04-25-2004, 08:28 AM
நான் வாழும் வீடு என்னுடயதல்ல.அது வாடகை வீடுதான்.அது வேறொருவருக்கு சொந்தமானதுதான். அது எனது வீடு இல்லை என்பதால் அதை நிர்மூலப்படுத்த எவரையும் அனுமதிக்க முடியாது.அதுவும் இல்லையென்றால் நான் நடுவீதியில்தான் நிற்க வேண்டும்.
சுவிஸ் நாட்டில் ஏற்பட்ட கொலை ஒன்று தொடர்பாக வந்த செய்தியை வைத்து மட்டுமல்ல, சுவிஸைப் பற்றிய ஒரு கருத்து முன் வைக்கப்பட்டால், சுவிஸ் ஒரு மோசமான நாடு என்பது போன்ற ஒரு வக்கிரத் தன்மையோடு ஒருவரால் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தது.
எந்த ஒரு நாடும் 100 சதவிகிதம் சிறந்த நாடாக முடியாது. ஆனால் சுவிஸ் மக்கள் இங்கு வாழும் தமிழர்கள் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பாசப்பிணைப்பும் அறுந்து போவதற்கோ அல்லது சின்னாபின்னப்படுத்துவதற்கோ என்னால் இடமளிக்க முடியாது.
ஆரம்பகாலத்தில் தமிழர்களைப் பற்றிய தவறான எண்ணங்களே கூடுதலான சுவிஸ் மக்கள் மத்தியில் காணப்பட்டது. ஒரு சில மனிதநேய அமைப்புகளும், ஆசிய நாடுகளில் தொடர்புகள் கொண்ட ஒரு சிலரும் மட்டுமே தமிழர்பால் அன்பு கொண்டவர்களாக இருந்தனர்.
இன்று 100க்கு 90க்கும் மேற்பட்ட சுவிஸ் மக்கள் தமிழர் மேல் அளவு கடந்த பாசம் கொண்டவர்களாக மாறியுள்ளனர்.சுவிஸ் நாட்டவர் தமது நாட்டின் மீது அதிக கரிசனை கொண்டவர்கள்.அந்நியர் இந்நாட்டுக்குள் புகுவதையே விரும்பாதவர்கள்.இங்கே எந்த ஒரு முடிவும் மக்களின் ஆணைப்படி, விருப்பு வாக்குகள் பெற்றேதான் பாராளுமன்றம் செய்கிறது. உதாரணமாக மக்கள் விரும்பாத காரணத்தால், பாராளுமன்றத்திலுள்ள அநேகர் விரும்பியும் கூட, ஐரோப்பிய ஒன்றியத்தில் சுவிஸால் இணைய முடியாமலிருக்கிறது. நமக்கு வாழ்வதற்கு வழி செய்த ஒரு நாட்டை நாம் செய் நன்றிக் கடனுக்காவது மதிக்கத் தெரியாவிட்டால், அவன் ஒரு சுயநலவாதியாகவே இருப்பான்.
<span style='color:green'>இங்கு வாழும் தமிழர்கள் நல்ல உழைப்பாளிகள், உண்மையானவர்கள் ,கிரிமினல்கள் அற்றவர்கள் என்று சுவிஸ் மக்கள் கருதுகிறார்கள். 95 சதவீதத்துக்குமதிகமான தமிழர்கள் ஒரு பிரச்சனையுமில்லாது மகிழ்வாகவே வாழ்கிறார்கள்.
வெளி நாட்டவரால் நடைபெறும் திருட்டுகளின் போது கூட போலீஸார் சந்தேகப்படாத வெளிநாட்டவர்கள் என்றால் அது தமிழர்கள்தான் என்று போலீஸார் பத்திரிகைகளில் எழுதியதோடு வானோலி, தொலைக் காட்சி பேட்டிகளில் கூட கூறியிருக்கிறார்கள்.
கடந்த முறை பாராளுமன்றத்துக்கு தெரிவான தலைமை அமைச்சர் பாராளுமன்றத்தில் அவரது முதல் உரையின் போது சுவிஸில் வாழும் தமிழர்கள் பல காலமாக வதிவிட உரிமை கூட கொடுக்கப்படாது காலம் தாழ்த்தப்பட்டு வருவது என்னை வேதனைக்குள்ளாக்குகிறது என்று கூறி ,மனிதநேயத்தின் அடிப்படையில் இங்கு வாழும் தமிழருக்கு வதிவிட உரிமையை வாங்கிக் கொடுத்ததையும், அதை சரியென்று ஆமோதித்த மக்களையும் ,அந்த நாட்டையும், அவமானப்படுத்தும் எவரையும் சுவிஸ் வாழ் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
சுவிஸ் ,ஜெனிவாவாவில் நடை பெறும் மாபெரும் ஊர்வலங்களின் (ஐநாவை நோக்கிய ஊர்வலங்கள்) பாதுகாப்புக்குக்கு சுவிஸ் போலீஸார் அதிகளவில் ஈடுபடுவதேயில்லை. பாதைகளை ஒழுங்கு படுத்தும் முக்கிய பணிகளிலிருந்து அனைத்து பணிகளையும் தமிழர்களே முன்னின்று நடத்துமளவுக்கு சுவிஸ் அரசும், போலீஸாரும், மக்களும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிநாடுகளில் இருந்து வந்த மக்கள் கண்கூடாக கண்டிருப்பார்கள்.
