04-24-2004, 09:51 PM
இளைஞன் Wrote:[quote="இப்பிடி எழுதுற எத்தினையோ பேரக்காணவில்ல. எங்க இவ்வளவு நாம் போனிங்க.
'ஒரு பெட்டச்சியே இது செய்யிறாள், நான் செய்யிறதுக்கு என்ன" என்று சொல்லிக்கொள்வது ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் ஊறிஉறைந்த சில ஆண்கள். --> இதை என்ன சொல்வது? இது ஆணாதிக்க சமூகக் கொழுப்பு!?
இது சமூகத்தின் ஒரு உதாரணம் தான். இதே மாதிரி நிறைய சுட்டிக்காட்டல்களை முன்வைக்கலாம். சமூகப் பிரச்சினைகளை எப்போதும் தமது சுயவிருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று கவனிக்க வேண்டும். கருத்து வைக்கவேண்டும். சுயவிருப்பு வெறுப்புகளின் பெயரில் ஒரு சமூகத்தைக் காயப்படுத்தினால் அந்தக் காயத்தின் கிருமிகள் அதே சமூகத்தில் அங்கத்துவராக இருக்கும் தன்னையும் ஒருநாள் தொற்றிக்கொள்ளும் என்பதை மனிதர்கள் உணரவேண்டும்!

