05-02-2004, 03:31 AM
புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்று புதிய அரசு அவர்களோடு பேசும்!
கொழும்புப் பத்திரிகைக்கு புதுடில்லியில் அளித்த விசேட செவ்வியில் அமைச்சர் கதிர்காமர் தகவல்
இலங்கையின் புதிய அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழத்தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக அங்கீகரித்து, அவர்களுடன் பேச்சுக்களில் ஈடு படும். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தவேளை, கொழும்பில் இருந்து வெளிவரும் த ஐலண்ட்| நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் வெளி விவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்திய விஜயத்தின்போது அமைச்சர் கதிர்காமர், தமது விசேட செய்தியாளர் எஸ்.வெங்கட்நாராயணனுக்கு புதுடில்லியில் வைத்து வழங்கிய செவ்வியில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார் என்று த ஐலண்ட்| தனது செய்தியில் குறிப்பிட்டிருக்கிறது. முந்திய அரசு சமாதானப் பேச்சைத் தொடங்கியபோது, பேச்சு மேசையில் இரண்டு பிரதான தரப்புகளாக அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளுமே பங்குபற்றினர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பேச்சை எமது அரசு தொடர்ந்து நடத்தவுள்ளது. நாங்கள் பேச்சை மீளத் தொடங்கும்போதும், பேச்சில் அரசு - தமிழீழ விடுதலைப்புலிகள் ஆகிய இரு தரப்புகளுமே பிரதான பங்காளிகளாக இருப்பர். அதாவது, எங்களுடைய அரசும் ஈழத் தமிழர்களின் ஏகப்பிரநிநிதிகளாக விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கிறது என்பதே இதன் அர்த்தமாகும் - என்று செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்கு வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் பதிலளித்ததாக அந்தச் செய்தியில் விவரிக்கப்பட்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க அரசிடம் கடந்த ஒக்ரோபர் மாதத்தில் விடுதலைப்புலிகள் சமர்ப்பித்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையை நிறுவுவது குறித்ததிட்டம் குறித்த செய்தியாளர் கேட்டதற்கு, அமைச்சர் கதிர்காமர் பின்வருமாறு பதிலளித்தார் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது:- அந்தத் திட்டம் பேச்சில் நிச்சயமாக இடம்பெறும். அதனை அரசு முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுகின்றார்கள் ஆனால் இதுவிடயத்தில் விடுதலைப்புலிகள் நடைமுறைச் சாத்தியமானதும், யதார்த்தாPதியானதுமான அணுகு முறையை அதிகளவில் கையாள்வார்கள் என்றே நான் பெரிதும் நம்புகிறேன்.
செய்தியாளர்: விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனை அண்மையில் கிளிநொச்சியில் சந்தித்தவேளை, இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைத் திட்டத்தை முழு அளவில் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சை மீளத் தொடங்கலாம் என்று விடாப்பிடியாக நிற்கமாட்டோம் - என என்னிடம் கூறினார்.
அமைச்சர் கதிர்காமர்: என்னுடைய நம்பிக்கையும் அதுவே ஆகும். பேச்சைத் தொடங்கும் வேளையிலே இவை குறித்து நாம் ஆராய வேண்டும் - என்றார்.
நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கிசஸனும், எரிக் ஹொல் ஹெய்மும் மே மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்வார்கள். அவ்வேளை, பேச்சுக் குறித்த விவரங்கள் இறுதியாக்கப்படும். அதன் பின்னர் விடுதலைப் புலிகளுடன் பேச்சு விரைவில் ஆரம்பிக்கப்படும் - என்று செய்தியாளரிடம் அமைச்சர் கதிர்காமர் தெரிவித்தார்.
