04-30-2004, 09:55 PM
<b>அதியுயர் பாதுகாப்பு வலயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள்
குறித்து புலிகள் படையினர் கலந்துரையாடல் </b>
(யாழ்.அலுவலக நிருபர்)
யாழ்.மாவட்டத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் அதியுயர் பாதுகாப்பு வலயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து நேற்று வியாழக்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகள் படையினருடன் கலந்துரையாடியுள்ளனர்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மாணவர்களின் கல்விப் பிரச்சினைகள் மற்றும் இயல்பு வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் ஆராயப்பட்டன.
இக்கலந்துரையாடலின் போது படைத்தரப்பில் லெப்டினன் கேணல் சுசில் சந்திரபாலவும் தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பில் யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி, நல்லூர் கோட்டப்பொறுப்பாளர் திருமறவன் மற்றும் சுதா ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் முதல்தடவையாக இடம்பெற்ற இச்சந்திப்பு மிகவும் சுமுகமான முறையிலும் இணக்கப்பாடாக இடம் பெற்றதாகத் தெரியவருகின்றது.
இருந்த போதிலும் கூட இவ்விரு சாராருக்குமிடையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிடமும் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் விவரங்கள் பெறமுடியாதநிலை காணப்பட்டது
குறித்து புலிகள் படையினர் கலந்துரையாடல் </b>
(யாழ்.அலுவலக நிருபர்)
யாழ்.மாவட்டத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் அதியுயர் பாதுகாப்பு வலயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து நேற்று வியாழக்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகள் படையினருடன் கலந்துரையாடியுள்ளனர்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மாணவர்களின் கல்விப் பிரச்சினைகள் மற்றும் இயல்பு வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் ஆராயப்பட்டன.
இக்கலந்துரையாடலின் போது படைத்தரப்பில் லெப்டினன் கேணல் சுசில் சந்திரபாலவும் தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பில் யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி, நல்லூர் கோட்டப்பொறுப்பாளர் திருமறவன் மற்றும் சுதா ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் முதல்தடவையாக இடம்பெற்ற இச்சந்திப்பு மிகவும் சுமுகமான முறையிலும் இணக்கப்பாடாக இடம் பெற்றதாகத் தெரியவருகின்றது.
இருந்த போதிலும் கூட இவ்விரு சாராருக்குமிடையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிடமும் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் விவரங்கள் பெறமுடியாதநிலை காணப்பட்டது

