குள் பயன்மிக்கவர்களை எதிரி தமது வலைக்குள் வீழ்த்துவதாகும். இவர்கள் காசுக்காக எதையும் செய்யும் துரோகிகளாக மாறி விடுவார்கள். இம்மோசமான சுயநலக்காரர்கள் தமிழீழ விடுதலைக்கு மோசமான பாதிப்புக்களை உண்டுபண்ணுவார்கள்.
நான்காவது உள்ளுர் ஒற்றர் தமிழர்தாயகப் பகுதிகளிலே நிரந்தரமாக வாழ்ந்துகொண்டு எதிரிக்குத் தகவல்களை வழங்குபவர். மக்களுக்குள் கசியும் தகவல்களையும் இயக்க நடமாட்டங்கள், செயற்பாடுகள் பற்றிய அவதானிப்பு தகவல்களையும் சேகரிப்பவர்.
ஜந்தாவது காப்பான ஒற்றர் சிறிலங்காப் பகுதிகளில் நிரந்தரமாக வாழும் இவர்கள் பொருத்தமான மறைப்புப் கதைகளுடன் தமிழீழப் பகுதிக்குள் உள்நுழைந்து புலனாய்வு வேலைகளை மேற்கொள்வார்கள். வேவு பார்த்தல், தகவல்களை உறுதி செய்தல், தொடர்புகைப் பேணுதல் என இவர்களது பணிகள் இருக்கும், கிடைக்கும் அனைத்து அறிக்கைகளையும் பாதுகாப்பாக எதிரியிடம் சேர்ப்பிப்பார்கள்.
இவ்வகையான ஒற்றரடங்கிய படை தமிழீழப் போர்களத்திற்கு அப்பால் இராணுவ சீருடை அணியாத சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகளால்
வழிநடத்தப்படுகின்றது.
தமிழீழ போர்க்களத்தில் காணப்படும் சிங்களப் படையினரின் பலவீனத்தை ஈடுசெய்வதற்காகவும், தமிழரின் படைப்பலத்தைப் பலவீனப்படுத்துவதாகவும், இது சிறிலங்காப் புலனாய்வு அமைப்பினால் பின்னப்பட்டடிருக்கும் உளவு வலைப்பின்னலாகும்.
இத்தகைய எதிரிப் புலனாய்வு அமைப்பிற்கு நவீன நிபுணத்துவ ஆலோசனைகளை இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டிஷ், பாகிஸ்தான் ஆகியநாடுகள் வழங்கி வருகின்றன.
அத்தோடு நவீனத்துவப் புலனாய்வுப் பயிற்சிகள், நவீன தொழில்நுட்ப உதவிகள், நிதி உதவிகள் பயன்மிக்க தகவல் உதவிகள் என அந்நாடுகள் வழங்கி பக்கத் துணையாக இருக்கின்றன.
இவ்வளங்கள் ஒரு புறம் இருக்க தமிழ்த்தேசிய விரோத சக்திகளின் ஆளணி வளமும் எதிரிக்கு பக்கபலமாக இருந்து வருகின்றது.
இவ்வளம்மிக்க, பலமுள்ள சிறிலங்காப் புலனாய்வு அமைப்பானது சிங்கள இனவாத பௌத்தமத அடிப்படைக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.
அவ்வமைப்பிலுள்ள புலனாய்வுகளின் உணர்ச்சி முழுவதும் தமிழரின் தேசிய வாழ்வை சிதைப்பதற்கான எண்ணங்களால் நிரம்பிக்கிடக்கிறது.
இம்மூல எண்ணக்கருவின் இலக்கை எட்டுவதற்காக தமிழரின் மனிதவளத்தையே அதிகம் சிங்களம் பயன்படுத்தி வருவதே சோகமான உண்மையாகும்.
அதாவது தாயப்பகுதியில் உள்ள சந்துபொந்தெல்லாம் சிங்களப் புலனாய்வு அதிகாரிகளுக்குத் தெரியும் என்பார்கள். அது ஓரளவு நிஜம் தான் சந்துபொந்தெல்லாம் மாத்திரமல்ல தாயகப்பகுதிகளில் நடைபெறும் செயல்பாடுகளும் தெரியும்.
காரணம் தமிழ் ஒற்றர்களையே உபபோகிக்கின்றார்கள் என்பதுதான்.
சிங்களப் போர்விமானத்தின் விமானிக்கோ, அதனை வழிநடாத்தும் அதிகாரிக்கோ ஒரு இலக்குக்குரிய தகவலும் தெரியாது. ஆனால் விமானத்தினால் விடுதலைப் போருக்கு, தாயகப் பகுதிக்கு ஏற்படும் பாதிப்பு ஆழமானது. அவ் இலக்குகளுக்குரிய தகவல்களை வழங்குபவர்கள் தமிழ் ஒற்றர்களே.
