05-04-2004, 06:45 AM
பிரபல அரசியல் விமர்சகரின் கொழும்பு இல்லம் பொலிசாரால் சோதனை
இலங்கையின் பிரபல அரசியல் விமர்சகர் தர்மரத்தினம் சிவராம் (தராக்கி) அவர்களின் கொழும்பு இல்லத்துக்குள் நேற்றிரவு கொகுவெள-கல்கிசை பொலிசார் பெருமளவில் திடிரென புகுந்து தீவிர தேடுதலை நடாத்தியுள்ளனர்.
இவரது வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகம் கொண்டே தாம் இந்த தேடுதலை நடாத்தியதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தேடுதல் நடாத்தப்பட்ட சமயம் சிவராம் அவர்கள் மட்டக்களப்பில் சுதந்திர ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு சுதந்திர ஊடகவியலாளர் தினத்தில் இந்த தேடுதல் நடாத்தப்பட்டது ஊடகத்துறையினருக்கு விடுக்கப்பட்ட ஒரு பாரிய அச்சுறுத்தலாகவே கணிக்கப்படுகிறது.
இதற்கு முன்னரும், பல தடவைகள் கொலைப் பயமுறுத்தல்கள் திரு. சிவராம் அவர்களுக்கு விடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பொலிசாரின் இந்த தேடுதல் நடவடிக்கையை இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரைரட்ணம் அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்.
நன்றி : புதினம்
இலங்கையின் பிரபல அரசியல் விமர்சகர் தர்மரத்தினம் சிவராம் (தராக்கி) அவர்களின் கொழும்பு இல்லத்துக்குள் நேற்றிரவு கொகுவெள-கல்கிசை பொலிசார் பெருமளவில் திடிரென புகுந்து தீவிர தேடுதலை நடாத்தியுள்ளனர்.
இவரது வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகம் கொண்டே தாம் இந்த தேடுதலை நடாத்தியதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தேடுதல் நடாத்தப்பட்ட சமயம் சிவராம் அவர்கள் மட்டக்களப்பில் சுதந்திர ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு சுதந்திர ஊடகவியலாளர் தினத்தில் இந்த தேடுதல் நடாத்தப்பட்டது ஊடகத்துறையினருக்கு விடுக்கப்பட்ட ஒரு பாரிய அச்சுறுத்தலாகவே கணிக்கப்படுகிறது.
இதற்கு முன்னரும், பல தடவைகள் கொலைப் பயமுறுத்தல்கள் திரு. சிவராம் அவர்களுக்கு விடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பொலிசாரின் இந்த தேடுதல் நடவடிக்கையை இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரைரட்ணம் அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்.
நன்றி : புதினம்