எமது தாயகத்தைப் போலவே, அல்லல் பட்டு ஓடி வந்த போது எமக்கு அடைக்கலம் தந்த இந்த நாட்டையும் என்னால் வார்த்தைகளால் கூட மாசுபடுத்த அனுமதிக்க முடியாது.
அன்புடன்
AJeevan</span>
சுவிஸ் நாட்டில் ஏற்பட்ட கொலை ஒன்று தொடர்பாக வந்த செய்தியை வைத்து மட்டுமல்ல, சுவிஸைப் பற்றிய ஒரு கருத்து முன் வைக்கப்பட்டால், சுவிஸ் ஒரு மோசமான நாடு என்பது போன்ற ஒரு வக்கிரத் தன்மையோடு ஒருவரால் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தது.
எந்த ஒரு நாடும் 100 சதவிகிதம் சிறந்த நாடாக முடியாது. ஆனால் சுவிஸ் மக்கள் இங்கு வாழும் தமிழர்கள் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பாசப்பிணைப்பும் அறுந்து போவதற்கோ அல்லது சின்னாபின்னப்படுத்துவதற்கோ என்னால் இடமளிக்க முடியாது.
ஆரம்பகாலத்தில் தமிழர்களைப் பற்றிய தவறான எண்ணங்களே கூடுதலான சுவிஸ் மக்கள் மத்தியில் காணப்பட்டது. ஒரு சில மனிதநேய அமைப்புகளும், ஆசிய நாடுகளில் தொடர்புகள் கொண்ட ஒரு சிலரும் மட்டுமே தமிழர்பால் அன்பு கொண்டவர்களாக இருந்தனர்.
இன்று 100க்கு 90க்கும் மேற்பட்ட சுவிஸ் மக்கள் தமிழர் மேல் அளவு கடந்த பாசம் கொண்டவர்களாக மாறியுள்ளனர்.சுவிஸ் நாட்டவர் தமது நாட்டின் மீது அதிக கரிசனை கொண்டவர்கள்.அந்நியர் இந்நாட்டுக்குள் புகுவதையே விரும்பாதவர்கள்.இங்கே எந்த ஒரு முடிவும் மக்களின் ஆணைப்படி, விருப்பு வாக்குகள் பெற்றேதான் பாராளுமன்றம் செய்கிறது. உதாரணமாக மக்கள் விரும்பாத காரணத்தால், பாராளுமன்றத்திலுள்ள அநேகர் விரும்பியும் கூட, ஐரோப்பிய ஒன்றியத்தில் சுவிஸால் இணைய முடியாமலிருக்கிறது. நமக்கு வாழ்வதற்கு வழி செய்த ஒரு நாட்டை நாம் செய் நன்றிக் கடனுக்காவது மதிக்கத் தெரியாவிட்டால், அவன் ஒரு சுயநலவாதியாகவே இருப்பான்.
<span style='color:green'>இங்கு வாழும் தமிழர்கள் நல்ல உழைப்பாளிகள், உண்மையானவர்கள் ,கிரிமினல்கள் அற்றவர்கள் என்று சுவிஸ் மக்கள் கருதுகிறார்கள். 95 சதவீதத்துக்குமதிகமான தமிழர்கள் ஒரு பிரச்சனையுமில்லாது மகிழ்வாகவே வாழ்கிறார்கள்.
வெளி நாட்டவரால் நடைபெறும் திருட்டுகளின் போது கூட போலீஸார் சந்தேகப்படாத வெளிநாட்டவர்கள் என்றால் அது தமிழர்கள்தான் என்று போலீஸார் பத்திரிகைகளில் எழுதியதோடு வானோலி, தொலைக் காட்சி பேட்டிகளில் கூட கூறியிருக்கிறார்கள்.
கடந்த முறை பாராளுமன்றத்துக்கு தெரிவான தலைமை அமைச்சர் பாராளுமன்றத்தில் அவரது முதல் உரையின் போது சுவிஸில் வாழும் தமிழர்கள் பல காலமாக வதிவிட உரிமை கூட கொடுக்கப்படாது காலம் தாழ்த்தப்பட்டு வருவது என்னை வேதனைக்குள்ளாக்குகிறது என்று கூறி ,மனிதநேயத்தின் அடிப்படையில் இங்கு வாழும் தமிழருக்கு வதிவிட உரிமையை வாங்கிக் கொடுத்ததையும், அதை சரியென்று ஆமோதித்த மக்களையும் ,அந்த நாட்டையும், அவமானப்படுத்தும் எவரையும் சுவிஸ் வாழ் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
சுவிஸ் ,ஜெனிவாவாவில் நடை பெறும் மாபெரும் ஊர்வலங்களின் (ஐநாவை நோக்கிய ஊர்வலங்கள்) பாதுகாப்புக்குக்கு சுவிஸ் போலீஸார் அதிகளவில் ஈடுபடுவதேயில்லை. பாதைகளை ஒழுங்கு படுத்தும் முக்கிய பணிகளிலிருந்து அனைத்து பணிகளையும் தமிழர்களே முன்னின்று நடத்துமளவுக்கு சுவிஸ் அரசும், போலீஸாரும், மக்களும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிநாடுகளில் இருந்து வந்த மக்கள் கண்கூடாக கண்டிருப்பார்கள்.
எமது தாயகத்தைப் போலவே, அல்லல் பட்டு ஓடி வந்த போது எமக்கு அடைக்கலம் தந்த இந்த நாட்டையும் என்னால் வார்த்தைகளால் கூட மாசுபடுத்த அனுமதிக்க முடியாது.
அன்புடன்
AJeevan</span>

