05-03-2004, 04:50 PM
இடைக்கால தன்னாட்சி அதிகார சபையின் அடிப்படையிலேயே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்: சு.ப.தமிழ்ச்செல்வன்
[ திருநந்தன், சங்கீத் ] [திங்கட்கிழமை, 03 மே 2004, 19:55 ஈழம் ]
கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் எந்த ஒழுங்குகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதோ அந்த அடிப்படையில்தான் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையின் நிலைப்பாடு என தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று, நோர்வே சிறப்புத் து}துவர் எரிக் சொல்ஹெய்முடனான சந்திப்பின் பின் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு சு.ப.தமிழ்ச்செல்வனை நோர்வே து}துக்குழுவினர் புலிகளின் சமாதான செயலகத்தில் இன்று காலை 10.45 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்த இச்சந்திப்பில் இலங்கைக்கான நோர்வே து}துவர் திரு ஹான்ஸ் பிறஸ்கர், விசேட து}துவர் திரு எரிக் சொல்ஹெய்ம், நோர்வே வெளிவிவகார அமைச்சின் ஆலோசகர் லிசா கோல்டன் ஆகியோர் இடம்பெற்றனர்.
சமாதான நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுப்பது குறித்து, நோர்வே பிரதிநிதிகள், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருடன் இன்று சந்தித்து இரண்டு மணிநேர கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
நேற்று நோர்வே பிரதிநிதிகள் சிறிலங்கா ஐனாதிபதியுடன் கலந்துரையாடி, சமாதானப் பேச்சுகள் தொடர்பான அவர்களுடைய கருத்துக்கள், நிலைப்பாடுகளைப் பெற்றுக்கொண்டு இன்று வன்னிக்கு வந்து விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாடினர்.
![[Image: display.pl?if=20040504MON003.jpg]](http://www.eelampage.com/cgi-bin/news/display.pl?if=20040504MON003.jpg)
இன்றைய சந்திப்பு பற்றி தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் தெரிவித்த கருத்துக்கள் பின் வருமாறு,
- புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக ஆராயப்பட்டது.
- அரசு பேச்சுக்களை மிக விரைவில் மீண்டும் ஆரம்பிப்பது
தொடர்பாக கூடிய கரிசனையைக் காட்டிவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
- எதிர்காலத்தில் பேச்சுக்களை முன்னெடுப்பது தொடர்பாக ஆராயப்பட்டது.
- பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வது தொடர்பாகவும் பேசப்பட்டது.
- இடைக்கால நிர்வாக சபை அலகைக் கையளித்து அது தொடர்பாக பேசுகின்ற பொழுதுதான் அரசாங்கம் கலைக்கப்பட்டு புதிய அரசியல் சூழ்நிலை உருவாகியதால், அடுத்த கட்டப் பேச்சுக்கள் அங்கிருந்தே ஆரம்பிக்கப்படுவதன் அவசியம் குறித்தும் அலசப்பட்டது.
ஆகவே விடுதலைப் புலிகள் அமைப்பை பொறுத்த வரையில் கடந்த கால ஒழுங்கில் பேச்சுக்களை முன்னெடுப்பதே எமது தலைமைப்பீடத்தின் உறுதியாக இருக்கின்றது.
அதுமட்டுமல்ல, அண்மைக்காலத்தில் ஒரு புதிய அரசியல் சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது. தேர்தல் நடைபெற்றிருக்கின்றது. தமிழர் தாயகப் பகுதிகளில் முழு மக்களும் ஒட்டுமொத்தமாக ஆதரவினை வழங்கி தமது அபிலாஷைகளை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
அந்த அடிப்படையில் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு எமது தலைமைப்பீடத்திற்கு இருக்கின்றது. அந்த அடிப்படையில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுமென நாம் நம்புகின்றோம்.
இலங்கை அரசின் பேச்சுவார்த்தைக்கான உத்தியோகபுூர்வ முடிவு தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து நோர்வே அரசின் ஊடாக இருதரப்பும் பேச்சுக்கள் தொடர்பான விளக்கங்களை தொடர்ந்து பரிமாறிக் கொள்ள இருக்கின்றன. அதன்பின்புதான் எங்களது உறுதியான தீர்மானங்களை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
பேச்சுவார்த்தையைப் பொறுத்த வரையில் எந்த வரையறைகளோ அல்லது நிபந்தனைகளையோ போடுவது சாத்தியற்றது என்றே கூற வேண்டும். அதை ஒருபோதும் தலைமைப்பீடம் ஏற்காது.