வடக்கு - கிழக்கின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகளை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுப்பது என்பது குறித்து பேச்சில் பிரதானகவனம் செலுத்தப்படும் - என்றும் அமைச்சர் ஏப்ரல் 29ஆம் திகதி வழங்கிய அந்தச் செவ்வியில் தெரிவித்தார் - என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்புப் பத்திரிகைக்கு புதுடில்லியில் அளித்த விசேட செவ்வியில் அமைச்சர் கதிர்காமர் தகவல்
இலங்கையின் புதிய அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழத்தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக அங்கீகரித்து, அவர்களுடன் பேச்சுக்களில் ஈடு படும். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தவேளை, கொழும்பில் இருந்து வெளிவரும் த ஐலண்ட்| நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் வெளி விவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்திய விஜயத்தின்போது அமைச்சர் கதிர்காமர், தமது விசேட செய்தியாளர் எஸ்.வெங்கட்நாராயணனுக்கு புதுடில்லியில் வைத்து வழங்கிய செவ்வியில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார் என்று த ஐலண்ட்| தனது செய்தியில் குறிப்பிட்டிருக்கிறது. முந்திய அரசு சமாதானப் பேச்சைத் தொடங்கியபோது, பேச்சு மேசையில் இரண்டு பிரதான தரப்புகளாக அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளுமே பங்குபற்றினர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பேச்சை எமது அரசு தொடர்ந்து நடத்தவுள்ளது. நாங்கள் பேச்சை மீளத் தொடங்கும்போதும், பேச்சில் அரசு - தமிழீழ விடுதலைப்புலிகள் ஆகிய இரு தரப்புகளுமே பிரதான பங்காளிகளாக இருப்பர். அதாவது, எங்களுடைய அரசும் ஈழத் தமிழர்களின் ஏகப்பிரநிநிதிகளாக விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கிறது என்பதே இதன் அர்த்தமாகும் - என்று செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்கு வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் பதிலளித்ததாக அந்தச் செய்தியில் விவரிக்கப்பட்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க அரசிடம் கடந்த ஒக்ரோபர் மாதத்தில் விடுதலைப்புலிகள் சமர்ப்பித்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையை நிறுவுவது குறித்ததிட்டம் குறித்த செய்தியாளர் கேட்டதற்கு, அமைச்சர் கதிர்காமர் பின்வருமாறு பதிலளித்தார் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது:- அந்தத் திட்டம் பேச்சில் நிச்சயமாக இடம்பெறும். அதனை அரசு முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுகின்றார்கள் ஆனால் இதுவிடயத்தில் விடுதலைப்புலிகள் நடைமுறைச் சாத்தியமானதும், யதார்த்தாPதியானதுமான அணுகு முறையை அதிகளவில் கையாள்வார்கள் என்றே நான் பெரிதும் நம்புகிறேன்.
செய்தியாளர்: விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனை அண்மையில் கிளிநொச்சியில் சந்தித்தவேளை, இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைத் திட்டத்தை முழு அளவில் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சை மீளத் தொடங்கலாம் என்று விடாப்பிடியாக நிற்கமாட்டோம் - என என்னிடம் கூறினார்.
அமைச்சர் கதிர்காமர்: என்னுடைய நம்பிக்கையும் அதுவே ஆகும். பேச்சைத் தொடங்கும் வேளையிலே இவை குறித்து நாம் ஆராய வேண்டும் - என்றார்.
நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கிசஸனும், எரிக் ஹொல் ஹெய்மும் மே மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்வார்கள். அவ்வேளை, பேச்சுக் குறித்த விவரங்கள் இறுதியாக்கப்படும். அதன் பின்னர் விடுதலைப் புலிகளுடன் பேச்சு விரைவில் ஆரம்பிக்கப்படும் - என்று செய்தியாளரிடம் அமைச்சர் கதிர்காமர் தெரிவித்தார்.
வடக்கு - கிழக்கின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகளை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுப்பது என்பது குறித்து பேச்சில் பிரதானகவனம் செலுத்தப்படும் - என்றும் அமைச்சர் ஏப்ரல் 29ஆம் திகதி வழங்கிய அந்தச் செவ்வியில் தெரிவித்தார் - என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