இவ்வொற்றர்களால் வழங்கப்படும் தகவல் வளங்களினை ஆரம்பப்புள்ளியாக வைத்தே ஆளில்லாத உளவு விமானம் (U.A.V) தாயக வான்பரப்பில் உளவு வேலைகளை மேற்கொள்கின்றது. இதனால் தாக்குதலுக்கான இலக்குகளை துல்லியமானகப் படம் எடுக்கிறது.
இத்தகைய தொழில்நுட்பப்புலனாய்வுச் செயற்பாட்டிற்கு உயிர்நாடியாக மனிதவளப்புலனாய்வு உள்ளது. இந்த தவிர்க்கப்படவியலாத யதார்த்தத்தை ஒத்த உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.
பலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தலைவர் யாசீன் கொல்லப்படுவதற்கு முன்பு இன்னொரு ஹாமாஸ் இயக்கத்தலைவர் கொல்லப்பட்டார். இத்தாக்குதலுக்கு நவீன தொழில்நுட்ப உலங்குவானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டது. இதிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இலக்கை அழிப்பதற்கு காரணமாக அமைந்தது.
கண்ணுக்குத் தெரியாத மைகாரின் மேற்பரப்பில் பூசப்பட்டதனாலாகும். அதாவது செய்மதிகளின் உணரிகள் குவியம் கொள்ளக்கூடிய இம் மையை பூசியவர் இஸ்ரேலினால் விலைக்கு வாங்கப்பட்ட ஒற்றராகும்.
இதுபோன்றே மனிதவளப் புலனாய்வு ஆழமாகவும், விசாலமாகவும், உறுதியாகவும் பின்னிப்பிணைந்துள்ளதாக இருக்கும்.
எதிரிப்புலனாய்வாளர்கள் தமது கழுகுப்பார்வையைச் செலுத்தாத எந்த ஒரு துறையும் தாயகப் பகுதிகளில் இல்லை. அதற்கான மூலவளம் தமிழ் ஒற்றர்கள்.
சிறிலங்கா புலனாய்வாளர்கள் மனித மனங்கள் பற்றி நன்கறிந்தவர்கள், அதுவும் தொடர்ச்சியான மன நெருக்கீடுகளுக்குள் உள்ள தமிழர்களுக்கு உளப்பரிகாரம் தேவைப்படும் என்பதனை அறிந்தவர்கள்.
அதாவது எத்தனைய அணுகு மறைகளைக் கையாண்டால் தமிழர்களை உள்வாங்கலாம் என்பதும், எத்தகைய சலுகைகளை வழங்கினால் தமிழர்களது மனங்களை தம்பக்கம் ஈர்த்தெடுக்க முடியுமென்பதில் அனுபவமுள்ளவர்கள்.
இப்படி மனோவியல் ரீதியாக தமிழர்களை சிங்களம் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் தம் புலனாய்வுவேலைகளை முன்னெடுக்கின்றது. இச் சூழ்ச்சிகரமான வேலைகளுக்காக தமிழரின் மன அரங்கை ஒரு களமாக மாற்றி, தமிழரின் இருப்புக்கே ஆணிவேராகக் கருதப்படும் பாதுபாப்புபலத்தை சிதைக்கும் இலக்கைக் கொண்டதாகும்.
இவ்விலக்கை எதிரி எட்ட முடியாதவாறு பார்த்துக்கொள்ளக் கூடிய மனப்பலம் ஒவ்வொரு தமிழரிடமும் உண்டு. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தாயகத்தைப் பாதுகாக்கும் எண்ணம் மேலோங்க வேண்டும். இவ்விழிப்புணர்ச்சி தமிழர்களிடம் இருக்கும்வரை சிங்களத்தால் எதனையும் சாதிக்கவே முடியாது போகும்.
இங்கு அபிசீனியா (தென்னாபிரிக்கா) நாட்டு மக்களது விழிப்புணர்ச்சியை வெளிப்படுத்திய உண்மைக்கதையொன்றை அறிவோம்.
இரு வெளிநாட்டு ஒற்றர்கள் அபிசீனியாவில் உள்ள பொருளாதார வளங்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக அந்நாட்டினுள் நுழைந்தார்கள்.
அங்குள்ள மக்களைச் சந்தித்து தகவல்களைப் பெற முயற்சி செய்த போதும் எந்தவொரு தகவல்களையும் பெறமுடியவில்லை. மாறாக மக்கள் தம் வாயைக் கையால் பொத்திக் கொண்டார்கள். அத்தோடுநின்று விடாது அவ்வொன்றர்கள் தொடர்பான தகவலை தமது மன்னருக்குக் கிடைக்கச் செய்தார்கள். பின்னர் ஒற்றர்கள் இருவரும் மன்னரால் நாடுகடத்தப்பட்டார்கள்.
இத்தகைய உணர்வுமிக்க நிகழ்வுகளும் தமிழர் தாயகத்திலும் வரலாற்றுப் பகுதிகளாக இருக்கின்றன.