கடந்த காலங்களில் இந்த பேச்சுவார்த்தை முயற்சிகள் எந்த ஒழுங்குகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதோ அந்த அடிப்படையில்தான் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற தலைமையின் நிலைப்பாட்டை நாங்கள் அவர்களுக்கு வலியுறுத்திக் கூறியிருக்கின்றோம்.
நோர்வே அனுசரணையாளர்கள், அரசாங்கத்திற்கும், ஐனாதிபதிக்கும் எங்களுடைய நிலைப்பாட்டை கொண்டு செல்வதாக உறுதியளித்திருக்கின்றார்கள்.
அமைதிப் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் எடுத்துக்கொண்ட நிலைப்பாட்டில் பாரிய இடைவெளி இருப்பதாக சில கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை பற்றிய மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் நோர்வே அனுசரணையாளர்கள் ஊடாக திருப்தியான சமிக்ஞைகள் கிடைத்திருப்பதாகத் தெரிவித்த திரு தமிழ்ச்செல்வன், இலங்கை ஐனாதிபதியும், அரசும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மீதுள்ள தமது நம்பிக்கையை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்தார். பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு எந்த விதமான முன்நிபந்தனைகளும் இருக்க முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.
நோர்வே அனுசரணையாளர்களின் பங்கு தொடர்பான மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கையில், முன்னர் செய்த அதே பணியையே அவர்கள் தொடர்வார்கள் என்றார் அவர்.
மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்ற வன்செயல் சம்பவங்களின் பின்னணியில் உள்ள கருணாவிற்கும் அவரது குழுவினருக்கும் இலங்கை இராணுவம் அளித்துவரும் தொடர்ச்சியான உதவிகள், தொடர்புகளை இலங்கை அரசு தடுத்து நிறுத்தவேண்டும் எனத் தெரிவித்த திரு தமிழ்ச்செல்வன், தவறும் பட்சத்தில் பாரது}ரமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.
நன்றி புதினம்
[ திருநந்தன், சங்கீத் ] [திங்கட்கிழமை, 03 மே 2004, 19:55 ஈழம் ]
கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் எந்த ஒழுங்குகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதோ அந்த அடிப்படையில்தான் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையின் நிலைப்பாடு என தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று, நோர்வே சிறப்புத் து}துவர் எரிக் சொல்ஹெய்முடனான சந்திப்பின் பின் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு சு.ப.தமிழ்ச்செல்வனை நோர்வே து}துக்குழுவினர் புலிகளின் சமாதான செயலகத்தில் இன்று காலை 10.45 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்த இச்சந்திப்பில் இலங்கைக்கான நோர்வே து}துவர் திரு ஹான்ஸ் பிறஸ்கர், விசேட து}துவர் திரு எரிக் சொல்ஹெய்ம், நோர்வே வெளிவிவகார அமைச்சின் ஆலோசகர் லிசா கோல்டன் ஆகியோர் இடம்பெற்றனர்.
சமாதான நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுப்பது குறித்து, நோர்வே பிரதிநிதிகள், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருடன் இன்று சந்தித்து இரண்டு மணிநேர கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
நேற்று நோர்வே பிரதிநிதிகள் சிறிலங்கா ஐனாதிபதியுடன் கலந்துரையாடி, சமாதானப் பேச்சுகள் தொடர்பான அவர்களுடைய கருத்துக்கள், நிலைப்பாடுகளைப் பெற்றுக்கொண்டு இன்று வன்னிக்கு வந்து விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாடினர்.
![[Image: display.pl?if=20040504MON003.jpg]](http://www.eelampage.com/cgi-bin/news/display.pl?if=20040504MON003.jpg)
இன்றைய சந்திப்பு பற்றி தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் தெரிவித்த கருத்துக்கள் பின் வருமாறு,
- புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக ஆராயப்பட்டது.
