04-30-2004, 12:05 PM
மீண்டும் பழைய பல்லவியா?
Friday, 30 April 2004
பிரதி பாதுகாப்பமைச்சராக அனுருத்த ரத்வத்தையை சனாதிபதி நியமிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அனுருத்த ரத்வத்தை இன்னமும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவில்லை. அவர் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றோ அல்லது தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்படவோ இல்லை பதிலாக தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்படலாம் என்ற தகவல்களே தெரிவிக்கின்றன.
ஒரு காலத்தையே சனாதிபதி சந்திரிகா தலைமையிலான அரசின் கடும் இராணுவப் போக்குக்குக் காரணமாக சூத்திரதாரர்களுள் முக்கியவரான ரத்வத்தையின் பெயர் தற்போது பேசப்படுவது சந்திரிகாவின் புதிய அணுகு முறை தொடர்பாக சந்தேகங்களையே தோற்றுவித்துள்ளது.
அதிலும் அனுருத்த ரத்வத்தை தற்போதும் சந்தேகத்திற்கிடமான குற்றவாளியாகக் காணப்படுகிறார். அத்தகைய ஒரு நபர் நாட்டின் பாதுகாப்புக்கு நியமிக்கப்படலாம் என்பது இலங்கையின் அரசியல் நேர்மை கேலிக்குரிய ஒன்றாக மாறி வருவதையே காட்டுகிறது.
இதேவேளை ரத்வத்தையை சனாதிபதி சந்திரிகா மீண்டும் பிரதிப்பாதுகாப்பு அமைச்சராக கொண்டு வர முயற்சிப்பது என்பது அவரின் புதிய அரசு வரலாற்றில் பாடங்களைக் கற்றுக்கொள்ள மறந்து போனதையே காட்டுகிறது.
இதே வேளை இவரை சனாதிபதி சந்திரிகா பிரதிபாதுகாப்பு அமைச்சராகக் கொண்டுவருவதற்கு பண்டார நாயக்க குடும்பப் பின்னணி என்ற ஒரு காரணத்தை விட வேறு எந்தக்காரணங்களும் இருக்கப்போவதில்லை.
அவ்வாறாயின் நாட்டு மக்களின் விருப்புவெறுப்புகளுக்கும் அப்பால் தன்னுடைய பண்டார நாயக்க குடும்பத்தின் நெருங்கிய உறவு நிலை சார்ந்தவர்கள் மாத்திரமே கட்சிக்குள்ளும் தனது கட்சி அலங்கரிக்கும் அரசுக்குள்ளும் பதவி நிலைகளை வகிக்கலாம் என்ற எழுதப்படாத விதி ஒன்றை உண்மையாக்க முயற்சிப்பது போலத்தெரிகிறது.
இதே நிலையில் சனாதிபதி சந்திரிகாவுக்கும் அவர் கூட்டு ஏற்படுத்திய ஜே.வி.பிக்கும் இடையிலான முறுகல் நிலையே இன்னும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. அந்த நிலையிலும் ரத்வத்தையை பிரதிபாதுகாப்பு அமைச்சராகக் கொண்டுவர முற்படுவதானது எந்தபிரச்சினைகளுக்கும் மத்தியிலும் சனாதிபதி சந்திரிகா ஒரு குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ரத்வத்தையை உயர் பதவி நிலைக்கூடாக பாதுகாக்க முற்படுவது போலவுள்ளது.
ஜக்கிய தேசிய முன்னணி அரசின் காலத்தில் உடத்தலவின் படுகொலைக்காக ஜக்கிய தேசிய முன்னணி அரசினால் நீதிமன்றத்திற்கும் சிறைச்சாலைக்குமென இழுத்தடிக்கப்பட்டதை நிச்சயம் மறந்துவிடமாட்டார்.
அந்த வகையில் ரத்வத்தைக்கு வழங்கப்படும் பிரதிபாதுகாப்பு அமைச்சு என்ற அதிகாரத்தின் மூலம் அதிகார துஷ்பிரயோகத்திற்கும் பாதை திறந்து விடப்படுகிறது.
இதன்மூலம் இனி ஜக்கிய தேசிய முன்னணி அரசின் உயர் தலைகள் பல பல்வேறு காரணங்களின் பேரில் தண்டிக்கப்படவோ அல்லது நெருக்கடிகளை எதிர்கொள்ளவோ வேண்டிவரும் என்பது மட்டும் நிச்சயம்.
ஆகவே ஒரு வேளை ரத்வத்தை பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக சனாதிபதி சந்திரிகாவால் நியமிக்கப்பட்டால் நாட்டில் பழிவாங்கும் படலம் ஆரம்பிக்கப்போகிறது என்பதைத் துணிந்து கூறலாம்.