எந்தவொரு சலுகைகளுக்கும் மயங்கிவிடாது தம் அடிப்படை வாழ்வை இழந்த தன்மானமுள்ளவர்கள் இவர்கள். எதிரியின் சூழ்ச்சிகரமாக வலைக்குள் வீழ்ந்துவிடாது கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளாகிய மனப்பலமுள்ளவர்கள் எனத் தமிழர்களின் வரலாறு நீண்டது.
இத்தகைய தனித்துவமான தமிழர்களிடத்திலும் எட்டப்பர்களின் ஆளுமை இருப்பதே சாபக்கேடாகும்.
அதுவும் எதிரி தமிழரின் மனித வளத்தையே பயன்படுத்தி தமிழரின் தேசியப் பலத்தைப் பலவீனப்படுத்த முயல்வதே இன்னும்சோகமானது.
இதுவரை காலமும் சிங்கள இனவாதம் பலியெடுத்த தமிழர்களது, மனித இழப்பு, விடுதலைப் போரில் களமாடிய இளம் வீரர்களது மனிதவள இழப்பு என தமிழ் இனத்தின் இழப்பு ஓர் இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
இப்பெருந்தொகையான மனிதவள இழப்பீட்டை நிவர்த்தி செய்வதாயின் இன்னும் 25 ஆண்டுகள் தேவைப்படும் என்பது மனிதவள ஆய்வாளர்களது கணிப்பீடு.
இச்சோகமான நிலையில் இனிமேலும் எதிரியின் சூழ்ச்சி வலைக்குள் வீழ்ந்து உரிமைப்போரை காட்டிக் கொடுக்க முனையும்போது தாமதங்கள் ஏற்படவே செய்யும். அது நெருக்கடிக்குள்ளாகவும் நேரிடும். அதனால் தமிழர்களின் மனிதவளம் இன்னும் பாதிப்பிற்குள்ளாகவே செய்யும்.
தேசத்துரோகம் இழைத்த தமிழ் ஒற்றர்களைத் தமிழீழதேசம் ஒரு போதும் மன்னித்ததும் இல்லை. அத்துரோகிகளும் தம்முயிரை இழக்கவே நேரிடுகிறது. ஒட்டுமொத்தமாக தமிழரின் மனவளம் அழிவின் விளிம்பிற்கு இட்டுச் செல்வதே சிங்களப்புலனாய்வாளர்களின் நோக்கம்.
இத்தளத்தில் நின்று கொண்டே சிறிலங்காப் புலனாய்வு, பிராந்தியப் புலனாய்வு, சர்வதேசப் புலனாய்வு நிறுவனங்கள் செயலாற்றி வருகின்றன. இவைகள் தமிழ்ச் சமுதாயத்தின் சகலதுறைகளிற்குள்ளும் தகவல் வழங்குணர்களின் வலையமைப்புப் பணிகளை விரிவாக்கஞ் செய்து கொள்கின்றன.
இவ்வலையமைப்பில் தமிழரின் அறிவுப்பலமுள்ள தகவல் வழங்குனர்களை இணைத்துக் கொள்கின்றனர்.
தமிழரின் அறிவுப்பலம் மிகவும் சக்தி வாய்ந்தது. அச்சக்தியை, அப்பலத்தை தமிழ் அன்னையை கேவலப்படுத்தவும், அடிமையாக்கவும் கொன்றொழிக்கவும் முனையும் எதிரிப் புலனாய்வு சக்திகளுக்கு விலை போக இடங்கொடுக்கலாகாது.
தமிழரின் மனிதவளத்தையும் புலமைத் தளத்தையும் தமிழரின் அழிவுக்குப் பயன்படுத்தும் சோகமான வரலாற்றை மாற்றியமைக்க வேண்டும்.
எத்தகையவளம், பலமிக்க புலனாய்வு நிறுவனங்களது சவால்களை எதிர்கொள்ளத்தக்க பேரெழுச்சிமிக்க தமிழ்தேசியப்பலம் தாயகத்திடம் உள்ளது.
புத்திஜீவிகள் தொடக்கம் சாதாரண பாமரமக்கள் வரை அனைவரும் தமிழரின் புலாய்வுப்போரியல் பங்கெடுக்க வேண்டும்.
எதிரியின் வஞ்சகக் குரல்களுக்கு வசப்பட்டுப்போகாமலும் எதிரியின் நயவஞ்சக விஷம் பொருந்திய கரங்கள் தாயகத்தின் மீது படாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். தமிழீழ பாதுகாப்பிற்கு நாம் என்ன மாதிரி தொண்டாற்றலாம் என்பதை தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் மனத்திலே எண்ணுதல் வேண்டும். சுயநலத்தை முதன்மையாக்கி வாழும் சிந்தனைத் தளத்திலிருந்து சற்று விலகி நின்று தமிழர்களின் விடுதலைப்போருக்கு வலுச்சேர்க்கத்தக்க வகையில் பாடுபட வேண்டும். அத்துடன் நாம் புலனாய்வு விழிப்புணர்வு பெற்ற சமூகமாகமாறி தாயகத்தின் பாதுகாப்பிற்கான சக்தியாக இயங்குதல் வேண்டும்.
நீலன் ஈழநாதம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

