05-02-2004, 03:36 AM
கதிர்காமரின் கூற்றைக் காரசாரமாக விமர்சிக்கின்றது த ஐலன்ட் நாளிதழ்
தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழத் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாகத் தமது அரசும் அங்கீகரித்து சமாதானப் பேச்சை மீளத்தொடங்கும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கூறியதைக் கண்டித்து த ஐலண்ட் நாளிதழ் காரசாரமான ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இதுவரை தெரிவித்து வந்த கொள்கைக்கு, கருத்துக்கு, அமைச்சர் கதிர்காமரின் கூற்று முற்றிலும் முரணானது என்றும் -
இதுகுறித்து இலங்கையர்கள் விரிவான விளக்கத்தைக் கோருகிறார்கள் என்றும் அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை அரசாக விளங்கும் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசுக்குத் தேவைப்படும் 21 எம்.பிக்களைக் கொண்ட, விடுதலைப் புலிகளின் ஏஜெண்டுகளாக விளங்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆதரவைப் பெறுவதற்காகவா இத்தகைய திடீர் மாற்றம் எனவும் அந்தத் தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நெடுநாளைய கூட்டணியாக ஈ.பி.டி.பி. கட்சி விளங்குகிறது. அந்தக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, பொதுமக்கள் ஐக்கியமுன்னணி அரசின் சோதனையான காலங்களில் எல்லாம் தோள்கொடுத்து உதவியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி, விடுதலைப் புலிகளுடன் உறவாடுவதால், டக்ளஸ் தேவானந்தா எப்போதும் அந்தஅரசிலிருந்து விலகியே தூரத்திலேயே - நின்றுள்ளார். அமைச்சர் கதிர்காமரின் தற்போதைய கூற்று அரசின் முந்திய நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணானதாகும். இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற சபாநாயகர் தெரிவிலும், அரச வேட்பாளர் டியு குணசேகர தோல்வியுற்றமைக்கு, ஹெல உறுமய பௌத்தபிக்கு எம்.பிக்கள், தமிழர் கூட்டமைப்பு எம்.பிக்களுடன் சேர்ந்து வாக்களித்தது தேசத்துரோகமானது என்று அரச தரப்பினர் குற்றஞ்சாட்டினர். இப்போது எங்கே நிற்கிறது?
ஐக்கிய தேசிய முன்னணியின் இரண்டு வருடகால ஆட்சியின்போது சுதந்திரக் கட்சியும், ஜே.வி.பியும் கைக்கொண்ட நிலைப்பாடு என்ன? ரணில் விக்கிரமசிங்க நாட்டை விடுதலைப் புலிகளுக்கு அடகுவைத்து விட்டார் என்று கூறி, ஜனாதிபதி சந்திரிகா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்தது எதற்காக? இப்போது திடீரென அந்த நிலைப்பாடு மாறிவிட்டதா? விடுதலைப் புலிகளைச் சர்வதேசப் பயங்கரவாத இயக்கம் என்று சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொண்டு அதனைத்தடை செய்வதற்கான பிரசாரத்தை வெற்றிகரமாக முன்வைத்த அமைச்சர் கதிர்காமரே இப்போது பல்டி அடிப்பது எதற்காக? என்றவாறு பல கேள்விகளை முன்வைத்து வரையப்பட்ட தென்னிலங்கையின் பேரினவாதிகளின் குரலாக - ஆசிரியர் தலையங்கம் அரசைவன்மையாகச் கண்டிக்கிறது.
உதயன்
தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழத் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாகத் தமது அரசும் அங்கீகரித்து சமாதானப் பேச்சை மீளத்தொடங்கும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கூறியதைக் கண்டித்து த ஐலண்ட் நாளிதழ் காரசாரமான ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இதுவரை தெரிவித்து வந்த கொள்கைக்கு, கருத்துக்கு, அமைச்சர் கதிர்காமரின் கூற்று முற்றிலும் முரணானது என்றும் -
இதுகுறித்து இலங்கையர்கள் விரிவான விளக்கத்தைக் கோருகிறார்கள் என்றும் அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை அரசாக விளங்கும் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசுக்குத் தேவைப்படும் 21 எம்.பிக்களைக் கொண்ட, விடுதலைப் புலிகளின் ஏஜெண்டுகளாக விளங்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆதரவைப் பெறுவதற்காகவா இத்தகைய திடீர் மாற்றம் எனவும் அந்தத் தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நெடுநாளைய கூட்டணியாக ஈ.பி.டி.பி. கட்சி விளங்குகிறது. அந்தக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, பொதுமக்கள் ஐக்கியமுன்னணி அரசின் சோதனையான காலங்களில் எல்லாம் தோள்கொடுத்து உதவியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி, விடுதலைப் புலிகளுடன் உறவாடுவதால், டக்ளஸ் தேவானந்தா எப்போதும் அந்தஅரசிலிருந்து விலகியே தூரத்திலேயே - நின்றுள்ளார். அமைச்சர் கதிர்காமரின் தற்போதைய கூற்று அரசின் முந்திய நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணானதாகும். இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற சபாநாயகர் தெரிவிலும், அரச வேட்பாளர் டியு குணசேகர தோல்வியுற்றமைக்கு, ஹெல உறுமய பௌத்தபிக்கு எம்.பிக்கள், தமிழர் கூட்டமைப்பு எம்.பிக்களுடன் சேர்ந்து வாக்களித்தது தேசத்துரோகமானது என்று அரச தரப்பினர் குற்றஞ்சாட்டினர். இப்போது எங்கே நிற்கிறது?
ஐக்கிய தேசிய முன்னணியின் இரண்டு வருடகால ஆட்சியின்போது சுதந்திரக் கட்சியும், ஜே.வி.பியும் கைக்கொண்ட நிலைப்பாடு என்ன? ரணில் விக்கிரமசிங்க நாட்டை விடுதலைப் புலிகளுக்கு அடகுவைத்து விட்டார் என்று கூறி, ஜனாதிபதி சந்திரிகா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்தது எதற்காக? இப்போது திடீரென அந்த நிலைப்பாடு மாறிவிட்டதா? விடுதலைப் புலிகளைச் சர்வதேசப் பயங்கரவாத இயக்கம் என்று சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொண்டு அதனைத்தடை செய்வதற்கான பிரசாரத்தை வெற்றிகரமாக முன்வைத்த அமைச்சர் கதிர்காமரே இப்போது பல்டி அடிப்பது எதற்காக? என்றவாறு பல கேள்விகளை முன்வைத்து வரையப்பட்ட தென்னிலங்கையின் பேரினவாதிகளின் குரலாக - ஆசிரியர் தலையங்கம் அரசைவன்மையாகச் கண்டிக்கிறது.
உதயன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

