05-01-2004, 10:30 AM
போராளிகள் மீது தாக்குதல், பொதுமக்கள் ஆர்பாட்டம்
யாழ். புத்து}ர்ச் சந்தியில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் இருவர் மீது பொலிசார் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து, பொதுமக்கள் அங்கு திரண்டு ஆர்பாட்டம் செய்துள்ளனர்.
நேற்றைய தினம் மாலை 6 மணியளவில் புத்து}ர்ச் சந்திப் பகுதியால் வந்துகொண்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளான உதயகுமார், நிஷாந்தன் ஆகிய இரு போராளிகளையும் அங்கே காவல் கடமையிலிருந்த சிறிலங்கா பொலிசார் ஒருவர் வழிமறித்து அவர்களுடைய மோட்டார் சைக்கிளைப் புூட்டி திறப்பினை எடுத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் பொலிசாருக்கும், போராளிகளுக்கும் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, அச்சுவேலி பொலிஸ் நிலையத்திலிருந்து துணைப் பொறுப்பதிகாரி துமிந்த ராஐபக்ஷ தலைமையில் வந்த பொலிஸ் குழுவினர் மேற்படி போராளிகளை கடுமையாகத் தாக்கியதுடன், அவர்களது மோட்டார் சைக்கிளையும் தங்களது இராணு ட்றக் வண்டியில் ஏற்றிச் சென்றனர்.
இதன் போது வீதியால் வந்துகொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரை பொலிசார் தாக்கியதுடன் அந்த வீதியால் வந்துகொண்டிருந்த ஐபிசி தமிழின் யாழ். செய்தியாளர் தவச்செல்வனையும் பொலிசார் தாக்கினர்.
இச்சம்பவத்தையடுத்து அச்சுவேலி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு முன் குழுமி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொலிசார் மூவர் உதயகுமார், நிஷாந்தன் ஆகிய இரு போராளிகளிடமும், ஐபிசியின் செய்தியாளரிடமும் ஒன்றாக அவர்கள் வந்து மன்னிப்புக் கேட்டனர்.
இதனையடுத்து பொதுமக்கள் கூட்டம் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி புதினம்
யாழ். புத்து}ர்ச் சந்தியில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் இருவர் மீது பொலிசார் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து, பொதுமக்கள் அங்கு திரண்டு ஆர்பாட்டம் செய்துள்ளனர்.
நேற்றைய தினம் மாலை 6 மணியளவில் புத்து}ர்ச் சந்திப் பகுதியால் வந்துகொண்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளான உதயகுமார், நிஷாந்தன் ஆகிய இரு போராளிகளையும் அங்கே காவல் கடமையிலிருந்த சிறிலங்கா பொலிசார் ஒருவர் வழிமறித்து அவர்களுடைய மோட்டார் சைக்கிளைப் புூட்டி திறப்பினை எடுத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் பொலிசாருக்கும், போராளிகளுக்கும் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, அச்சுவேலி பொலிஸ் நிலையத்திலிருந்து துணைப் பொறுப்பதிகாரி துமிந்த ராஐபக்ஷ தலைமையில் வந்த பொலிஸ் குழுவினர் மேற்படி போராளிகளை கடுமையாகத் தாக்கியதுடன், அவர்களது மோட்டார் சைக்கிளையும் தங்களது இராணு ட்றக் வண்டியில் ஏற்றிச் சென்றனர்.
இதன் போது வீதியால் வந்துகொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரை பொலிசார் தாக்கியதுடன் அந்த வீதியால் வந்துகொண்டிருந்த ஐபிசி தமிழின் யாழ். செய்தியாளர் தவச்செல்வனையும் பொலிசார் தாக்கினர்.
இச்சம்பவத்தையடுத்து அச்சுவேலி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு முன் குழுமி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொலிசார் மூவர் உதயகுமார், நிஷாந்தன் ஆகிய இரு போராளிகளிடமும், ஐபிசியின் செய்தியாளரிடமும் ஒன்றாக அவர்கள் வந்து மன்னிப்புக் கேட்டனர்.
இதனையடுத்து பொதுமக்கள் கூட்டம் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி புதினம்