நக்கீரர் ஈழநாதம்.
Friday, 30 April 2004
பிரதி பாதுகாப்பமைச்சராக அனுருத்த ரத்வத்தையை சனாதிபதி நியமிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அனுருத்த ரத்வத்தை இன்னமும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவில்லை. அவர் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றோ அல்லது தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்படவோ இல்லை பதிலாக தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்படலாம் என்ற தகவல்களே தெரிவிக்கின்றன.
ஒரு காலத்தையே சனாதிபதி சந்திரிகா தலைமையிலான அரசின் கடும் இராணுவப் போக்குக்குக் காரணமாக சூத்திரதாரர்களுள் முக்கியவரான ரத்வத்தையின் பெயர் தற்போது பேசப்படுவது சந்திரிகாவின் புதிய அணுகு முறை தொடர்பாக சந்தேகங்களையே தோற்றுவித்துள்ளது.
அதிலும் அனுருத்த ரத்வத்தை தற்போதும் சந்தேகத்திற்கிடமான குற்றவாளியாகக் காணப்படுகிறார். அத்தகைய ஒரு நபர் நாட்டின் பாதுகாப்புக்கு நியமிக்கப்படலாம் என்பது இலங்கையின் அரசியல் நேர்மை கேலிக்குரிய ஒன்றாக மாறி வருவதையே காட்டுகிறது.
இதேவேளை ரத்வத்தையை சனாதிபதி சந்திரிகா மீண்டும் பிரதிப்பாதுகாப்பு அமைச்சராக கொண்டு வர முயற்சிப்பது என்பது அவரின் புதிய அரசு வரலாற்றில் பாடங்களைக் கற்றுக்கொள்ள மறந்து போனதையே காட்டுகிறது.
இதே வேளை இவரை சனாதிபதி சந்திரிகா பிரதிபாதுகாப்பு அமைச்சராகக் கொண்டுவருவதற்கு பண்டார நாயக்க குடும்பப் பின்னணி என்ற ஒரு காரணத்தை விட வேறு எந்தக்காரணங்களும் இருக்கப்போவதில்லை.
அவ்வாறாயின் நாட்டு மக்களின் விருப்புவெறுப்புகளுக்கும் அப்பால் தன்னுடைய பண்டார நாயக்க குடும்பத்தின் நெருங்கிய உறவு நிலை சார்ந்தவர்கள் மாத்திரமே கட்சிக்குள்ளும் தனது கட்சி அலங்கரிக்கும் அரசுக்குள்ளும் பதவி நிலைகளை வகிக்கலாம் என்ற எழுதப்படாத விதி ஒன்றை உண்மையாக்க முயற்சிப்பது போலத்தெரிகிறது.
இதே நிலையில் சனாதிபதி சந்திரிகாவுக்கும் அவர் கூட்டு ஏற்படுத்திய ஜே.வி.பிக்கும் இடையிலான முறுகல் நிலையே இன்னும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. அந்த நிலையிலும் ரத்வத்தையை பிரதிபாதுகாப்பு அமைச்சராகக் கொண்டுவர முற்படுவதானது எந்தபிரச்சினைகளுக்கும் மத்தியிலும் சனாதிபதி சந்திரிகா ஒரு குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ரத்வத்தையை உயர் பதவி நிலைக்கூடாக பாதுகாக்க முற்படுவது போலவுள்ளது.
ஜக்கிய தேசிய முன்னணி அரசின் காலத்தில் உடத்தலவின் படுகொலைக்காக ஜக்கிய தேசிய முன்னணி அரசினால் நீதிமன்றத்திற்கும் சிறைச்சாலைக்குமென இழுத்தடிக்கப்பட்டதை நிச்சயம் மறந்துவிடமாட்டார்.
அந்த வகையில் ரத்வத்தைக்கு வழங்கப்படும் பிரதிபாதுகாப்பு அமைச்சு என்ற அதிகாரத்தின் மூலம் அதிகார துஷ்பிரயோகத்திற்கும் பாதை திறந்து விடப்படுகிறது.
இதன்மூலம் இனி ஜக்கிய தேசிய முன்னணி அரசின் உயர் தலைகள் பல பல்வேறு காரணங்களின் பேரில் தண்டிக்கப்படவோ அல்லது நெருக்கடிகளை எதிர்கொள்ளவோ வேண்டிவரும் என்பது மட்டும் நிச்சயம்.
ஆகவே ஒரு வேளை ரத்வத்தை பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக சனாதிபதி சந்திரிகாவால் நியமிக்கப்பட்டால் நாட்டில் பழிவாங்கும் படலம் ஆரம்பிக்கப்போகிறது என்பதைத் துணிந்து கூறலாம்.
நக்கீரர் ஈழநாதம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