- அரசு பேச்சுக்களை மிக விரைவில் மீண்டும் ஆரம்பிப்பது
தொடர்பாக கூடிய கரிசனையைக் காட்டிவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
- எதிர்காலத்தில் பேச்சுக்களை முன்னெடுப்பது தொடர்பாக ஆராயப்பட்டது.
- பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வது தொடர்பாகவும் பேசப்பட்டது.
- இடைக்கால நிர்வாக சபை அலகைக் கையளித்து அது தொடர்பாக பேசுகின்ற பொழுதுதான் அரசாங்கம் கலைக்கப்பட்டு புதிய அரசியல் சூழ்நிலை உருவாகியதால், அடுத்த கட்டப் பேச்சுக்கள் அங்கிருந்தே ஆரம்பிக்கப்படுவதன் அவசியம் குறித்தும் அலசப்பட்டது.
ஆகவே விடுதலைப் புலிகள் அமைப்பை பொறுத்த வரையில் கடந்த கால ஒழுங்கில் பேச்சுக்களை முன்னெடுப்பதே எமது தலைமைப்பீடத்தின் உறுதியாக இருக்கின்றது.
அதுமட்டுமல்ல, அண்மைக்காலத்தில் ஒரு புதிய அரசியல் சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது. தேர்தல் நடைபெற்றிருக்கின்றது. தமிழர் தாயகப் பகுதிகளில் முழு மக்களும் ஒட்டுமொத்தமாக ஆதரவினை வழங்கி தமது அபிலாஷைகளை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
அந்த அடிப்படையில் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு எமது தலைமைப்பீடத்திற்கு இருக்கின்றது. அந்த அடிப்படையில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுமென நாம் நம்புகின்றோம்.
இலங்கை அரசின் பேச்சுவார்த்தைக்கான உத்தியோகபுூர்வ முடிவு தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து நோர்வே அரசின் ஊடாக இருதரப்பும் பேச்சுக்கள் தொடர்பான விளக்கங்களை தொடர்ந்து பரிமாறிக் கொள்ள இருக்கின்றன. அதன்பின்புதான் எங்களது உறுதியான தீர்மானங்களை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
பேச்சுவார்த்தையைப் பொறுத்த வரையில் எந்த வரையறைகளோ அல்லது நிபந்தனைகளையோ போடுவது சாத்தியற்றது என்றே கூற வேண்டும். அதை ஒருபோதும் தலைமைப்பீடம் ஏற்காது.
கடந்த காலங்களில் இந்த பேச்சுவார்த்தை முயற்சிகள் எந்த ஒழுங்குகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதோ அந்த அடிப்படையில்தான் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற தலைமையின் நிலைப்பாட்டை நாங்கள் அவர்களுக்கு வலியுறுத்திக் கூறியிருக்கின்றோம்.
நோர்வே அனுசரணையாளர்கள், அரசாங்கத்திற்கும், ஐனாதிபதிக்கும் எங்களுடைய நிலைப்பாட்டை கொண்டு செல்வதாக உறுதியளித்திருக்கின்றார்கள்.
அமைதிப் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் எடுத்துக்கொண்ட நிலைப்பாட்டில் பாரிய இடைவெளி இருப்பதாக சில கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை பற்றிய மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் நோர்வே அனுசரணையாளர்கள் ஊடாக திருப்தியான சமிக்ஞைகள் கிடைத்திருப்பதாகத் தெரிவித்த திரு தமிழ்ச்செல்வன், இலங்கை ஐனாதிபதியும், அரசும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மீதுள்ள தமது நம்பிக்கையை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்தார். பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு எந்த விதமான முன்நிபந்தனைகளும் இருக்க முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.
நோர்வே அனுசரணையாளர்களின் பங்கு தொடர்பான மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கையில், முன்னர் செய்த அதே பணியையே அவர்கள் தொடர்வார்கள் என்றார் அவர்.
மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்ற வன்செயல் சம்பவங்களின் பின்னணியில் உள்ள கருணாவிற்கும் அவரது குழுவினருக்கும் இலங்கை இராணுவம் அளித்துவரும் தொடர்ச்சியான உதவிகள், தொடர்புகளை இலங்கை அரசு தடுத்து நிறுத்தவேண்டும் எனத் தெரிவித்த திரு தமிழ்ச்செல்வன், தவறும் பட்சத்தில் பாரது}ரமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.
நன்றி புதினம்

